ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

ஊதுகிற சங்கை ஊதி வைப்போம்!
உலக வரலாற்றில் இடம் பெற்ற பேரணி!
------------------------------------------------------------------------
அறிவியலுக்கு எதிரான சிந்தனைப் போக்குகள்
தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றுள்ள நிலையில்,
ஒரு மாபெரும் அறிவியல் பேரணியை சென்னையில்
14.04.2018 சனி காலையன்று வெற்றிகரமாக
நடத்தியுள்ளோம். Breakthrough Science Society என்ற
இடதுசாரி அறிவியல் அமைப்பு இப்பேரணியை
ஒழுங்கமைத்து நடத்தியது.

திரளான பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள்
அறிவியல் துறையினர், அறிவியல் ஆர்வலர்கள்
விஞ்ஞானிகள், அறிவியல் பேராசிரியர்கள் உள்ளிட்ட
பலர் இப்பேரணியில் பங்கேற்றனர்.

பேரணி நெடுகிலும் மெகாபோன் மூலம் பேரணியின்
நோக்கங்களை முழங்கிக் கொண்டே வந்தார்
கல்பாக்கம் அணு விஞ்ஞானி வெங்கடேசன் அவர்கள். 

பேரணியின் முடிவில் அறிவியல் சார்ந்தோர்  
உரையாற்றினர். வெயில் ஏறிக்கொண்டே
வருவதாலும், குழந்தைகளை வெயிலில் நிறுத்த
இயலாது என்பதாலும் ஒவ்வொரு பேச்சாளரும்
மூன்று நிமிட அளவிலேயே பேசினர்.

நியூட்டன் அறிவியல் மன்றத்தின் சார்பாக
தோழர் இளங்கோ உரையாற்றினார்.

அன்று மாலை ஆளுநரைச் சந்தித்து கோரிக்கை
மனு வழங்கப்பட்டது. Breakthrough Science Societyயின்
தமிழகத்து தலைவர் ஜார்ஜ் ஜோசப் அவர்கள்
பிற அறிவியலாளர்களுடன் இணைந்து இந்த
மனுவை வழங்கினார்.

கடந்த ஆண்டு 2017ல் இதே போல் பேரணி நடத்தினோம்.
பேரணிக்குப் பின்னர்தான் CSIR ஊழியர்களுக்குச்
சம்பளம் போட்டனர். இது உடனடி வெற்றியாக
அமைந்தது.

இந்தப் பேரணியின் நோக்கங்கள் வெற்றிபெற
மக்களும் சமூகமும் தங்களின் ஆதரவை
அறிவியலுக்குத் தர வேண்டும்.

உலகம் முழுவதும் இதே தேதியில் அறிவியல்
பேரணி நடைபெற்றது. இதன் விளைவாக
சென்னைப் பேரணி உலக வரலாற்றில் இடம் பெற்றது.
**********************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக