வெள்ளி, 31 மே, 2019

இத்தேர்தலில் (2019) பாஜக தோற்று விடும் என்றே
நாடெங்கும் உள்ள குட்டி முதலாளித்துவம் கருதியது.
மக்களுடன் தொடர்பு இல்லாமலும், சமகால சமூக
அறிவியலைப் புரிந்து கொள்வதில் துளியும் அக்கறை
இல்லாமலும் தன் அகநிலை விருப்பத்தையே
(subjective wish) மக்களின் தீர்ப்பாகக் கருதிய குட்டி
முதலாளித்துவம் மிகக் கேவலமாக மூக்கறுபட்டது.

பாஜக பெரும்பான்மை பெற்றாலும், மோடியை
பிரதமராக்க ஆர் எஸ் எஸ் முன்வராது என்று கூறி
தன் அறியாமையை வெளிப்படுத்தினார் மாயாவதி.
தமிழக ஊடகங்களின் குட்டி முதலாளித்துவத்
தற்குறிகள் நிதின் கட்கரியே பிரதமர் என்று
சுயஇன்பம் கண்டனர்.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றார் அறிஞர் அண்ணா.
அதன்படி மகேசன் தீர்ப்பும் வந்தது. கடந்த தேர்தலில்
பெற்றிருந்த 282 இடங்களை விட அதிகமாக 303 இடங்களை
பாஜகவுக்கு அளித்தார் மகேசன்.

2014 தேர்தலின்போது டாக்டர் மன்மோகன் சிங்கின்
ஆட்சி நடந்து கொண்டிருந்தது. எனவே anti incumbency
எனப்படும் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை
மக்களிடம் இருந்தது. இதன் காரணமாகவே பாஜக
தனிப்பெரும்பான்மை பெற முடிந்தது.

2019 தேர்தலின்போது மோடியின் ஆட்சி நடந்து கொண்டு
இருந்தது. எனவே anti incumbency இருக்குமேயானால்,
அது பாஜகவுக்கு எதிராகவே இருக்கும். ஆனால் எவ்விதமான
anti incumbencyயம் இல்லை. மாறாக மோடியின் ஆட்சி மீதான
மக்களின் ஆதரவு மனநிலை அபரிமிதமாக இருந்தது.
இதை pro incumbency என்பர். இதன் விளைவாகவே பாஜக
303 இடங்களைப் பெற முடிந்தது.

மாநிலங்களவையிலும் பாஜக அதிக இடங்களைப் பெற
இருக்கிறது. பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி
மாநிலங்களவையில் அறுதிப்பெரும்பான்மை பெற
இருக்கிறது.

ஆக, பாஜகவின் வெற்றியின் ஆழ அகலங்கள் அதிகரித்துக்
கொண்டே செல்கின்றன. இதற்கு நேர் மாறாக உள்ளது
காங்கிரசின் நிலை. இந்தத் தேர்தலிலும் அங்கீகரிக்கப்பட்ட
எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரசால் பெற முடியவில்லை.

காங்கிரசின் அரிஸ்டோகிரட் பெருந்தலைகள் அனைவரும்
பல்வேறு மாநிலங்களிலும் தோற்றுப் போய் விட்டனர். ராகுல்
காந்தியே அமேதியில் பரிதாபமாகத் தோற்று விட்டார்.
கேரளத்தில் ராகுல் வெற்றி பெற்றுள்ள வயநாடு தொகுதி
இஸ்லாமியர் பெருமளவில் வாழும் தொகுதியாகும்.
அசாதுதீன் ஒவாய்சி ஹைதராபாத் தொகுதியில் வெற்றி
பெறுவது போன்றதே ராகுலின் வயநாடு வெற்றி.  
இத்தொகுதியில்தான் ராகுலால் வெற்றி பெற முடிந்தது
என்ற உண்மை அனைவருக்கும் பொதுவானவர் என்ற
ராகுலின் பிம்பத்தை அடித்து நொறுக்கி விட்டது.

காங்கிரஸானது 100 இடங்களைப் பெறுமானால்,
ராகுல் பிரதமராக உரிமை கோரலாம் என்ற எண்ணத்தில்
காங்கிரஸ் இருந்தது. அனால் அதில் பாதியில்தான் (52)
காங்கிரஸ் வந்து நின்றது.

பல்வேறு மாநிலக் கட்சிகளுக்கும் இத்தேர்தல் மரண அடி
கொடுத்துள்ளது (திமுக, பிஜு ஜனதா போன்றவை
விதிவிலக்கு). மாநிலக் கட்சிகள் இரண்டு
விஷயங்களுக்குப் பெயர் பெற்றவை. 1. ஊழல் 2. வாரிசு
அரசியல். உலகமயச் சூழலில் மாநிலக் கட்சிகளுக்கு
தீர்மானிக்கும் பாத்திரம் இருப்பதில்லை.

பல்வேறு மாநிலக் கட்சித் தலைவர்களின் குடும்ப
வாரிசுகளை மக்கள் விரட்டி அடித்தனர். லல்லு
பிரசாத்தின் மகள் மிசா பாரதி, அகிலேஷின் மனைவி
டிம்பிள் யாதவ், தேவகவுடாவின் பேரன் நிகில், டிஆர்எஸ்
தலைவர் சந்திரசேகர ராவின் மக்கள் கவிதா, பிரணாப்
முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி ஆகிய வாரிசுகளை
தேர்தலில் மக்கள் காயடித்தனர்.

மாயாவதி, நாயுடு, சரத் பவார், மமதா, தேவகவுடா ஆகியோர்
தங்களைப் பிரதமராகக் கருதிச் சுயஇன்பம் அடைந்தனர்.
ஆனால் இவர்களில் பெரும்பாலோர் ஒற்றை இலக்க
இடங்களுக்குள் சுருண்டனர்.மாயாவதி மமதா விதிவிலக்கு.
பிரதமராகலாம் என்ற நப்பாசை கொண்டிருந்த தேவகவுடா
ஹாசன் தொகுதியில் காயடிக்கப் பட்டார்.

இக்கட்டுரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க
விரும்புவோர் காயடித்தல் என்பதை castration என்றே
மொழிபெயர்க்கலாம். அந்தப் பொருளில்தான் ஆளப்
படுகிறது. அதிலும் physical castration is meant. ஏனெனில்
physical castration is IRREVERSIBLE but chemical castration
is not.

ஒருபுறம் காங்கிரசையும் இன்னொரு புறம் மாநிலக்
கட்சிகளையும் உதைத்துத் தள்ளி விட்டு பாஜக
இரண்டாம் முறையாகவும் ஆட்சிக்கு வந்துள்ளது.
இது எப்படி சாத்தியமானது?

சரியான பதிலைக் கோருகின்ற கேள்வி இது. இதற்கு
பல்வேறு அமைப்புகளிலும் உள்ள குட்டி முதலாளித்துவம்
உருப்படாத பதில்களை வைத்துள்ளது. அவை
அனைத்தையும் இகழ்ச்சியுடன் நிராகரிப்போம்.
சரியான பதிலை அறிவோம்.


    

 
   

      
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக