வெள்ளி, 10 மே, 2019

முகிலன் எங்கே? 
மதன மாளிகையில் மன்மத லீலைகள்!
--------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------
கண்கள் படாமல் கைகள் தொடாமல்
காதல் வருவதில்லை!
வெட்கம் இல்லாமல் வணங்கிச் செல்லாமல்
சொர்க்கம் தெரிவதில்லை!
தொட்டால் பூ மலரும்!

முகிலன் எங்கே என்ற குரல்கள் மேலும் மேலும்
மெலிந்து கொண்டே வருகின்றன. சென்று தேய்ந்து இறுதல்
என்று தமிழ் இலக்கியமும் attenuation என்று
signal transmissionஉம் இந்த மெலிவை வர்ணிக்கின்றன.

முகிலனின் பாலியல் பிறழ்வு நடத்தை இன்று அனைவரும்
அறிந்து வெறுக்கத்தக்க ஒன்றாகி விட்டது. இது
மாறுவேடங்கள் கலைகின்ற நேரம்!

புரட்சி என்பது மாலைநேரத்து விருந்து என்றுதான்
குட்டி முதலாளித்துவம் நினைத்துக் கொண்டு
இருக்கிறது. முகநூலில் புரட்சிகரமாக ஒரு சில
வாக்கியங்களை எழுதுவது பெரும் புரட்சி என்று
குட்டி முதலாளித்துவம் மனப்பால் குடிக்கிறது.

முகநூல் புரட்சி முடிந்ததும் காமப் புரட்சி தொடங்கி
விடுகிறது. காமப் புரட்சியையே காரல் மார்க்ஸ்
சொன்ன புரட்சியாக வரித்துக் கொண்டிருக்கிறது
குட்டி முதலாளித்துவம்.

கச்சை மேலாக கனியும் நூலாடை
கவிதை கொண்டாடும் ரசிகை
பொன்மான் இப்போது அம்மான் உன்கையில்
பெண்மான் என்னோடு பழகு

புது மது இது இதம்
ரசம் தரும் சுகம்!
மதன மாளிகையில் மந்திர லீலைகளாம்!
உதய காலம் வரை உன்னத லீலைகளாம்!

முகிலனின் பாலியல் பிறழ்வு நடத்தை ஏற்றிப்
போற்றத் தக்கது என்று குட்டி முதலாளித்துவம்
கருதுகிறது.

அழகிய கால்கள் பழகிய நாட்கள்
ஆயிரம் சுகம் அல்லவா!
ஓ ஆயிரம் சுகம் அல்லவா!
தொட்டால் பூ மலரும்!

முகிலனின் பாலியல் அக்கிரமங்களை சுட்டிக் காட்ட
முடியவில்லை. புழுவினும் இழிந்த குட்டி
முதலாளித்துவம் முகிலனுக்கு ஆதரவாக கம்பு
சுழற்றுகிறது. ஒரு பாலியல் பிறழ்வைக் கண்டிக்க
வக்கற்ற இத்தகைய சமூகச் சூழல்தான் இன்று
பொள்ளாச்சியில் இளம் பெண்களை அடித்து
உதைத்து ஆடையைக் கழற்றச் செய்தது.

முகிலனின் கயமையை நியாயப் படுத்துபவர்கள்
முகிலனின் pimpகளாக மட்டுமே இருக்க முடியும்.
முகிலன் திரும்பி வரட்டும். தமது குற்றத்துக்குரிய
ஏழாண்டு சிறை தண்டனையை முகிலனுக்கு
பெற்றுத்தர, பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக
உறுதி ஏற்போம். முகிலன் தண்டிக்கப் படும்போது.
முகிலனின் கயமையை ஆதரித்து நிற்கும் குட்டி
முதலாளித்துவமும் தண்டனையில் இருந்து
தப்ப முடியாது.

திரு அ மார்க்ஸ் தலைமையிலான முகிலன்
குறித்த உண்மை அறியும் குழுவை உடனே
கலைக்க வேண்டும். அதனால் எப்பயனும்
விளையாது என்று ஏற்கனவே கூறி இருந்தோம்.

கூடங்குளம் உதயகுமார் அவர்களின் ஒத்துழைப்பைப்
பெற்று, முகிலனின் தலைமறைவு நாடகத்தை
காவல்துறை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

ஒருவேளை முகிலன் திரும்பி வராமல் நாள்
கடத்தினால், அல்லது திரும்பி வராமலே
போய்விட்டால், பாடாண்திணையில்
கையறுநிலைத் துறையில் எவரும் அகவல்
(elegy) புனையப் போவதில்லை. புனைய வேண்டிய
தேவை இல்லை.

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.
*********************************************

    






  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக