திங்கள், 5 டிசம்பர், 2022

 ஜெயலலிதா நினைவாக!
---------------------------------------
திராவிட இயக்கம் இரு பெரும் தீயசக்திகளை 
தமிழ்நாட்டிற்குக் கொடையாக அளித்துள்ளது.
1) தீயசக்தி கருணாநிதி. 
2) தீயசக்தி சசிகலா. 

இது போக கூத்தாடிப் பயல்களை தெய்வமாக 
வணங்கும் இழிந்த உளவியலை தமிழர்களுக்கு 
உண்டாக்கிவிட்டது திராவிட இயக்கம்.

சினிமாக் கூத்தாடி அண்ணாத்துரை 
சினிமாக் கூத்தாடி கருணாநிதி 
சினிமாக் கூத்தாடி மேனன் 
சினிமாக் கூத்தாடி வி என் ஜானகி 
சினிமாக் கூத்தாடி ஜெயலலிதா 
என்று வரிசையாக சினிமா கூத்தாடிகளே 
தமிழக முதல்வர்களாக இருந்து தமிழ்நாட்டுக்கு 
இழிவு ஏற்படுத்தி உள்ளனர்.

விஜயகாந்த், செபாஸ்டியன் சைமன், கமலஹாசன்,
ஜோசப் விஜய், புழுத்த கூத்தாடி ரஜனி காந்த் 
என்று பலரும் கூத்தாடிகள். இவர்கள் இல்லாமல் 
தமிழக அரசியல் இல்லை என்பது தமிழ்நாட்டின் 
தீராத களங்கம்.

தமிழக அரசியலையே கூத்தாடி அரசியலாக 
ஆக்கியதுதான் திராவிட இயக்கத்தின் சாதனை.
அதுபோக, கருணாநிதி என்னும் தீய சக்தி 
உருவாக்கியுள்ள வாரிசு அரசியல் மிகப்பெரிய 
நச்சு மரமாக நடு ஊரில் நின்று கொண்டிருக்கிறது.

திராவிட இயக்கத் தலைவர்களிலேயே மக்களுக்கு 
ஓரளவேனும் நியாயம் செய்தவர்களாக
இருப்பவர் ஜெயலலிதா மட்டுமே. திராவிட 
இயக்கம் விழுமியங்களாகக் கருதிய சகல 
பிற்போக்குத் தனங்களையும் மயிருக்குச் சமமாக 
மதித்தவர் ஜெயலலிதா.

அ) 69 சத இடஒதுக்கீட்டை ஒன்பதாவது அட்டவணையில் 
இடம் பெறச் செய்தவர் ஜெயலலிதா.
ஆ) பாஜக ஆட்சி நடக்கும்போதே சங்கராச்சாரியை 
கொலை வழக்கில் கைது செய்து சிறையில் 
அடைத்தவர் ஜெயலலிதா. இதன் மூலம் பார்ப்பன 
ஆதிக்கத்தின் கடைசி அடையாளத்தையும்
அழித்து ஒழித்தவர் ஜெயலலிதா. இதையெல்லாம் 
கோழை கருணாநிதியால் கற்பனையில்கூடச் செய்ய 
இயலாது. 

ஆக, திராவிட இயக்கத் தலைவர்கள் மற்றும் 
முதல்வர்களில் ஜெயலலிதா ஒருவர் மட்டுமே 
பரந்துபட்ட மக்களுக்குப் பயன்பட்டவர்.
அடுத்த இடத்தில் வருபவர் மேனன்.
அவ்வளவுதான்!
******************************************* 
    
   
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக