சனி, 29 ஜூன், 2019

முகிலன் எங்கே?
---------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
----------------------------------------------
இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலைக் கேட்கின்றேன்

வண்ண மலர்களின் அரும்பானாள்-உன்
மனதுக்குக் கரும்பானாள்
இன்று அலைகடல் துரும்பானாள்
என்று ஒரு மொழி கூறாயோ!  

முகிலன் குறித்த CB CID விசாரணை சரியான திசை வழியில்
சென்று கொண்டிருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம்
கூறியுள்ளது.

முகிலன் தானே ஏற்படுத்திக்கொண்ட தலைமறைவில்
(self exile) இருக்கிறார் என்று CB CID கருதுவதாகத்
தெரிகிறது. உண்மையும் அதுதானே!

இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலைக் கேட்கின்றேன்.

நடு இரவினில் விழிக்கின்றாள்-உன்
உறவினை நினைக்கின்றாள்
அவள் விடிந்தபின் துயில்கின்றாள்
எனும் வேதனை கூறாயோ!

மக்களின் வரிப்பணத்தில் முகிலனைத் தேடும் வேலை
நடந்து கொண்டிருக்கிறது. கோடிக்கணக்கில் பண
விரையம் ஏற்பட்டுள்ளது.

கற்பழிப்புக் குற்றவாளி முகிலன் உடனடியாகச்
சரண் அடைந்து விடுவது நல்லது.
***************************************************




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக