சனி, 7 ஏப்ரல், 2018

அருவருப்பாக இருக்கிறது!
-----------------------------------------------
அத்வைதத்தை ராமானுஜர் வீழ்த்தி விட்டார் என்பது
வரலாறு. இந்த வரலாற்றைச் சொன்னால்,
இளங்கோ ராமானுஜரின் தத்துவத்தைச் சிறப்பிக்கிறார்
என்று பொய் சொல்கிறார். இந்தப் பொய்யை
அம்பலப் படுத்தியதும் பதில் கூறாமல் திசை
திருப்புகிறார். குறைந்தபட்ச நேர்மை கூட
இல்லாத இவருடன் எவரும் வாதம் செய்ய இயலாது.

மானமுள்ள ஒருவனிடம் எவ்வளவு வேண்டுமானாலும் 
போராடலாம்; ஆனால் மானங்கெட்ட ஒருவனுடன்
போராட முடியாது என்று தந்தை பெரியார் கூறினார்.
அது உண்மை என்பதை ஈஸ்வரனுடன் விவாதம்
நடத்தும்போது உணர முடிகிறது.

விஷிஷ்டாத்வைதத்தை ஆதரித்தோ சிறப்பித்தோ
ஒரு வரி, ஒரே ஒரு வரி என்னுடைய நூலில்
இருந்தால் எவர் வேண்டுமானாலும் சுட்டிக்
காட்டலாம். அதை விட்டு இழிந்த பொய்களைச்
சொல்லும் ஈஸ்வரனின் நடத்தைஅருவருப்பாக
இருக்கிறது.

மஞ்சத் துண்டு

விஷிஷ்டாடவைத்தத்தைச் சிறப்பித்து நான் எழுதிய
ஒரே ஒரு வரி இருந்தால் தயவு செய்து சுட்டிக் காட்டுங்கள்
ஈஸ்வரன் அவர்களே! வெட்டிப் பேச்சால் பயனில்லை.
நீங்கள் வேலைவெட்டி இல்லாதவர். ஏனென்றால் நீங்கள்
மார்க்சிய நடைமுறையில் இல்லாதவர். உங்களுக்கு
உள்ள நேரம் எனக்கு இல்லை.

எளிய அப்பாலைத் தத்துவத்தை தூக்கிப் பிடிக்கும்
வாக்கியம் எது என்பதைச் சுட்டிக் காட்டுங்கள்.


என்னுடைய நூலில் பக்கம்-39, 40,41களில்
விஷிஷ்டாத்வைதத்தை தூக்கிப் பிடிக்கும்
வாக்கியம் எது? தயவு செய்து கூறுக.
மேற்கூறிய பக்கங்களில் வரலாறு .கூறப்படுகிறது.
அதில் விஷிஷ்டாத்வைதத்துக்கு  ஆதரவான
என்னுடைய கருத்து என்று .எதுவும் கிடையாது.
நீங்கள் பிறழ உணர்ந்து  கொண்டுள்ளீர்கள்.


இப்ராஹிம் லோடியை பாபர் வென்றார் என்று
எழுதினால், எழுதியவர் பாபரைத் தூக்கிப் பிடிக்கிறார்
என்று கருதுவது அடிமுட்டாள்தனம். அது போலவே  
அத்வைதத்தை ராமானுஜர் வென்றார் என்று
எழுதினால், அது ராமாநுஜரைத் தூக்கிப்
பிடிப்பது ஆகாது. ஆனால் ஈஸ்வரனின் புரிதல்
இப்படிப்பட்ட புரிதலாகத்தான் உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக