புதன், 12 ஜூன், 2019

MBBS படிப்பில் பொருளாதார நலிவுற்ற  முற்பட்ட ஏழை மாணவருக்கு 
பிரிவினருக்கு 10 சத ஒதுக்கீடு அளித்தால்,
25 சத இடங்கள் அதிகரிக்கும்!
மருத்துவ கவுன்சில் அறிவிப்பு! 

அரசமைப்புச் சட்டத் திருத்தப்படி, முற்பட்ட ஏழை
மாணவருக்கு  10 சத இட  ஒதுக்கீடு அளித்தால்,
BC, MBC, SC, ST மாணவர்களுக்கு 10 சத இடங்கள்
குறையும் அல்லவா? இதை ஈடுகட்ட 10 சதம்
இடங்களை அதிகரிக்க வேண்டும்.

ஆனால் இந்திய மருத்துவக் கவுன்சில் 25 சத
இடங்களை அதிகரிக்கலாம் என்று கூறி உள்ளது.

இதன்படி, தமிழ்நாட்டில் ள்ள 23 அரசுக் கல்லூரிகளில்
MBBS இடங்கள் மட்டும் = 3250.
இதில் 25 சதம் = 812 இடங்கள்.
எனவே 812 MBBS இடங்களை அதிகரித்துக் கொள்ளலாம்.
அப்போது மொத்த இடங்கள் = 4062 என்றாகும்.

அமைச்சர் விஜயபாஸ்கர் என்ன செய்யப் போகிறார்?
    
தகவல் ஆதாரம்: Times of India, Chennai, 12 June 2019,
first page, bottom.

812 அரசு இடங்கள் அதிகரிக்கும். 812 இடங்கள் என்பது
8 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதற்குச் சமம்.
இது சாமானியமான விஷயம் அல்ல. தமிழ்நாட்டில்
8 மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பது என்றால்
அதற்கு இன்னும் 10 வருடங்கள் ஆகும்.

ஆனால் நடப்புக் கல்வி ஆண்டிலேயே 812 இடங்கள்
அதிகரிக்கும் என்றால், அது மாபெரும் வரப் பிரசாதம்
என்று நியூட்டன் அறிவியல் மன்றம் கருதுகிறது.

  
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக