புதன், 11 ஏப்ரல், 2018

தேருக்கு ஏன் முட்டுக்கட்டை போடப்படுகிறது?
==================================================
1) தேர் என்பது பெரும் நிறையைக் (huge mass) கொண்டது.
அதே மெதுவான வேகத்தில் வந்தாலும் அதன் உந்தம்
அதிகமாக இருக்கும். (momentum will be more because of its huge mass).

2) வழி நெடுக பக்தர்கள் தேர் முன் வந்து தேங்காய்
பழம் வைத்து கும்பிடுவார்கள். எனவே அவ்வப்போது
தேரை உடனடியாக நிறுத்த வேண்டியது வரும். 

3) ஆனால் தேரை மனிதக் கைகளால் மட்டும்
நிறுத்தி விட முடியாது. நூறு பேர் சேர்ந்து தேரை வடம்
பிடித்து இழுத்தாலும், அந்த நூறு பேரால் தங்களின்
கைகளைக் கொண்டு தேரை நிறுத்தி விட முடியாது.
தேரை நிறுத்த முட்டுக்கட்டை என்னும் தடையின்
உதவி தேவை.

4) இந்த முட்டுக்கட்டை என்னும் தடை தேரை உடனடியாக
தேவையான இடத்தில் நிறுத்த உதவுகிறது. சாலையின் மீது
தேர் செல்லும்போது, சாலையின் மேற்பரப்பு (surface)
மற்றும் தேர்ச்சக்கரத்தின் மேற்பரப்பு (surface) இரண்டுக்கும்
இடையில் ஒரு தடையாகச் செயல்பட்டு (friction)
தேரை நிறுத்த உதவி செய்கிறது.

5) sudden brake வேண்டுமென்றால், தேரின் இரு புறமும்
உள்ள சக்கரங்களுக்கும் முட்டுக் கட்டை போடுவார்கள். 

7) ஆக தேருக்கு முட்டுக்கட்டை என்பது stopping purpose.

8) அடுத்து நேரான சாலையில் சென்று கொண்டிருக்கும்
தேரை வலது புறமோ இடது புறமோ உள்ள ஒரு
தெருவுக்குத் திருப்ப வேண்டும். இது steering purpose.

9) பெரும்பாலும் குறுகலான தெருக்களில் தேரைத்
திருப்ப வேண்டியது இருக்கும். அப்போதும் முட்டுக்
கட்டை என்னும் தடை தேவைப்படும். தகுந்த விதத்தில்
இத்தடையைப் போட வேண்டும். நான்கு சக்கரங்களில்
இடது புற முன் சக்கரமோ அல்லது வலது புற
முன்சக்கரமோ கூடுதலாகத் திரும்ப வேண்டும்.
இதற்கு ஏற்ற விதத்தில் முட்டுக்கட்டை போடுவார்கள்.

10) முட்டுக்கட்டை போடப்பட்ட தேர் நங்கூரம் பாய்ச்சிய
கப்பல் போல அசையாமல் இருக்கும். ஆக மனிதக்
கரங்களின் செயல்பாட்டால் மட்டும் தேரை நிறுத்த,
திருப்ப இயலாத நிலையில் முட்டுக்கட்டை என்னும்
கருவியின் உதவி தேவைப்படுகிறது.

11) பெரும்பாலும் முட்டுக்கட்டை சாய்வான கோணத்தில்
(inclined angle) போடப்படும்.
------------------------------------------------------------------------------


           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக