செவ்வாய், 17 ஏப்ரல், 2018

தேவதாசி முறையை ஒழித்தது யார்?
--------------------------------------------------------------
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தெலுங்கு தேவதாசி குடும்பத்தை சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

டாக்டர் முத்துலட்சுமியின் கணவர் சுந்தர ரெட்டி நீதிக் கட்சி அமைச்சரவையில் அமைச்சராகவும், பிரதம அமைச்சராகவும் இருந்த கூர்ம வெங்கட் ரெட்டி நாயுடுவின் சகோதரி மகன் ஆவார்.

தேவ தாசி முறையை ஒழிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெரிதும் பாடுபட்டார். தேவதாசி முறையை ஒழிக்க போராடினார்.

இந்திய துணைக் கண்டத்தில் சென்னை மாகாணத்தின் முதல் சட்ட மன்ற உறுப்பினர்-முதல் அவைத் துணைத் தலைவர்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி ஒழிப்பு முறைக்கான மசோதா கொண்டு வந்த போது, எதிர்ப்பும், ஆதரவும் பலமாக இருந்தது.

எதிர்த்தவர்கள் பெரும்பாலும் பார்ப்பனராகவே இருந்தனர்.

டாக்டர் முத்துலெட்சி ரெட்டி தேவதாசி ஒழிப்பிற்காக சட்ட முன்வரைவை கொண்டு வருவதற்கு ஈ.வெ.ரா. பின்புலமாகவும், பின் பலமாகவும் இருந்ததாக திராவிட இயக்கத்தினர் பொய் பொய்யாக பரப்பி வருகிறார்கள்.

ஆனால், டாக்டர் முத்துலட்சுமி எழுதிய சுயசரிதை என்ற நுாலில் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் குறித்த விவரங்கள் நிறையவே தரப்படுகிறது.

ஆனால், எங்கேயும் ஈ.வெ.ரா. பெயர் குறிப்பிடப்படவில்லை!!

காந்தியார் தான் தனக்கு உத்வேகத்தை கொடுத்தார் அந்த உத்வேகத்தில் தான் தான் செயல்பட்டேன். என்று பல இடங்களில் கறிப்பிட்டுள்ளார்.

அப்படியானால், திராவிட இயக்கங்கள் ஈ.வெ.ரா.விற்கு பரிவட்டம் கட்டி தமிழனை ஏய்க்க பார்க்கிறது.

பொய்யிலே பிறந்து! பொய்யிலே வளர்ந்து!
பொய்யிலே வீழும்ஈ.வெ.ரா.- திராவிடம்
------------------------------------
உலக மகளிர் தின விழா தி.மு.க. மகளிர் அணி 04.03.2018 அன்று ஸ்டாலின் முன்னிலையிலும், கனிமொழி தலைமையிலும் நடத்தியது. அந்நிகழ்ச்சியில் பேசிய ரேணுகா சௌத்திரி எம்.பி. அவர்கள் முதல் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி தி.மு.க.வில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று பேசினார். 

தி.மு.க. தொடங்கியதே 1949, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி சென்னை மாகாண மேலவை உறுப்பினர் ஆனது 1926. 

தொடங்காத கட்சியில் எப்படி தேர்ந்தெடுக்கப்பட முடியும்????????????????

சிலர் சொல்லலாம் தி.மு.க. இல்லை என்றால் என்ன, அதன் தாய் கட்சியான நீதிக் கட்சியில் சட்ட மன்ற உறுப்பினர் ஆனார் என்று அதுவும் உண்மையில்லை!!!

ஆங்கிலேய கவர்னர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியை சட்ட மன்ற உறுப்பினர் ஆக்கினார்.

இதுதான் உண்மை...........
1926-ஆம் ஆண்டில், பெண்களும் வேட்பாளராகப் போட்டியிடலாம் என்று சட்டமியற்றப்பட்டிருந்ததால் சென்னை, வங்காளம், ஐக்கிய மாநிலங்களில் பெண்கள் பலரும் தேர்தல் களத்தில் குதித்தனர்.

சென்னையில் உள்ள பெண்கள் கழகம், முத்துலட்சுமி அம்மையாரைச் சென்னைச் சட்டமன்றத்தின் மேல் சபை உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்று தமிழகக் கவர்னரிடம் விண்ணப்பித்துக் கொண்டது.

இது தொடர்பான துாதுக்குழு ஒன்றும் கவர்னரைச் சந்தித்து ஆதரவு தெரிவித்து, அம்மையார் அவர்கள் சட்ட மன்ற மேல்சபை உறுப்பினராக வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியது.

சிந்தித்துச் சீர்துாக்கிப் பார்த்து இந்தக் கோரிக்களுக் கெல்லாம் கவர்னர் செவிமடுத்தார். முத்து லட்சுமி அம்மையாரைச் சட்டமன்ற மேல்சபை உறுப்பினராகவும் நியமித்தார். பெண்டிரினத்தின் பெரு வெற்றியாகவே இது கருதப்பட்டது.

இந்த வகையிலம் கூடச் சென்னை மாநிலச் சட்ட மன்றமே மற்ற மாநிலச் சட்டமன்றங்களுக்கு வழி காட்டியாக இருந்தது.

முதன் முதல் பெண்களுக்கும் வாக்குரிமை உண்டு என்று அறிவித்ததும், முதன் முதல் ஒரு பெண் சட்டமன்றத்தில் இடம் பெற்றதும் இங்கேதான் நிகழ்ந்தது.

(நுால்.. மகளிர் மனம் கவர்ந்த முத்து!

ஆசிரியர் பி.எல்.ராஜேந்திரன் பக்கம் 92, 93)

பொய்யிலே பிறந்து!! பொய்யிலே வளர்ந்து!! பொய்யிலே வீழும் தி்ராவிடம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக