வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் 
நாத்திகத்தைத் தலைமுழுகி
கடவுளின் பக்தையாக மாறிய டாக்டர் ஷாலினி!
தூள் தூளாய் நொறுங்கும் போலி நாத்திகம்!
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------- 
டாக்டர் ஷாலினி ஒரு மனோதத்துவ டாக்டர். அதாவது 
அவர் ஒரு உளவியல் மருத்துவர் (சைக்கியாட்ரிஸ்ட்) 

பெரியாரிஸ்ட்டாகவும் திராவிடர் இயக்க 
ஆதரவாளராகவும் தீவிர நாத்திகராகவும் 
அறியப் பட்டு வருகிறார் டாக்டர் ஷாலினி.

இன்று (19.08.2022) கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு
தமது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை எழுதி 
உள்ளார் டாக்டர் ஷாலினி. அப்பதிவில் கிருஷ்ண 
ஜெயந்தியைக் கொண்டாட வேண்டும் என்று 
கூறியுள்ள டாக்டர் ஷாலினி. சீடை எடு கொண்டாடு 
என்று அறைகூவல் விடுத்துள்ளார்.

ஆத்திகர்களில் அதுவும் இந்துக்களில்  ஒரு பகுதியினர் 
மட்டும் கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தியை 
நாத்திகரான டாக்டர் ஷாலினி ஏன் கொண்டாடுகிறார்?
ஏன் மற்றவர்களையும் கொண்டாடச் சொல்லி அறைகூவல் 
விடுக்கிறார்? நாத்திகத்தைத் தலைமுழுகி விட்டேன் என்று 
ஒப்புதல் வாக்குமூலம் அளித்து விட்டாரே ஷாலினி!

டாக்டர் ஷாலினியின் இந்தக் கருத்தை திகவில் 
உள்ள வழக்கறிஞர் அருள்மொழி ஒத்துக் 
கொள்வாரா? கி வீரமணி ஒத்துக் கொள்வாரா?

கடவுள் கிருஷ்ணன் ஒரு பொம்பளைப் பொறுக்கி!
அவன் ஒரு காவாலிப் பயல்! அவன் மீது ஈவ் டீசிங் 
சட்டப்படி நடவடிக்கை எடுத்துச் சிறையில் 
அடைக்க வேண்டும் என்று சதா சர்வ காலமும் 
கூவிக் கொண்டிருக்கும் கி வீரமணி 
டாக்டர் ஷாலினியின் கருத்தை ஏற்றுக் கொள்வாரா?

சீடை எடு கொண்டாடு என்ற டாக்டர் ஷாலினியின் 
அறைகூவல்  ஒரு eye opener ஆகும். தனது நாத்திக
வேஷத்தை முழுவதுமாகக் கலைத்து விட்டு  
கடவுளின் பக்தையாக மாறிய டாக்டர் ஷாலினி 
அதை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டுள்ளார்.
அந்த அளவில் அவர் பாராட்டுக்கு உரியவர்.

ஷாலினி போன்றவர்களால் ஒருபோதும் 
மெய்யான, அறிவியல் வழிப்பட்ட, பொருள்முதல்வாத 
நாத்திகராக இருக்க இயலாது. 

ஈ வெ ராமசாமியின் போலி நாத்திகம் என்றைக்கோ 
காலாவதி ஆகி விட்டது. ஹெச் ராஜாவின் 
கருத்துமுதல்வாதம் ஈ வெ ராமசாமியின் போலி 
நாத்திகத்தைப் புரட்டிப் புரட்டி எடுத்து விட்டது.

பொருள்முதல்வாதமற்ற போலி நாத்திகம் 
இப்படிச் செத்துத்தான் போகும்.
-------------------------------------------------------------------
பின்குறிப்பு:
தமிழ்நாட்டில் யாரெல்லாம் நாத்திகர்கள் என்று 
சான்றிதழ் வழங்கும் உரிமையும் அருகதையும் 
நியூட்டன் அறிவியல் மன்றத்துக்கு மட்டுமே உண்டு.
எங்களின் சான்றிதழைப் பெறாதோர், தங்களை 
நாத்திகர்கள் என்று அழைத்துக் கொள்ளும் அருகதை 
அற்றவர்கள்.
***************************************************
 
    
   

 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக