வெள்ளி, 6 ஏப்ரல், 2018

அத்வைத நூல் பற்றிய அ கா ஈ அவர்களின் விமர்சனம்!
அ கா ஈஸ்வரன் அவர்களின் கூற்றில் உண்மை இல்லை!
---------------------------------------------------------------------------------------------------
அ கா ஈஸ்வரன்  அவர்கள் கூறுவது:

"தமிழில் வெளிவந்த தத்துவ நூல்களில்
அத்வைதம் பற்றிய நூல்களே அதிகம்.
இடைவிடாமல் தமிழகத்தில் பல பத்தாண்டுகளாக
அத்வைத நூல்கள் கிடைக்கின்றன." (அ  கா ஈஸ்வரன்)

எனது நூலில் கூறியிருப்பது:

"தத்துவ விவாதத்தில் சாங்கியத்தை எதிர்த்து
முறியடித்து விட்டதாக அத்வைதம் பெருமிதம்
கொண்டது. சாங்கியத்திற்கும் அத்வைதத்திற்கும்
நடந்த இந்த முக்கியமான தத்துவப்போர் குறித்து
எந்த நூலும் தமிழில் இல்லை; எழுதப்படவும் இல்லை.

சாங்கியம் மட்டுமல்ல, பூர்வ மீமாம்சை உள்ளிட்ட
பிற தத்துவப் பிரிவுகளுடன் அத்வைதம் நடத்திய
ஆழமான எந்த விவாதம் பற்றியும் தமிழில் ஒரு
நூலும் இல்லை; எழுதப்படவும் இல்லை."
(மார்க்சியப் பார்வையில் அத்வைதம்..பக்கம்-39....இளங்கோ)

ஈஸ்வரன் அவர்கள் கூறுபவை தத்துவ நூல்கள் அல்ல.
அவை அத்வைதப் புகழாரங்கள். ராமகிருஷ்ணா
மடத்தினரால், தபோவனப் பிரசுராலயத்தால்
அச்சிடப்பட்ட குப்பைகள். ஆதிசங்கரர் நிகழ்த்திய
அற்புதங்கள், அவரைப் பற்றிய கட்டுக்கதைகள்,
பிற்காலத்தில் யார் யாரோ எழுதி ஆதிசங்கரரின்
தலையில்  கட்டிய இடைச்செருகல்கள்! இவற்றைத்தான்
தத்துவ நூல்கள் என்று ஈஸ்வரன் குறிப்பிடுகிறார்.

இவர் குறிப்பிடும் நூலுக்கென்று மார்க்சிய நோக்கில்
எந்த விதமான  தத்துவார்த்தப் பெறுமதியும் கிடையாது.

தோழர் ஈஸ்வரனுக்கு எனது கேள்விகள்!
----------------------------------------------------------------------
1)ஆதிசங்கரர் சாங்கியத்துடன் நடத்திய விவாதம்
பற்றிய நூல் தமிழில் உள்ளதா?

2)ஆதிசங்கரர் பூர்வ மீமாம்சகரான மண்டன மிஸ்ரருடன்
நடத்திய விவாதம் பற்றிய நூல் தமிழில் உள்ளதா?

3) ஆதிசங்கரர் பௌத்தர்களுடன் நடத்திய விவாதம்
பற்றிய நூல் தமிழில் உள்ளதா?

இந்தக் கேள்விகளுக்கு இல்லை என்ற பதிலை
என்னுடைய நூலில் .கூறியுள்ளேன். இருக்கிறது
என்பது உங்களின் பதிலானால், நல்லது, மகிழ்ச்சி!
 ஆதாரம் தருக!
-------------------------------------------------------------------------------------
தொடரும்
***********************************************************




   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக