சனி, 1 ஜூன், 2019

இந்தி மொழி தேவையில்லை!
இந்தியைத் திணிக்க முடியுமா?
------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------
ஒரு மொழி என்ற அளவில் இந்தி எவ்விதத்திலும்
உயர்ந்த மொழி அல்ல. அது இந்திய மண்ணில்
இயற்கையாகத் தோன்றி வளர்ந்த மொழியும் அல்ல.
அது செயற்கையாக உருவான கலப்பட மொழி.
உண்மையில் இந்தி ஒரு வந்தேறி மொழி ஆகும்.
இலக்கிய வளம் எதுவும் இந்தியில் கிடையாது.

மேலும் சமகாலப் பொருள் உற்பத்தியில் இந்திக்கு
இடமில்லை. இந்திய சமூகத்தில் பொருள் உற்பத்தியில்
ஆங்கிலமே கோலோச்சுகிறது. எனவே பொருள்
உற்பத்தியில் இடம் பெறாத இந்தியால் பயன்
எதுவும் விளையப் போவதில்லை.

டாக்டர் அம்பேத்கார் இந்தியை ஆட்சி மொழியாகக்
கொண்டு வருவதை விரும்பவில்லை. அவர்
சமஸ்கிருதத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாகக்
கொண்டு வர முயன்று தோல்வி அடைந்தார்.

இந்தியாவில் இந்தி ஆட்சி மொழி ஆனதற்குக் காரணம்
மகாத்மா காந்தியே. மகாத்மா காந்தியின் பிடிவாதமும்
அவரின் ஒருபக்கச் சார்புமே இந்தியை ஆட்சி மொழி
ஆக்கின.

தமிழ்நாட்டில் இங்குள்ள ஆட்சியாளர்களின் நயவஞ்சகத்
திட்டத்தால் தமிழ் சவலைப் பிள்ளை ஆனது. தமிழின்
இடத்தில் ஆங்கிலத்தை அமர்த்தி விட்டார்கள்
தமிழக ஆட்சியாளர்கள்.

இந்தி என்றதுமே கட்டாயம் என்றும் இந்தித்திணிப்பு
என்றும் கூடவே சொல்லப் படுகிறது. இதில் உண்மை
இல்லை.

புதிய கல்விக் கொள்கையின் மூலம் எதையும் யாரும்
கட்டாயப் படுத்த முடியாது. அரசின் பல்வேறு
கொள்கைகளைப் போன்றதே புதிய கல்விக்
கொள்கையும்.

நாட்டு மக்களைக் கட்டாயப் படுத்தும் தகுதியும்
உரிமையும் கொண்டது இந்திய அரசமைப்புச் சட்டமே.
இந்தியைத் திணிப்பது என்றாலும், இந்தியைக்
கட்டாயப் படுத்துவது என்றாலும் அதை இந்திய
அரசமைப்புச் சட்டம் மட்டுமே செய்ய முடியும்.
புதிய கல்விக் கொள்கையால் செய்ய இயலாது.

எனவே இந்தித் திணிப்பு, கட்டாய இந்தி
என்பதெல்லாம் தற்குறித் தனமான கிணற்றுத்
தவளைகளின் வறட்டுக் கூச்சலே தவிர, உண்மை இல்லை.

வறட்டுக் கூச்சல் போடுவதற்குப் பதில் தமிழைப்
படியுங்கள்!

1) நான்மணிக்கடிகையை இயற்றியது யார்?
2) வினையாலணையும் பெயருக்கு ஓர்
எடுத்துக்காட்டு தருக.         
இவ்விரு கேள்விகளுக்கும் வாசகர்கள் விடையளிக்க
வேண்டும்.
*******************************************************
எதையும் ஒட்டியோ வெட்டியோ இங்கு எழுதவில்லை.
மற்ற இடத்தில் பேசுவது போல இங்கு பேசக்கூடாது.
முழுப் பகுதியையும் தாங்கள் இங்கு வெளியிடலாம்.
  
சாண எரிவாயு!  மருதுபாண்டியன்
----------------------
சாணம் ஓர் எரிபொருள். சாணத்தை எரிக்கும்போது
மீத்தேன் கிடைக்கும். கூடவே கார்பன் டை ஆக்ஸைடு
ஹைட்ரஜன்  சல்பைடு (H2S) ஆகியவையும் கிடைக்கும்.
1970களில் தமிழகத்தில் சாண எரிவாயு (gobar gas)
அறிமுகப் படுத்தப்பட்டது. ஆனால் போதிய மாடுகள்
இல்லாததால், தேவையான சாணம் கிடைக்காததால்
இத்திட்டம் கைவிடப் பட்டது. கிராமங்களில்
மாடு வளர்ப்போர் சாணத்தை வயலுக்கு உரமாகப்
போடுவதால், எரிவாயுக்குத் தேவையான சாணம்
கிடைக்காமல் போனது.

முன்பு சாணத்தை வறட்டியாகத் தட்டி
எரிபொருளாகப் பயன்படுத்தினர். அது
அந்தக் கால டெக்னாலஜி.

இன்று சாணத்தை Biogas ஆகப் பயன்படுத்துகின்றனர்.
இது இன்றைய  டெக்னாலஜி!



எனினும் சாண எரிவாயு சுற்றுச் சூழலை மாசுபடுத்தும்.
எல்லா விதமான ஹைட்ரோ கார்பனும் சூழலை
மாசு படுத்தவே செய்யும்.



பழைய செய்தி இது. இது பொய் என்று
ஆயிரம் முறை நிரூபிக்கப் பட்டு உள்ளது.
விளக்கம் அளிப்பதன் மூலம் இவர்களைத்
திருத்த இயலாது. இவர்கள் வேண்டுமென்றே
திட்டமிட்டு தமிழகத்தில் மட்டும் இப்பொய்ச்
செய்தியை மீண்டும் மீண்டும் பரப்பி
வருகின்றனர். தூங்குபவனை எழுப்பலாம்.
தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப இயலாது.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் இந்தியத் தேர்தல்
ஆணையத்தின் EVM எந்திரங்களை இதுவரை
யாரும் HACK பண்ணவில்லை. யாரும் TAMPER
பண்ணவில்லை; பண்ணவும் முடியாது. இது
ஆயிரம் முறை நிரூபிக்கப்பட்ட ஒன்று.

அறிவியல் ஒளி இதழில் நான் எழுதிய நீண்ட
கட்டுரையைப் படிக்கவும்.

இளைய ரத்தம் வேண்டும் என்று கேட்டோம்!
இருமல் சத்தம் அல்லவா கேட்கிறது!
சோனியா (72) காங்கிரஸ் தலைவர் ஆனார்!  நாடாளுமன்ற)   ரா

செய்தி வந்து ஒரு மணி நேரமாகி விட்டது.
சோனியா காங்கிரஸ் தலைவராக
(நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவராக)
தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
கடந்த முறை மல்லிகார்ஜுன கார்கே இருந்தார்.

நிறுவ

நிருபர்: இவ்வளவு இள வயதில் தயாநிதி மாறனுக்கு
அமைச்சர் பதவியா?
கலைஞர்: அவருக்கு இந்தி தெரியும்!
இந்தி எதிர்ப்பு லட்சணம்!


கலைஞர் அப்படிச் சொன்னது அந்தக் காலக்
கட்டத்தில் எல்லா ஏடுகளிலும் செய்தியாக வந்தது.
It has become a legend and story.
இது அனைவரும் அறிந்த உண்மை ஆகும்.
இது முழுப் பூசணிக்காய்! எவராலும் மறைக்க முடியாது.
தாங்கள் எவ்வித நேர்மையும் இன்றி பொய் கூற
வேண்டாம் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

thayaanithi maaranukku inthi nanku theriyum

தயாநிதி மாறனுக்கு இந்தி நன்கு தெரியும்.
அவருக்கு இந்தி  தெரியும் என்பது அவரின்
துறையில் வேலைபார்த்த எங்களுக்கும் நன்கு
தெரியும். இங்கு வந்து பொய்களைப் பரப்ப
முனைய வேண்டாம்.

போலியான நேர்மையற்ற இந்தி எதிர்ப்பு இங்கு
அம்பலப் படுத்தப் படுகிறது. கமிஷன் கொடுத்தால்
இந்தி என்ன எத்தியோப்பிய மொழியைத் திணித்தால்
கூட அதை ஏற்றுக் கொண்டு விடும் பிழைப்புவாதத்
தலைவர்கள் இங்கு உள்ளார்கள். அவர்களுக்கு
வக்காலத்து வாங்க முற்படுவது தமிழ் இனத்துக்குத்
தீங்கு விளைவிக்கும்.


மாலன் நாராயணன்


இங்கு குட்டி முதலாளித்துவக் கருத்துக்களை
எழுதுவதற்கு கருத்து சுதந்திரம் வழங்கப்
படுவதில்லை. எமது பதிவுகள் IQ > 110
உடையவர்களுக்காக எழுதப் படுகின்றன.
அவரவர்கள் இங்கு வந்து தங்களின் அறியாமையை
வெளிப்படுத்த அனுமதி இல்லை. அருள்கூர்ந்து
கவனத்தில் கொள்க. தந்தை பெரியாரின்
மொழிக்கொள்கை தெளிவானது. அது இந்தி
ஆங்கிலத்துக்கு ஆதரவானது; தமிழுக்கு எதிரானது.
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக