வெள்ளி, 20 செப்டம்பர், 2024

 சுதா சேஷய்யன் நியமனம்: வரவேற்போம்!
 ---------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------
டாக்டர் சுதா சேஷய்யன் MBBS,MS அவர்கள் 
செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்தின் 
துணைத் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
இந்நிறுவனத்தின் தலைவராக முதல்வர் 
மு க ஸ்டாலின் இருந்து வருகிறார்.

மு க ஸ்டாலின் தலைவராக இருப்பது நிறுவனத்திற்கு 
கெளரவம்: அவ்வளவே! ஆய்வுப் பணிகளுக்கு 
அவரால் பயன் இல்லை. இந்நிலையில் 
துணைத் தலைவராக சுதா சேஷையன் 
அவர்களின் நியமனம் ஆய்வுப் பணிகளுக்குத் 
தலைமை வழங்கும்.

எம்ஜியார் மருத்துவப் பல்கலைக் கழகத்தின்
துணை வேந்தராகத் திறம்படப் பணியாற்றி 
நற்பெயர் ஈட்டியவர் சுதா சேஷையன்.

சுதா சேஷையன் ஆன்மிகப் பேச்சாளர்தானே,
தமிழறிஞரா என்று கேட்டுத் 
தம் அறியாமையை வெளிப்படுத்தி உள்ளனர் சிலர்.   

கிருபானந்த வாரியார் ஆன்மிகப் பேச்சாளராகத்தானே 
இருந்தார்; அவர் தமிழறிஞர் அல்லர் என்று 
கூற இயலுமா?

பன்னிரு திருமுறை நாலாயிரம் திவ்வியப்  பிரபந்தம்   
கம்ப ராமாயணம் வில்லி பாரதம் திருவிளையாடல் 
புராணம் என்று சமய இலக்கியங்களில் ஆழ்ந்த 
வாசிப்பு உடையவர் சுதா சேஷையன்.

தமிழ் மட்டுமே (Tamil only) கற்ற படிப்பாளிகளை  
தமிழறிஞர்களாகக் கருதுவதும், தமிழ்ப் புலமை 
மிக்க கணிதம் இயற்பியல் மருத்துவம் போன்ற 
பிற துறை வல்லுநர்களை தமிழறிஞர்களாக
ஏற்க மறுப்பதும் கன்சர்வேட்டிவ் மனப்பான்மை 
ஆகும். இத்தகைய பத்தாம் பசலிகள்தாம்  
சுதா சேஷையன் தமிழறிஞரா என்று கேட்கிறார்கள். 

பத்துப் பாட்டையும் எட்டுத் தொகையையும் 
படைத்த சங்கப் புலவர் குழாம் தமிழ் ஒன்லி   
படிப்பாளிகளை மட்டும் கொண்டதல்ல..
கணியன் பூங்குன்றன், மருத்துவன் தாமோதரன்,
மதுரைக் கணக்காயனார் மகன் என்று பல்துறை 
அறிஞர்களைக் கொண்டது.

கடந்த காலங்களில் தமிழ் மற்றும் தமிழ் 
சார்ந்த நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட  
நியமனங்ககள்  அறிவியலில் இருந்து துண்டித்துக் 
கொண்டவையாகவே இருந்தன.  இந்த நிலைமை 
லேசாக மாறத்  தொடங்கி இருப்பதன்  அடையாளமே 
சுதா  சேஷையனின் நியமனம்.

அறிவியலின் பிரதிநிதியாக செம்மொழித் தமிழ் ஆய்வு 
நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் 
சுதா சேஷையன்  அவர்களின் நியமனத்தை 
நியூட்டன் அறிவியல் மன்றம் வரவேற்கிறது.  

 
  
 
       
 

வியாழன், 19 செப்டம்பர், 2024

இந்தப் பதிவில் உள்ளது ஒரு செய்தி.
2004 வரை இந்தியாவில் செம்மொழி 
என்பதே கிடையாது. முதன் முதலில் 2004ல் 
மன்மோகன்சிங் தமிழை செம்மொழி ஆக்கி 
உத்தரவு பிறப்பித்தார். பின்னர் 2005ல் 
சமஸ்கிருதம் செம்மொழி ஆக்கப் பட்டது.

தொடர்ந்து 2008ல் கன்னடமும் பின்னர் 
தெலுங்கு  மலையாளம் ஒடிஷாவும் செம்மொழி 
ஆக்கப் பட்டன. இவ்வாறு ஆறு மொழிகளை 
செம்மொழி ஆக்கியவர் மன்மோகன்சிங்.
2000 ஆண்டுத் தொன்மை  இருந்தால்தான் 
செம்மொழி என்ற வரையறுப்பைத் திருத்தி 
1000 ஆண்டுத் திண்மையே போதும் என்று 
சட்டம் செய்து செம்மொழி இலக்கணத்தையே 
கொச்சைப் படுத்தியவர் மன்மோகன்சிங்.

2014ல் மோடி ஆட்சிக்கு வரும்போது ஆறு 
செம்மொழிகள் இருந்தன.  மோடி தம் பங்கிற்கு 
மராத்தி மொழியை செம்மொழி ஆக அறிவித்து 
விடக்கூடும் என்று அஞ்சினேன் நான். ஆனால் 
மோடி அதைச் செய்யவில்லை.

இந்தியாவில் செம்மொழிகளாக ஆறு மொழிகள் 
இருக்கின்றன என்ற செய்தி நான் சொல்லித்தான் 
பலருக்கும் தெரியும். நான் சொல்லாமல் 
இருந்தால் எத்தனை பேருக்குத் தெரியும்?
மனச்சாட்சி  பதில் சொல்லட்டும்.       .  


தெய்வசுந்தரம் நயினார் 


சைகை மொழியில் திருக்குறளைக் கொண்டு 
வருகிறது செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனம்.
வரவேற்போம். காது கேளாதோர் வாய் பேசாதோர்
பயன் பெறுவர்.  


ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

2009ல் அன்றைய பிரதமர் மன்மோகன்சிங்கின் 
வீட்டில் நடந்த இஃப்தார் விருந்தில், அன்றைய 
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே ஜி 
பாலகிருஷ்ணன் பங்கேற்றார்.   











































காதல் யாத்திரைக்கு  பிருந்தாவனமும் 
கற்பகச் சோலையும் ஏனோ?
வெல்வழி மாது ஏ அருகினில் இருந்தால் 
வேறே சொர்க்கமும் ஏனோ? 


மன்மோகன்சிங்கின் வீட்டில் நீதியரசர்   சாவித்ரி கண்ணன் அவர்களுக்கு 
கே ஜி பாலகிருஷ்ணன், வெளியுறவுச் 
செயலர் நிருபமா ராவ்.


2009 செப்டம்பரில் அன்றைய காங்கிரஸ் 
பிரதமர் மன்மோகன்சிங்கின் வீட்டில் 
இஃப்தார் விருந்து நடைபெற்றது. அதில் 
அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி 
கே ஜி பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
பிரதமரின் வீட்டுக்கே தலைமை நீதிபதி 
நேரடியாகச் சென்று பங்கேற்றபோதும் 
அதை யாரும் விமர்சிக்கவில்லை.

இன்று 2024ல் தலைமை நீதிபதி சந்திரசூடடின் 
வீட்டில் நடந்த விநாயகர் பூஜையில் பிரதமர் மோடி 
பங்கேற்றதால் ஒன்றும் குடிமுழுகிப் 
போய்விடவில்லை.

சாமி கும்பிடுகிற விஷயத்தில் எல்லாம் 
மூக்கை நுழைக்க வேண்டாம். மோடி அரசின் 
பொருளாதாரக் கொள்கைகளை சமரசம் இன்றி 
எதிர்த்துப் போராடுங்கள்.Don't waste energy over 
trivial matters.   

திருமூலரின் திருமந்திரம் மருத்துவ நூலோ 
அறிவியல் நூலோ அல்ல. அது சைவ சித்தாந்த நூல்.
பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக 
திருமந்திரம் உள்ளது. இதை அறிவியல் நூல் என்று 
கருதுவது பேதைமையுள் எல்லாம் பேதைமை ஆகும்.


திமுக கூட்டணியின் வில்லனாகிப் போன 
திருமாவளவன். அமைச்சரவையில் பங்கு 
கேட்பதா என்று உதயநிதி கடுங்கோபம்! 

தமிழின் பருவகாலங்கள்: இளவேனில் முதுவேனில் 
கார் கூதிர் முன்பனி பின்பனி. மீதி உள்ள காலங்களைக் 
கூறுக. 


வெட்டிப் பேச்சு வேண்டாம்; அருவருப்பைத்
தருகிறது.
தமிழர்களுக்கு அறிவியல் அறிவு இல்லை என்று 
எங்கும் யாரும் கருதவில்லை. கரிகாலன் கட்டிய 
கல்லணையும் சிதம்பரம் நடராசர் கோவிலும் 
தமிழர் அறிவியலின் ஆகச்சிறந்த வெளிப்பாடுகள்.

பத்துப்பாட்டும் எட்டுத் தொகையுமான சங்க 
இலக்கியங்கள் எழுதப்பட்ட காலத்தில் (
கிமு 2100-கிபி 1800) தமிழில் எழுதப்பட்ட  
அறிவியல் நூல் எது? அதன் பெயர் என்ன?

இதுதான் கேள்வி. நூலின் பெயர் என்ன?
பெயர் தெரிந்தால் கூற வேண்டும்.
நூல் எழுதப்படவில்லை என்றால் அதையாவது 
 கூற வேண்டும். 
  
.
.

வியாழன், 12 செப்டம்பர், 2024

கட்டுரைகள் எழுதப்பட்டு உள்ளன. பல்லாயிரக் கணக்கான 
நூல்கள் எழுதப் பட்டு உள்ளன.


குவாண்டம் தியரியை அடுத்து வந்த ஸ்டிரிங் தியரி 
(string theory0 குறித்து ஆங்கிலத்தில் ஒரு லட்சம் 
கட்டுரைகள் உள்ளன. தமிழில் எத்தனை கட்டுரை 
உள்ளது? ஒரே ஒரு கட்டுரைதான் உள்ளது.
அது நான் எழுதியது (அறிவியல் ஒளி ஆண்டு மலரில் 
 எழுதப்பட்ட 10 பக்கக்கட்டுரை)

ஆக தமிழால் தனித்து இயங்க முடியவில்லை 
என்று உணர்கிறோம்.

ரோமத்துக்குச்   ரோமமும் 


8 மாதம் கழித்து எழுதுகிறேன். டயாலிசிஸ் செய்து 
கொண்டு வாழ்கிறேன். என்னுடைய அறிவியல் பதிவுகளைப் 
படியுங்கள்; பரப்புங்கள். புறக்கணிக்காதீர்கள்.  


nanri annachchi.

நன்றி அண்ணாச்சி.

72 வயதில் உறுப்பு மாற்றுக்கு நான் 
தயாராக இல்லை. முடிந்த வரை வாழ்ந்து 
செத்துப் போகவே விரும்புகிறேன்.


முன்பெல்லாம் ஒரு பதிவை 15 நிமிடங்களில் 
எழுதி விடுவேன். இப்போது முக்கால் மணி 
நேரம் ஆகிறது.


buoyancyயம் கூட ஓர் gravitational forceதான்.
70 கிலோகிராம் எடையுள்ள நீங்கள் 
தண்ணீரில் மூழ்கிக் குளிக்கும்போது
உங்கள் எடை மீது கீழ்நோக்கிச் 
செயல்படுவதே buoyancy.


Buoyancyஐ இங்கு கணக்கில் கொள்ள 
வேண்டியதில்லை. ஆற்றில் குளிப்பவன் 
என்றால் ஆற்றங்கரை ஓரம் நிற்பவன் என்றே 
பொருள் கொள்ள வேண்டும். 

சரியான விடையும் விளக்கமும்:
----------------------------------------------------------
விடை: ஆற்றில் குளிப்பவர் மீதான 
புவியீர்ப்பு விசையே அதிகமாகச் செயல்படும் 
விசை.

விளக்கம்: புவியீர்ப்பு விசை உயரத்தைப் பொறுத்து
மாறும்.( gravitational force varies with altitude). அதிகமான 
உயரத்தில்புவியீர்ப்புவிசை குறையும்.

We know, acceleration due to gravity, g = GM/r^2
Also, acceleration to gravity at height h = GM/(R+h)^2
This clearly shows that g at a height h is lesser 
than g at the surface of the earth.
*******************************



நன்றி அண்ணாச்சி.


முன்குறிப்பு:
இது போன்ற கட்டுரைகள் சோவியத் ஒன்றியத்தில் 
பொருள்முதல்வாதப் பிரிவில் வைக்கப் பட்டிருந்தன.
குருச்சேவ், பிரஷ்னேவ் காலத்திலும் இது தொடர்ந்தது. 
எல்டசின், கோர்பசேவ் காலத்தில் பொருள்முதல்வாதப் 
பிரிவிலிருந்து அகற்றப் பட்டது.
-------------------------------------------------------------------

சரியான விடை:


நெல்லின் கொள்ளளவு: 1/3 x b^2 x  h 
= 1/3 x 15x 15 x 10= 75 கன அடி.
    

 
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க.


wireless hotspot என்றால் வயர்லெஸ் நன்கு செயல்படும் 
இடம் என்று பொருள். Transmission Reception உள்ளிட்ட 
அனைத்து வயர்லெஸ் activitiesம் நன்கு செயல்படும் 
இடம் என்று பொருள். Hot spots என்பவை டவர் 
கட்டப்பட்ட இடம் என்று பொருள்படும்.

எனவே இதற்கு, தமிழில், வினையுள் என்று 
சொல்லாக்கம் செய்துள்ளேன்.
வினையுள்  = வினை உள்ள இடம் 
wireless hotspot =  வயர்லெஸ் வினையுள்.
(கம்பியில்லா வினையுள் என்றும் சொல்லலாம்.)

வினையில் = noun. 
பன்மைக்கு கள் விகுதி சேர்க்கவும்.          இடங்கள் 

hot spot என்பதற்கு சுட்டிடம் 
(சுட்டு+ இடம் = சுட்டப்பட்ட இடம்)
என்று பயன்படுத்தி வந்தேன். அது 
பொருள் பொதிந்ததாக இல்லை.
எனவே வினையுள்ளை உருவாக்கினேன்.

நான் படைப்பதனால் என் பெயர் இறைவன்
என்கிறார் கண்ணதாசன். அவர் சினிமாப 
பாட்டுக்களை படைத்தார்.

நான் அறிவியல் கலைச்சொற்களைப் படைக்கிறேன்.
அதனால் நானும் இறைவனே.
    


நான் 30 ஆண்டு காலத்திற்கும் மேலாக 
வயர்லெஸ்சில் வேலை பார்த்தவன்.
வயர்லெஸ் எனக்கு அத்துப்படி.

விக்கிப்பீடியாவில் வயர்லெஸ் பற்றி என்ன எழுதி 
இருக்கிற என்று பார்த்து, அதில் இருந்து 
தமிழ்ச் சொல்லை உருவாக்க வேண்டிய அவலம்
எனக்கில்லை. அது இகழ்ச்சிக்கு உரிய செயல்.   


என்றபோதிலும் சுட்டிடம் என்ற சொல்லின் எளிமை 
வினையுள் என்ற சொல்லில் இல்லை என்பதையும் 
உணர்த்தே  இருக்கிறேன். 
   

நான் wire, wireless இரண்டிலும் வேலை 
பார்த்தவன். இது வயர்லெஸ் யுகம்.
எல்லாவற்றையும் வயர்லெஸ்சாக
மாற்றிக் கொண்டு வருகிறோம்.

எனவே வயர்லெஸ் அறிவுடைய, வயர்லெஸ் 
திறன் கொண்ட வேலையாட்கள் அவசியம்.

   


       



  








செவ்வாய், 10 செப்டம்பர், 2024

இவர்தான் கெப்ளர்!
------------------------------ 
ஜோஹன்னஸ் கெப்ளர் (Johannes Kepler 1571-1630)
ஜெர்மன் தேசத்தின் வானியல் அறிஞர். சூரிய 
மண்டலத்தில் உள்ள கோள்கள் இயங்கும் 
விதிகளைக் கண்டறிந்தவர் கெப்ளர்.

Kepler's laws of planetary motion என்று மூன்று விதிகள் 
உள்ளன. அவற்றைப் படித்திருக்க வேண்டும்.  
XI Physics பாடப்புத்தகத்தில் உள்ளது. படியுங்கள்.
******************************************  

கெப்ளரின் முதல் விதி!
-----------------------------------
கெப்ளரின் விதிகளை புரிந்து கொள்ள 
கணித அறிவு தேவை. XI Maths புத்தகத்தை 
எடுத்து, அதில் Analytical Geometry பகுதியில் 
conics அத்தியாயத்தில் Parabola, Ellipse, Hyperbola
பற்றிப் படிக்கவும். எல்லிப்ஸ் பற்றிய அறிவைப்
பெறாமல் கெப்ளரின் விதிகளை புரிந்து 
கொள்ள இயலாது.

எனக்கு உடல்நலம் மேம்பட்டால், கெப்ளரின் விதிகள் 
குறித்து வகுப்பு எடுக்கிறேன்.
*****************************************************


மூடநம்பிக்கையை பிற்போக்குச் சிந்தனையை 
முறியடிக்க ஒரே வழி  அறிவியலைக் கற்பதும் 
அறிவியலைப் பரப்புவதுமே. வேறு குறுக்கு வழி இல்லை.



        

யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்!
-------------------------------------------------------
அவரைச் சிலுவையில் அறைந்து கொன்று விட்டார்கள்.
அவரும் செத்துப் போனார். மூன்று நாள் கழித்து 
செத்துப் போனவர் உயிரோடு வந்து விட்டார்.   
இதை உயிர்த்தெழுதல் (resurrection) என்கிறார்கள். 

அதெப்படி உயிர்த்தெழ முடியும்? செத்துப்போன ஆள் 
எப்படி ஐயா உயிரோடு வர முடியும்?
இது மோசடி அல்லவா? பித்தலாட்டம் அல்லவா?

செத்துப் போனவர் உயிர்த்தெழுந்து வந்தார் என்று 
நம்புவது உலக மக்க மூட நம்பிக்கை அல்லவா?
************************************************ 
  

திங்கள், 9 செப்டம்பர், 2024

திருக்குறளைப் படித்தாயிற்று. போதும். இனி 
Astronomyஐப் படி. 8 கோள்களில் ஒவ்வொன்றையும் 
விஸ்தாரமாகப் படி. கெப்ளரின் விதிகளைப் படி.   த் 

எட்டுக் கோள்களையும்  அறிவியல் மட்டுமே 
மூடநம்பிக்கையை விரட்டுவது அறிவியலே. 


மொத்த இந்தியாவிலும் நியூட்டன் அறிவியல் 
மன்றம் மட்டுமே மூடநம்பிக்கைகளை 
முறியடிப்பதில் சிறப்பான பங்கை வகிக்கிறது.
மறுக்க முடியுமா?


மகாவிஷ்ணுவும் ஆசிரியர் சங்கரும் கெப்ளரின் 
விதிகள் பற்றி ஒரு இழவும் தெரியாத மூடநம்பிக்கைப் 
பேர்வழிகள். எனவே மாணவிகள் முன்பு சண்டையிட்டுக் 
கொண்டனர்.
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு 
உற்றோமே யாம் ஆவோம் உமக்கே நாம் ஆட்செய்வோம்.
(மறுபிறவி குறித்து திருப்பாவையில் ஆண்டாள்)  

கடவுள் வாழ்த்து என்ற முதலாவது 
அதிகாரத்தில் மட்டுமே மறுபிறவி 
பற்றிச் சொல்லப் பட்டுள்ளது 
என்பது உண்மையல்ல. மறுபிறவி 
மற்றும் கர்மா குறித்து 
நூற்றுக் கணக்கான குறட்கள் உள்ளன.  யோவான் 

இன்பத்துப் பாலில்கூட மறுபிறவி 
வருகிறது.
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றனம்
கண்ணிறை நீர்கொண் டனள்.   

கடவுள் பற்றிய கொள்கைப் பிரகடனத்தை
நியூட்டன் அறிவியல் மன்றம் வெளியிட்டுள்ளது.
படியுங்கள்! பின்பற்றுங்கள். 


மறுபிறவி குறித்து பைபிள்!  பைபிளில் 






உனக்கு ஓம்ஸ் லா (0hm's law) தெரியுமா? பைனாமியல் 
தீரம் தெரியுமா? Pressureக்கு என்ன யூனிட் தெரியுமா?
தெரியாது. உன்போன்ற ஆட்களே மகாவிஷ்ணுவிடம் 
ஏமாறுகிறார்கள். 
 


10 சதுர செ.மீ பரப்புள்ள காகிதத்தின் மீது கூர்மையான 
பென்சிலை 5 நியூட்டன் விசையுடன் செங்குத்தாகச் 
செலுத்தினால் காகிதத்தின் மீதான அழுத்தம் எவ்வளவு?    ல் கூரிய 


Pressureக்கு என்ன யூனிட் என்று கேட்டு 
பதில் தெரியாத பையன்களை முட்டி போட 
வைக்கிறார் இசக்கிமுத்து அண்ணாச்சி.
இடம்: மோர்மடம், வீரவநல்லூர்.  

ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

கருப்பு என்பது நிறமல்ல!
கருப்புச் சட்டை அணிவது மூடநம்பிக்கையே!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------
15 ஆண்டுகளுக்கு முன்பு! " கருப்புத்தான் எனக்குப்
பிடிச்ச கலரு" என்ற சினிமாப பாட்டு தமிழ்நாட்டில் 
எல்லா இடங்களிலும் ஒலித்துக் கொண்டிருந்தது. 

முதல் முறை இந்தப் பாடலைக் கேட்டதுமே எனக்குத் 
தூக்கி வாரிப் போட்டது. கருப்பு என்று ஒரு நிறம் 
கிடையாது என்கிறது அறிவியல். இல்லாத ஒரு 
நிறத்தை எடுத்துக் கொண்டு எனக்குப் பிடிச்ச கலரு 
என்று எப்படிப் பாட முடியும் என்று ஆச்சரியப்பட்டேன் 
நான்.

நான் நினைப்பது போல் வேறு எவரேனும் நினைக்கிறார்களா 
என்று அறிய விரும்பினேன். அப்போது என் மகள் 
அங்கிருந்தாள். அவள் physics படிக்கிறவள். எனவே 
அவளிடம் கேட்டேன். அவள் என்னை ஆமோதித்தாள்.
கருப்பு என்பது நிறமல்ல என்று தனக்குத் தெரியும் 
என்று அவள் குறிப்பிட்டாள். நான் திருப்தி அடைந்தேன்.
எனது ஸ்டேட்மென்ட் corroborate ஆகி விட்டது.

இயற்பியலைப் பொறுத்தமட்டில் நிறம் என்பது 
அலைநீளம் ஆகும் (colour means wave length). சிவப்பு 
நிறத்துக்கு ஒரு அலைநீளம்; ஊதா நிறத்துக்கு ஒரு 
அலைநீளம்.  அலைநீளம் 400 nm முதல் 450 நானோ
மீட்டர் வரை இருந்தால் அது ஊதா.அலைநீளம் 650
நானோமீட்டர் முதல் 750 நானோமீட்டர் வரை 
இருந்தால் அது சிவப்பு. இந்த நிறங்கள் அனைத்துமே 
visible lightன் ரேஞ்சுக்குள்  அடங்குபவை. Visible light
அல்லாத பிற ஒளியை நம்மால் பார்க்க இயலாது.

மேற்கூறிய நிறங்கள் அனைத்தின் அலைநீளங்களை 
நான் பரிசோதனை செய்து அறிந்தவன் (MSc Physucs 
experiments). என் அளவுக்கு பரிசோதனைகளை நீங்கள் 
செய்திருக்காவிட்டாலும், இயற்பியல் மாணவர்களே 
பட்டதாரிகள், உலகப் பிரசித்தி பெற்ற சோடியம் 
லாம்பின் அலைநீளம் கண்டு பிடிக்கும் 
பரிசோதனையை நீங்கள் கண்டிப்பாகச் 
செய்திருப்பீர்கள்தானே! நினைவு படுத்திப் பாருங்கள்.

வாசக அன்பர்களே,
கருப்பு ஒரு நிறமல்ல என்று நான் போகிற போக்கில் 
சொல்லவில்லை; காசுவலாகச் சொல்லவில்லை.
ஏராளமான பரிசோதனைகளைச் செய்து பார்த்த
பின்னரே சொல்லுகிறேன். கருப்பு நிறத்துக்கு 
அலைநீளம் கிடையாது. அலைநீளம் இல்லை 
என்பதால், கருப்பு ஒரு நிறமே கிடையாது.

அப்படியானால் கருப்பு என்பது என்ன?
கருப்பு என்பது நிறமின்மை; எனவே ஒளியின்மை.
(black = absence of light). இதுதான் இயற்பியல்; 
இதுதான் உண்மை! 
*********************************************** 
பின்குறிப்பு:
கருப்பு உடைகள் அதிகமாக வெப்பத்தை 
உட்கிரகிக்கும். தமிழ்நாடு போன்ற உஷ்ணப் 
பிரதேசங்களுக்கு கருப்பு உடைகள் 
பொருத்தமற்றவை. மேலும் உளவியல் ரீதியாக 
கருப்பு என்பது துக்கம், சோகம், தாழ்வு மனப்பான்மை 
ஆகியவற்றைக் குறிக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்து 
பச்சை நிறம்தான் செழிப்பின் அடையாளம்.

செழித்து வளர்ந்த பயிரை பச்சை நிறம் குறித்தால் 
கரிந்து தீய்ந்து போன பயிரையே கருப்பு நிறம் 
குறிக்கும். ஏனெனில் கருப்பு என்பது absence of light.   
****************************************************

  
     

  
      
   
.     
சரியான விடையும் விளக்கமும்!
--------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------
Mass வேறு! Weight வேறு.
mass = நிறை.
weight = எடை   

நியூட்டனின் இயற்பியலில் mass மாறாதது.
வெயிட் என்பது gravityஐப் பொறுத்து மாறும். 

எனவே பூமியில் எனது நிறையம் (mass)
சந்திரனில் எனது நிறையும் ஒன்றே; மாற்றம் எதுவும் 
இல்லை.அதே 66 கிலோகிராம்தான்.  

ஆனால் பூமியில் எனது எடை (weight)  66 கிகி.
சந்திரனில் ஈர்ப்பு விசை குறைவு. பூமியின் 
ஈர்ப்பில் ஆறில் ஒரு பங்குதான் சந்திரனை ஈர்ப்பு.
எனவே 66ல் ஆறில் ஒரு பங்கு 11. எனவே சந்திரனில் 
எனது எடை 11 கிகி.
---------------------------------------------------------------  
திருக்குறள் நகல் எரிப்புப் போராட்டம்!
ஆதரவு தாரீர்!
------------------------------------------------------------- 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------
முற்பிறவி இப்பிறவி மறுபிறவி என்று பிறவிகள் 
இருக்கின்றன. ஏழு பிறவிகள் உண்டு என்கிறது 
திருக்குறள்.

முற்பிறவியில் செய்த பாவத்திற்கு இந்தப் 
பிறவியில் தண்டனை கிடைக்கும் என்றும் 
இதை ஊழ்வினைப்பயன் என்றும் கூறுகிறது குறள்.

அதே போல், இந்தப் பிறவியில் பாவம் செய்தால் 
அடுத்த பிறவியில் தண்டனை உண்டு என்கிறது
குறள். இதை ஊழ் என்கிறது குறள். 

இந்த ஊழே சக்தி வாய்ந்தது. இதற்கு மிஞ்சிய சக்தி 
யாருக்கு உண்டு என்கிறது குறள்.
இதோ குறள்!

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.

இந்தக் குறள் பிற்போக்கானது. ஊழ் என்று எதுவும் 
இல்லை. பிறவிகளில் முற்பிறவி, மறுபிறவி என்றெல்லாம் 
எதுவும் கிடையாது.

இந்தக் குறளை மாணவர்களுக்குக் கற்பித்தால் 
அவர்களிடம் பிற்போக்குச் சிந்தனை வளரும்.

எனவே பிற்போக்கான இந்தத் திருக்குறளின் நகலை,
அதாவது காகிதத்தில் மையால் எழுதப்பட்டு உள்ள 
இந்தக் குறளின் நகலை  நியூட்டன் அறிவியல் மன்றம்
தீ வைத்து எரிக்க விரும்புகிறது.

மனிதன் மட்டுமின்றி விலங்குகள் பறவைகள் 
புழு பூச்சிகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் 
ஒரு பிறவி மட்டுமே உண்டு என்கிறது அறிவியல்.

எனவே அறிவியலுக்கு எதிரான பிற்போக்குத் 
திருக்குறளின் காகித நகல் எரிப்புப் போராட்டத்தை 
நடத்த இருக்கும் எங்களின் சீரிய முன்னெடுப்பை 
ஆதரிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
**********************************************

 

 
  

   
  


மகாவிஷ்ணுவால் அறிவியலுக்கு பாதிப்பா?
-----------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------------------
கோழையும் முட்டாளுமான மகாவிஷ்ணுவின் 
பேச்சால் அறிவியலையும் பொருள்முதல்வாதத்தையும் 
எள்முனை அளவுகூட பாதிப்புக்கு உள்ளாக்க 
முடியாது.பொருள்முதல்வாதம் அவ்வளவு 
பலவீனமானது அல்ல. அறிவியலா விஸ்வரூபம் 
எடுத்து நிற்கிறது.

போலி நாத்திகமான பெரியாரியம் மகாவிஷ்ணுவைக் 
கண்டு அலறும்; அஞ்சும்.

உலகில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் அறிவியல் 
பரிசோதனைகள் நாத்திகத்தை உயர்த்திப் 
பிடிக்கின்றன. ஒரு மணி  நேரச் சொற்பொழிவில்    
மகாவிஷ்ணு போன்ற முட்டாள்களால் அறிவியலுக்கு  
பாதிப்பை ஏற்படுத்தி விட முடியாது.

நியூட்டன் அறிவியல் மன்றம் மகாவிஷ்ணுவை 
இன்ன பிற ஆசாமிகளை இடது கையால் 
சமாளிக்கும். கடவுள் இல்லை என்று நிரூபித்தவர்கள் 
நாங்கள். 

பள்ளிகளில் கிறிஸ்துவ மத மூட நம்பிக்கைகள்
தங்கு தடையின்றிப் பரவி வருகின்றன. அவற்றை 
எதிர்க்க ஆள் கிடையாது.   

சி  ஐ ஏவின் பட்ஜெட்டில் பணம் ஒதுக்கப்பட்டு 
இந்தியாவில் கிறிஸ்துவ மூடநம்பிக்கைகளைப் 
பரப்பி வருகிறார்கள். எனவே திராவிடக் கசடுகளும்  
போலி முற்போக்குகளும்  கிறிஸ்துவப் பிற்போக்கை 
எதிர்க்க மாட்டார்கள்.

இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் ஷரத்து 51A(h)
நாட்டின் குடிமக்கள் அறிவியல் மனப்பான்மையை 
வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.
இது குடிமக்களின் கடமை ஆகும்.

அரவியலைக் கற்காமல் அறிவியல் மனப்பாங்கு 
ஏற்படாது. எனவே அறிவியலைக் கற்போம்.

அறிவியல் கற்காத மூடர்கள்தான் மகாவிஷ்ணுவைக் 
கண்டு அஞ்சுகிறார்கள். குவாண்டம் தியரி , 
ஸ்டிரிங் தியரி என்று அனைத்தையும் கரைத்துக் குடித்த 
நாங்கள் ஏன் மகாவிஷ்ணுவைக் கண்டு அஞ்ச வேண்டும்? 

மகாவிஷ்ணுவுக்கு de Movir's  theorem தெரியுமா?
பைனாமியல்  தீரம் தெரியுமா?
a plus b whole squared  என்றால் என்ன என்றாவது 
தெரியுமா?

இப்படி ஒரு இழவும் தெரியாத மகாவிஷ்ணுவை 
அறிவியல் வழிப்பட்ட பொருள்முதல்வாதிகள்
ஏன் பொருட்படுத்த வேண்டும்? மகாவிஷ்ணுவால் 
அறிவியலுக்கு  அணு அளவு பங்கமும் ஏற்படுத்த 
முடியாது.

மாடு முட்டிக் கோபுரங்கள் சாய்வதில்லை! 
மாணிக்கம் கூழாங்கல் ஆவதில்லை! 
மகாவிஷ்ணுவால் அறிவியலுக்கு பங்கமில்லை!
அனுதினமும் அறிவியல் மேலே  செல்லாமல் இல்லை!
************************************************
  
அவர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு 
போடப்பட்டு உள்ளது. நான்கு இபிகோ
சட்டப் பிரிவுகளில் வழக்கு. சாதி மதம் 
இனம் பற்றிப் பேசி கலவரம் விளைத்தது 
என்று வழக்கு. அத்தோடு 
மாற்றுத் திறனாளி உரிமைக்குப் பங்கம்  
என்ற பிரிவின் கீழும் வழக்கு.

ஊனம் பற்றி அவர் பேசியது மறுபிறவியின் 
பாற்பட்டதே. மறுபிறவிக் கோட்பாட்டில் 
இருந்து துண்டித்துக் கொண்டு அவர் ஊனம் 
பற்றிப் பேசவில்லை.   

முற்பிறவியில் செய்த பாவத்திற்காகவே 
கோவலன் கொல்லப் பட்டன் என்கிறது சிலப்பதிகாரம்.
(ஊழ்வினை உருத்து வந்தூட்டும்) 

போலி நாத்திகமான பெரியாரியம் மகாவிஷ்ணு 
போன்ற முட்டாள்களைக் கண்டு அஞ்சுகிறது.
மெய்யான நாத்திகமான பொருள்முதல்வாதம்
மகாவிஷ்ணு போனறவர்களை இடது கையால்  
கனக்குத் தீர்க்கும்.

சனி, 7 செப்டம்பர், 2024

ரகுராம் ராஜன் IAS அதிகாரி அல்ல. அவர் UPSC 
தேர்வே எழுதவில்லை. பிராமணரான ரகுராம் ராஜனை 
ரிசர்வ் வாங்கி ஆளுநர் ஆக்கினார் மன்மோகன்சிங். வ    வங்கி 



கைத்தல நிறைகனி பாட்டை மனப்பாடமாக 
ஒப்பிக்கச் சொல்லி, முடியாத பையன்களின்
முதுகுத் தொலியை உரிக்கிறார் இசக்கிமுத்து  அண்ணாச்சி    வீரவநல்லூரில் 


enna seyya v



என்ன செய்ய வேண்டும்?
பேச்சாளர் மகாவிஷ்ணு பிரச்சினைக்குத் 
தீர்வு என்ன?
------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------
காதல் மேலிட்ட காதலன் காதலியிடம் 
சொல்லுகிறான்: இந்தப் பிறவியில் உன்னை 
ஒருபோதும் பிரிய மாட்டேன்.

காதலி மகிழ்ச்சி அடைய வேண்டும் அல்லவா!
ஆனால் அவளோ அழுகிறாள். அப்படியானால் 
அடுத்த பிறவியில் பிரிந்து விடுவதாகத்தானே 
அர்த்தம் என்று எண்ணி அஞ்சுகிறான். 

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றனம் 
கண்நிறை நீர்கொண்ட னள்.

திருக்குறள்  உலகின் ஞான நூல்களில் ஒன்று.
அது பிறவிகளை அங்கீகரிக்கிறது. இப்பிறவி,
முற்பிறவி.மறுபிறவி என ஏழு பிறவிகளைக் 
கூறுகிறது.

உலக இலக்கியங்கள் அனைத்தும் மறுபிறவி 
பற்றிப் பேசுகின்றன. உலகின் மதங்கள் அனைத்தும் 
மறுபிறவிக் கோட்பாட்டை ஏற்கின்றன.

ஒருவர் மறுபிறவி இருக்கிறது என்று நம்புகிறார் 
என்றால் அது குற்றம் அல்ல. அதற்கா அவரைக்கைது 
செய்வது தவறு.

மறுபிறவியை நம்புகிறவனைக் கைது செய்வது 
என்றால், சாமி கும்பிடுகிறவனையும் கைது 
செய்ய வேண்டும் அல்லவா?

அப்படிக் கைது செய்ய ஆரம்பித்தாள் தமிழ்நாட்டில் 
நான் உட்பட வெகுசிலரத் தவிர மீதி அனைவரும் 
கைதாக வேண்டியது இருக்கும்.

என்ன செய்ய வேண்டும்?
-----------------------------------
ஒரு பள்ளியில் ஒரு பேச்சாளர் வந்து பிற்போக்காகவும் 
அறிவியலுக்கு எதிராகவும் பேசிவிட்டுச் சென்றால் 
நாம் என்ன செய்ய வேண்டும்?

அடுத்த வாரம் அந்தப் பள்ளியில் இன்னொரு கூட்டம் 
போட வேண்டும். அதில் ஒரு அறிவியல் அறிஞராய் 
பேச வைக்க வேண்டும். அவர் வாழ்வியலுக்கான 
அறிவியல் கருத்துக்களைப் பேச வேண்டும். 
பிற்போக்குப் பேச்சாளர் முன்வைத்த அறிவியலுக்கு 
எதிரான கருத்துக்களைக் கண்டிக்க வேண்டும்.
இதுதான் தீர்வு!
**************************************************
பின்குறிப்பு:
பெரியாரிய போலி நாத்திகத்தின் வீழ்ச்சியே 
மகாவிஷ்ணு போறவர்களின் வளர்ச்சிக்குக் காரணம்.  
***************************************************










 

வெள்ளி, 6 செப்டம்பர், 2024

 உணவின் ருசி அதைச் சாப்பிடும்போதுதான் தெரியும்!
--------------------------------------------------------------------------------------
இப்படி ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு.
The proof of the pudding is in the eating! பிரசித்தி பெற்ற 
இந்தப் பொன்மொழியை மார்க்சிய மூல ஆசான் 
எங்கல்ஸ் அடிக்கடி மேற்கோள் காட்டியுள்ளார்.  

CBSE பாடத்திட்டம் உயர்ந்ததா? தமிழ் மாநிலப்
பாடத்திட்டம் உயர்ந்ததா என்று கேள்விகள் 
எழும்பி உள்ளன. இதற்கு விடை காண்பது எளிது.

இரண்டு பாடத்திட்டங்களையும் சேர்ந்த 
பத்தாம் வகுப்பு கணிதப் பாடப் புத்தகங்களை 
(X Std Maths) எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 
அல்ஜிப்ராவில் Quadratic equations அத்தியாயத்தை 
எடுங்கள்.

இரண்டு பாடப்புத்தகங்களையும் சாப்பிடுங்கள்.
ஒப்பிட்டுப் பார்த்து உண்மையை அறியுங்கள்.
Proof of the pudding is in the eating! 

இரு பாடத்திட்டங்களின் கணக்குகளைச் செய்யுங்கள்.
எது உயர்ந்தது என்று முடிவு செய்யுங்கள்.

அடுத்து Trigonometry அத்தியாயத்தை எடுங்கள்.
இரண்டு பாடத்திட்டங்களின் பாடங்களையும் 
படியுங்கள். கணக்குகளைச் செய்யுங்கள்.
எது உயர்ந்தது என்று தெரிய வரும்.
வேறு குறுக்கு வழி எதுவும் இல்லை.

பாடத்திட்டங்களின் உயர்வு தாழ்வை முடிவு செய்ய 
உங்களுக்கு அறிவியல் கல்வி அவசியம். அதாவது 
கல்லூரிக் கல்வி அவசியம். அப்போதுதான் 
Maths Physics பாடங்களைப்  படிக்கவும், கணக்குகளைச் 
செய்யவும் ஒப்பிடவும் முடியும்.

Arts group degreeகளை வைத்துக் கொண்டு அறிவியல் 
பாடங்களை மதிப்பிட இயலாது.

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி MSc Physics படித்தவர்.
எனவே சுலபத்தில் பாடத்திட்டங்களை மதிப்பிட்டு 
விடுகிறார். அவரின் கூற்று 100க்கு 100 சரியே!
CBSE பாடத்திட்டம் உயர்ந்தது!
தமிழ்நாடு பாடத்திட்டம் தரக்குறைவானது.
************************************************

   
.          
 

வியாழன், 5 செப்டம்பர், 2024

 அரங்கநாயகம் கல்வி அமைச்சராக இருந்தபோது 

PUC ஒழிக்கப்பட்டு 11,12 வகுப்புகள் பள்ளிகளில் 

கொண்டு வரப்பட்டன.





நான் கடந்த 25 ஆண்டு காலத்திற்கும் மேலாக 
CBSE, Matriculation, TN State Board பாடத்திட்டங்களின் 
மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்தவன்.
(Maths and Physics).

என் பிள்ளைகள் இருவரும் LKG முதல் 10ஆம் வகுப்பு 
வரை CBSE பாடத்திட்டத்தில்தான் படித்தவர்கள்.

CBSE எவ்வாறு உயர்ந்ததாக இருக்கிறது என்றும் 
TN State Board  எவ்வாறு தரக்குறைவானதாக இருக்கிறது 
என்றும் புரிந்து கொள்ள வேண்டுமெனில்,
இரு தரப்பு பாடங்களையும் ஒப்பிட்டு அறியலாம்.



பியூரெட்டில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் (KMnO4).
Eye levelல் வைத்து இதைச் சரியாக அளக்க 
lower meniscus, upper meniscus இவ்விரண்டில் எதைப்  பார்க்க வேண்டும்?  
    

     

 

செங்கோண முக்கோணம் குறித்த பித்தகோரஸ் தேற்றம் ஒரு  GOAT (Greatest Of All Time) ஆகும். அப்படியானால் பித்தகோரசை ஒரு சனாதனி 
என்பானா அந்த லூசுப்பையால்?    பயல்? 

பட்டிமன்றம் நடத்தி சாலமன் பாப்பையா தீர்ப்பு 
வழங்காமலேயே உள்ளங்கை நெல்லிக்கனியாய்த் 
தெரிவது "ஸ்டேட் போர்டு சிலபஸ் மட்டமானது; CBSE உயர்வானது" என்ற உண்மை!    ஆனது!


சரவணா பவனிலும் ல் காப்பி கிடைக்கிறது;

சரவண பவனிலும் காப்பி கிடைக்கிறது; கையேந்தி 
பவனிலும் காப்பி கிடைக்கிறது.TN ஸ்டேட் போர்டு 
சிலபஸ் என்பது கையேந்தி பவன் காப்பி. CBSEதான் 
சரவணபவன் காப்பி!     றி 

25 ஆண்டுக்கும் மேல் CBSE, ஸ்டேட் போர்டு,
மெட்ரிகுலேஷன் என்ற மூன்று சிலபஸிலும் 
Maths, Physics டியூஷன் எடுத்த நான்
கூறுகிறேன்: CBSE is the best.     



15 ஆண்டுகளுக்கு முன்பான XII Physics (TN State Board)
பாடப்புத்தகத்தில் E= mc^2 derivation  உண்டு. நான் பலமுறை 
பாடம் எடுத்திருக்கிறேன். ஆனால் அதே நேரத்தில் 
CBSE XII Physics பாடப்புத்தகத்தில் மேற்கூறியய derivation 
கிடையாது. நான் இரண்டு பாடத்திட்டத்திலும் 
XII Physics டியூஷன் எடுத்தவன்.

Portions சற்று அதிகமாக வைக்கப் பட்டுள்ளது 
என்பதைக் கொண்டு தரத்தைத் தீர்மானிக்க இயலாது.
இங்கிலாந்து, பிரான்சு நாடுகளின் XII Physics பாடப் 
புத்தகங்களையும் ஒப்பிட்டால் பல  ஒற்றுமைகளைக் 
காண இயலும். Quantum of lessons can't determine the standard.
There are other serious factors.    


பாடத்திட்டத்தில் ஒரு பாடத்தை வைத்து,
அதை மாணவனுக்கு கற்றுக் கொடுத்து 
அவன் பெற்ற அறிவை சோதிக்கும்போது 
தமிழ் மாநிலப் பாடத்திட்டம் வெறுமனே 
மேலெழுந்தவாரியாக மட்டுமே சோதிக்கிறது. 
அதாவது knowledgeஐ சோதிப்பதுடன் நின்று
விடுகிறது.

ஆனால் CBSE மாணவனின் அறிவைச் சோதிக்கையில் 
பின்வரும் நான்கு விஷயங்களை கணக்கில் 
கொள்கிறது.
1) Knowledge 
2) Understanding 
3) Application 
4) Skill