திங்கள், 24 ஜனவரி, 2022

 சமூக விரோதிகளாகச் சீரழிந்து போன 

போலி மாவோயிஸ்டுகளின் தந்தை யார்?

---------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------------------------

ஆண்ட்ரு வேக்பீல்டு என்பவர் இங்கிலாந்து 

மருத்துவர். இவரின் வயது 65. இவர் ஆங்கில 

மருத்துவராக இருந்தும் தமது கிரிமினல் 

நடத்தை காரணமாக இங்கிலாந்து அரசினால் 

மருத்துவ உரிமம் பறிக்கப் பட்டவர்.


தடுப்பூசி எதிர்ப்பின் தந்தை இவர்தான்.

தட்டம்மை, ருபெல்லா, mumps ஆகிய 

மூன்று நோய்களுக்கான தடுப்பூசியை 

எதிர்த்து இவர் பொய்ப்பிரச்சாரம் செய்தார்.

Measles, Mumps, Rubella ஆகிய மூன்று

நோய்களுக்கான முத்தடுப்பு ஊசியால் 

குழந்தைகளுக்கு ஆட்டிசம் என்ற நோய் 

வருகிறது என்று இழிந்த பொய்யைப் பரப்பினர்.


இவரின் பொய்ப்பிரச்சாரத்துக்கு இரையான 

பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்கு MMR 

தடுப்பூசியைப் போடாமல் விட்டனர். இவ்வாறு 

உலகம் முழுவதும் 15 லட்சம் குழந்தைகள்

தடுப்பூசி போடாமல் நோய்க்கு இரையாகின.



உலகெங்கும் அரசுகளின் டெண்டர் கிடைக்கப் 

பெறாத மருந்து நிறுவனங்கள் தங்களின் 

கைக்கூலிகளை அமர்த்தி தடுப்பூசி எதிர்ப்புப்

பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.


தமிழ்நாட்டில் மாவோயிஸ்டுகள் என்ற பெயரிலும் 

நக்சல்பாரிகள் என்ற பெயரிலும் திரியும் சில 

சமூக விரோதிகள் தடுப்பூசி எதிர்ப்புப்

பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.


தடுப்பூசி போடாமல் ஆயிரக் கணக்கிலும் லட்சக் 

கணக்கிலும் குழந்தைகள் சாக வேண்டும்; அப்படிச் 

செத்தால்தான்  ஆளுகிற அரசுகள் மீது 

மக்களுக்கு வெறுப்பு வரும்; மக்களுக்கு 

அப்படி வெறுப்பு வந்தால்தான் மாவோயிசம்  

வளரும் என்கிறார்கள் இந்த போலி மாவோயிஸ்டுகள்.


சமூக விரோதிகளாகவும் மக்கள் விரோதிகளாகவும் 

சீரழிந்து போன இந்தப் போலிகளை அடையாளம் 

காண்போம். அவர்களின் பொய்ப் பிரச்சாரத்தை 

முறியடிப்போம்.

------------------------------------------------------------------------

பின்குறிப்பு:

MMR தடுப்பூசியால் ஆட்டிசம் என்னும் நோய் 

குழந்திகளுக்கு உண்டாகிறது என்னும் தமது 

போலி ஆய்வை புழுவினும் இழிந்த ஆண்ட்ரு 

வேக்பீல்டு இந்தப் பத்திரிகையில் வெளியிட்டார் 

தெரியுமா? மருத்துவத்துக்கென்றே வெளிவரும் 

லான்செட் பத்திரிகையில் வெளியிட்டார். இந்தப் 

பத்திரிகையின் யோக்கியதை குறித்து 

அடுத்துப் பார்ப்போம்..  

*******************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக