திங்கள், 27 மே, 2019

பதவி படுத்தும் பாடு!
பாஜகவுக்கு பாதபூஜை செய்யும் பதவி வெறியர்கள்!
-------------------------------------------------------------------------------
1) நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவி
மரபுப்படி எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட உள்ளது.
2) இப்பதவியை ஒரு தென்னிந்தியருக்கு வழங்க
அமித் ஷா முடிவு செய்துள்ளார்.
3) ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய மூன்று
மாநிலங்களைத் தவிர்த்து விட்டு கேரளம் அல்லது
தமிழ்நாட்டுக்கு இப்பதவியை வழங்க அமித்ஷா
விரும்புகிறார். காங்கிரசும் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளது.
4) எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கேரளத்தைச்
சேர்ந்த ஒருவருக்கு வழங்க ராகுல் விரும்புகிறார்.
இதன்காரணமாக துணை சபாநாயகர் பதவி
தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
5) இதை அறிந்த திருநாவுக்கரசர் இப்பதவியைப் பெற
தீவிரம் காட்டி வருகிறார். திருநாவுக்கரசர் ஏற்கனவே
பாஜகவில் அமைச்சராக இருந்தவர்.அவருக்கு பாஜகவில் 
தொடர்புகள் அதிகம். தமது பாஜக நண்பர்கள் மூலம்
துணைசபாநாயகர் ஆகிவிட திருநாவுக்கரசர் கடும்
முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
6) திருநாவுக்கரசர் துணைசபாநாயகர் ஆவதை ஈ வி கே எஸ்
இளங்கோவன் அறவே விரும்பவில்லை. எனவே அதற்கு
எதிராக அவர் செயல்பட்டு திருநாவுக்கரசரின்
முயற்சியை முளையிலேயே கிள்ளி ஏறிய
முயன்று வருகிறார்.
7) எனவே திமுகவுக்கே துணை சபாநாயகர் பதவியை
வழங்க வேண்டும் என்று பேசி வரும் இளங்கோவன்
டி ஆர் பாலுவைச் சந்தித்து, துணை சபாநாயகர்
பதவியைப் பெற முயற்சி செய்யும்படி அறிவுறுத்தி
உள்ளார்.
8) ஈ வி கே எஸ் இளங்கோவனின் அறிவுரையை ஏற்ற
டி ஆர் பாலு, தமது நண்பரான பாஜக இல கணேசனுடன் 
பேசி, எப்படியாவது துணை சபாநாயகர் பதவியை
தனக்கு ஏற்பாடு செய்து தருமாறு கோரியுள்ளார்.
இலை கணேசனும் அதற்கு சம்மதித்து உள்ளார்.
9) இதற்கிடையில் தமது மகள் கனிமொழிக்கு
துணை சபாநாயகர் பதவி வேண்டும் என்று
ராஜாத்தி அம்மாள் காய் நகர்த்தி வருகிறார்.
பிரபல ஆங்கில டிவி ஊடகவியலாளர் பர்கா தத்
மூலம் ராஜாத்தி அம்மாள் முயற்சி செய்து வருகிறார்.
ராஜாத்தி அம்மாளின் மொழிபெயர்ப்பாளராக
செயல்பட்டு வரும்  பூங்கோதை ஆலடி அருணா             
இது குறித்து பர்கா தத்திடம் பலமுறை பேசியுள்ளார்.
10) பதவி இவர்களை எப்படி எல்லாம் படுத்துகிறது
பாருங்கள்! புழுவினும் இழிந்த ஈனத்தனம்!
****************************************************

543ல் 475 MPக்கள் கோடீஸ்வரர்கள்.
முதல் 3 இடம் காங்கிரஸ்!
1. கமல்நாத் மகன் நகுல்நாத் 660 கோடி.
2. வசந்தகுமார் 417 கோடி. 3.T K சுரேஷ் 338 கோடி.


மேற்கு வங்கத்தில் மமதாவின் தோல்வி
எப்படி ஏற்பட்டது?
---------------------------------------------------------
உலகிலேயே தீவிரமான மொழிப்பற்று உடையவர்கள்
வங்காளிகள். உலகத் தாய்மொழி தினம் என்பது
வங்க மொழியை வைத்தே கொண்டாடப் படுகிறது.
  
முட்டாள் தனமாக வங்க மொழியின் மீது தாக்குதல்
தொடுத்தார் மமதா. பள்ளிக் கல்வியில் உருது
மொழியைத் திணித்தார் மமதா. பள்ளி கல்லூரிப்
பாட நூல்களில் உருது திணிக்கப் பட்டது. இதன் மூலம்
இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெறலாம் என்று
எண்ணி வாங்க மொழியின் முக்கியத்துவத்தைக்
குறைத்தார் மமதா.

இது வங்காளிகளை வெறி கொள்ளச் செய்தது.
வங்க மொழி புறக்கணிப்படுவதும், உருது மொழிக்குத்
தரப்படும் நியாயமற்ற தேவையற்ற முக்கியத்துவமும்
வங்காளிகளை மமதா மீது கோபம் கொள்ளச் செய்தன.

இந்தியாவின் 29 மாநிலங்களில் உபியை அடுத்து
இஸ்லாமியர்களின் மக்கள்தொகை அதிகமுள்ள
மாநிலம் மேற்கு வங்கம். எனவே உருது மொழியை
வங்க மொழிக்குச் சமமாகக் கொண்டு வருவதன்
மூலம் இஸ்லாமிய வாக்கு வங்கியை மொத்தமாக
அள்ளலாம் என்று தப்புக் கணக்குப் போட்டார் மமதா.

இந்த மூடத்தனம் அவரின் வெற்றிக்கு உலை வைத்தது.
பாகிஸ்தானில் இருந்து வங்க தேசம் பிரிந்து தனி
நாடாக ஆகக் காரணமே உருதுத திணிப்புதான்.
இதை மறந்த மம்தாவுக்கு தேர்தலில் மக்கள்
நல்ல பாடம் கற்பித்தனர்.

ஒருநாளும் உருதுத் திணிப்பை வங்காளிகள்
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று மம்தாவுக்கு
வங்க மக்கள் உணர்த்தி உள்ளனர்.

மமதாவின் தோல்வி இத்தோடு நிற்கப் போவதில்லை.
சாரதா ஊழலில் அவர் சிறைக்குச் செல்வது உறுதி.
அடுத்து வரும் சட்ட மன்றத் தேர்தலில் அவர் ஆட்சியை
இழப்பதும் உறுதி.

History repeats itself ecause men repeat their mistakes.
----------Oscar Wilde.
*********************************************     


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக