வெள்ளி, 10 மே, 2019

மதன மாளிகையில் மன்மத லீலைகள்!
------------------------------------------------------------
போகம் முன்னாக ராகம் பின்னாக
முழங்கும் சங்கீதக் குயில்கள்
மேகம் மின்னாமல் இடியும் இல்லாமல்
மழையில் நனைகின்ற கிளிகள்!
--------------------------------------
கச்சை மேலாக கனியும் நூலாடை
கவிதை கொண்டாடும் ரசிகை
பொன்மான் இப்போது அம்மான் உன்கையில்
பெண்மான் என்னோடு பழகு

புது மது இது இதம்
ரசம் தரும் சுகம்!
----------------------------------
கண்கள் படாமல் கைகள் தொடாமல்
காதல் வருவதில்லை!

வெட்கம் இல்லாமல் வணங்கிச் செல்லாமல்
சொர்க்கம் தெரிவதில்லை

தொழுகிய கால்கள் பழகிய நாட்கள்
ஆயிரம் சுகம் அல்லவா

inthup


இந்துப் பெயரா கிறிஸ்துவப் பெயரா
(முருகன், டேனியல்) என்பது முக்கியம் அல்ல!
ஆள் ரா (RAW) உளவு அமைப்பின் கைக்கூலி
என்பதே முக்கியம்!
 


முதல் நாள் இலங்கையில் ராஜ பக்சே
ஒரு கோரிக்கையை முன் வைத்து போராட்டம்
நடத்துவார். மறுநாள் அதே கோரிக்கையை
முன்வைத்து இந்தியாவில் போராட்டம் நடத்துவார்
திருமுருகன் காந்தி. இதன் மூலம் ராஜ பக்சேவின்
கோரிக்கைக்கு சர்வதேச அளவில் ஆதரவு இருப்பதாக
ஒரு தோற்றம் காட்டப்படும். இதை ஐநா சபை கணக்கில்
கொள்ளும்.
  

சீமான் ரா (RAW) அமைப்பின் கைக்கூலி அல்ல.
எல்லாக் கைக்கூலிகளையும் ரா அமைப்பு
உருவாக்குகிறது என்று நினைப்பது தவறு.
எந்தெந்த உளவு அமைப்பு எந்தெந்த கைக்கூலிகளை
உருவாக்கி இருக்கிறது என்பது பற்றி விரிவான கட்டுரை
நேரம் இருந்தால் எழுதப்படும்.
 

திருமுருகன் படித்தவர். சீமான் தானா கூனா.
RAW வின் கைக்கூலியாக இருக்க வேண்டுமெனில்,
அவருக்கு நல்ல ஆங்கிலப் புலமை அவசியம்.
பாவம் சீமான், ஆங்கிலப் புலமைக்கு அவர் எங்கே
போவார்? திருமுருகன் படித்தவர், இன்ஜீனியர்,
ஆங்கிலம் (பேச்சு, எழுத்து) நன்கு கைவரப் பெற்றவர்.


Espionageல் ஈடுபடும் உளவாளிகள் மட்டுமே
வெளியில் யாருக்கும் தெரியாமல், மனைவிக்கும்
கூடத் தெரியாமல் வாழ்ந்தாக வேண்டும்.
திருமுருகன் espionageல் ஈடுபடுகிறவர் அல்ல.
political assignmentsஐ மேற்கொள்கிறவர்களை
நுண்மாண் நுழைபுலம் மிக்கோர்  எளிதில்
அடையாளம் காண்பர்.
 

முற்போக்குக் கற்பழிப்பு!
---------------------------------------
கற்பழிப்புகளிலும் முற்போக்குக் கற்பழிப்பு உண்டு.
எங்கு உண்டு? தமிழ்நாட்டில்தான்!

நூற்றுக்கணக்கில் கன்னியா ஸ்திரீகளை (nuns)
கற்பழித்தவர் கேரளப் பாதிரியார் பிஷப் பிராங்கோ முல்லக்கல்

இவருடைய கற்பழிப்பை முற்போக்குகள் யாரும்
கண்டிப்பது இல்லை. கண்டு கொள்வது கூட இல்லை.

கற்பழிப்பை மேற்கொண்ட புழுவினும் இழிந்த
பிஷப் முல்லக்கல் பெருங்கயவன்.

இவனைக் கண்டிக்காதவன் பிஷப்பை விட
மோசமான கயவன்.
--------------------------------------------------------------------- 

இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!
----------------------------------------------------------------
யாரும் திணிக்காமல் தமிழன் இந்தி கற்கிறான்!
மத்திய அரசின் உத்தரவு இல்லை!
மாநில அரசின் அரசாணை எதுவும் இல்லை!
தக்ஷிண பாரத் இந்தி பிரச்சார சபாக்களின்
அறைகூவல் இல்லை!

ஆனாலும் தாமாகவே முன்வந்து இந்தி கற்கிறார்கள்
தமிழர்கள்!

அவர்களை அமைப்பாக்குவதுதான் பெரிய விஷயம்.
அமைப்பாக்கினால் போராட்டம் தானே நடக்கும்.


பாடாண் திணை என்றால் என்ன?
கையறுநிலைத்துறை என்றாலென்ன?
ELEGY என்றால் என்ன?
மேற்கூறிய கேள்விகளுக்கான விடை தெரிந்து
இருந்தால் மட்டுமே கட்டுரையை முழுமையாகப்
புரிந்து கொள்ள இயலும்.

அடுத்து ATTENUATION என்றால் என்ன என்றும்
தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.

------------------------------------


திரு நரேன் ராஜகோபாலன் அவர்களுக்கு,
--------------------------------------------------------------
ஜகதீஷ் சந்திர போஸ் உலக அளவில் புகழ்
பெற்றுள்ள இந்திய விஞ்ஞானி. உலகெங்கும் அவர்
இயற்பியலாளர் (physicist) என்றே அறியப் படுகிறார்.
கம்பியில்லாத் தந்தியை (wireless transmission) முதன் முதலில் 
கண்டு பிடித்தவர் ஜெகதீஷ் சந்திர போஸ்தான் என்ற
உண்மையை உலகம் இன்று ஒப்புக் கொண்டுள்ளது.

கம்பி இல்லாத் தந்திக்கு நோபல் பரிசு பெற்ற
மார்க்கோனி தமக்குக் கிடைத்த நோபல் பரிசுத்
தொகையை போசுக்கு வழங்க முன்வந்தார்.
ஆனால் போஸ் மறுத்து விட்டார். தமது கண்டுபிடிப்புக்கு
பதிப்புரிமை கோரவில்லை போஸ்.

அடுத்து ஜகதீஷ் சந்திர போஸின் தாவரவியல்
பங்களிப்பில் எத்தகைய போலி அறிவியலும்
இல்லை. தாவரங்களுக்கு உயிர் உண்டு என்றார் பாஸ்.
உயிரின் பல பண்புகளில் பிரதானமான ஒன்று என்னவெனில்
தன்னைப் பிரதி எடுப்பது (replication).

தாவரங்கள் தன்னைப் பிரதி எடுக்கின்றன.
ஒரு மரக்கால் நெல்லை விதைத்தால் ஒரு கோட்டை
நெல் எப்படி விளைகிறது? replication காரணமாக.
எனவே தாவரங்களுக்கும் உயிர் உண்டு.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக