சனி, 7 ஏப்ரல், 2018

(4) மனப் பிராந்தியா? வேறு பிராந்தியா?
அத்வைதம் நூலின் விமர்சனத்துக்கு எனது பதில்!
கோடீஸ்வரர் ஈஸ்வரனுக்கு பதில்!
-----------------------------------------------------------------------------------------
"ராமானுஜரின் விஷிஷ்டாத்வைதம் இளங்கோவுக்கு
சிறப்பாகத் தோன்றுகிறது"  என்று கூறுகிறார்
அ கா ஈஸ்வரன்.

இது ஈஸ்வரனின் மனப்பிராந்தி!
இருப்பினும் வேறு  பிராந்தியாக இல்லாதவரை
நமக்கு மகிழ்ச்சியே!

அத்வைதத்தை ராமானுஜர்
வீழ்த்தினார் என்பது  வரலாற்று உண்மை. இந்த
உண்மையை எனது நூலில் கூறியுள்ளேன்.

விசிஷ்டாத்வைதம் சிறப்பானதாக எனக்குத்
தோன்றுகிறது என்பதற்கு ஏதேனும் ஒரு வரி
ஆதாரத்தை ஈஸ்வரன் அவர்கள் என்னுடைய
நூலில் இருந்து காட்டட்டும். காட்ட முடியுமா?

ஏன் இவ்வளவு இழிந்த பொய்?

அத்வைதத்தை வீழ்த்திய விஷிஷ்டாத்வைதமும்
துவைதமும் என்று ஒரு அத்தியாயம் எனது
நூலில் உள்ளது. (பக்கம் 39-41)

மீண்டும் கூறுகிறேன். ஈஸ்வரன் அவர்கள்
விஷிஷ்டாத்வைதத்தை ஆதரிக்கும் ஒரு
வாக்கியத்தை எடுத்துக் காட்ட வேண்டும்.
காட்ட இயலவில்லை என்றால் தன்னுடைய
தவறை ஒப்புக் கொள்ள வேண்டும்.
-------------------------------------------------------------------
பின்குறிப்பு: நேரமின்மை காரணமாக ஈஸ்வரன்
அவர்களின் மனப்பிராந்தியின் அனைத்து
விளைவுகளுக்கும் மொத்தமாகப் பதிலளிக்க
இயலவில்லை.

ஈஸ்வரன் அவர்கள் நேரத்தைப் பொறுத்தமட்டில்
கோடீஸ்வரர். அவருக்கு நேரம் எப்போதுமே
ஸ்டாக் இருக்கும்.  மார்க்சிய நடைமுறையில்
இல்லாதவ அவருக்கு நேரம் எப்போதுமே மிஞ்சுவது
இயற்கைதானே.
***************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக