வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

2G ஊழலும் கேடி பிரதர்சும்!
-------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------
2G ஊழலை முதன் முதலில் வெளிக்கொண்டு 
வந்தது யார்? எந்த டிவி?
டைம்ஸ் நவ் டிவியா? அர்ணாப் கோஸ்வாமியா?

இல்லை; இல்லை. பின் ஜெயா டிவியா?
இல்லை; அதுவும் இல்லை. பின் யார்தான் 
2G ஊழல் என்று முதன் முதலில் உச்சரித்தது?

நீங்கள் ஆச்சரியப் பட்டுப் போவீர்கள்!
சன் டிவிதான் 2G ஊழல் என்று 2010ல் முதன் முதலில் 
உச்சரித்தது. தினமும் 2G ஊழல் என்று செய்திகளில் 
ஒளிபரப்பியது. 2G ஊழல் என்று முதன் முதலில் 
ஊருக்கும் உலகத்துக்கும் சொன்ன மகானுபாவன் 
தயாநிதி மாறன்தான்.

சன் டிவியில் வெளிவந்த 2G ஊழல் பற்றி ஜெயா 
டிவியில் எதுவும் வெளிவரவில்லை. காரணம் 
இதுதான். 2G அலைக்கற்றை, ஒதுக்கீடு 
என்பதெல்லாம் அதிஉயர் தொழில்நுட்ப 
விவகாரங்கள். எளிதில் எல்லோருக்கும் 
புலப்பட்டுவிடும் விவகாரம் அல்ல 2G.

ஆ ராசாவை டார்கெட் செய்துதான் 2G ஊழல் பற்றிய 
செய்திகள் சன் டிவியில் வருகின்றன என்பதே 
மிகவும் தாமதமாகத்தான் ஜெயா டிவிக்குப் புரிய 
ஆரம்பித்தது. சன் டிவி SAME SIDE GOAL அடிக்கும் 
என்று நம்புவதற்கு மெய்யாகவே சற்றுத் 
தாமதானது ஜெயா  டிவிக்கு.  

எனவே கேடி பிரதர்ஸ் என்ன செய்தார்கள் 
தெரியுமா? ஜெயா டிவியின் செய்தி ஆசிரியர்களில்  
முக்கியமான சிலரை வரவழைத்து, 2G குறித்து 
அவர்களிடம்  எடுத்துச் சொல்லி, உரிய 
ஆதாரங்களைக் கொடுத்து, ஆ ராசா புரிந்த 
2G ஊழல் பற்றி செய்தி பரப்புமாறு கூறினர்.
அதன் பின்னரே ஜெயா டிவியிலும் ஆராசாவின் 
இமாலய ஊழல் பற்றிச் செய்திகள் வெளியாயின.

இதெல்லாம் நடந்தது 2010ன் பின்பாதி வருடத்தில்.
சன் டிவி, ஜெயா டிவி ஆகிய இரண்டு டிவிக்கள் தவிர 
இந்தியாவில் எந்த ஒரு தேசிய சானலும் 2G ஊழல்  
பற்றிய செய்தியை ஒளிபரப்பவில்லை. அவர்களுக்கு 
விஷயம் தெரியாது என்பதுதான் காரணம்.

எனவே கேடி பிரதர்ஸ் ஒரு காரியம் செய்தார்கள்.
அது என்ன தெரியுமா? டாக்டர் சுப்பிரமணியம் 
சுவாமியைச் சென்று சந்தித்தார்கள். அவரிடம் 
2G ஊழல் பற்றிய எல்லாச் செய்திகளையும் 
தெரிவித்தனர். உரிய ஆதாரங்களை அவரிடம் 
ஒப்படைத்தனர். ஆதி திராவிட ஆராசாவுக்கு உரிய 
பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்றனர்.  Oh, he is 
Adi Dravida?! என்றார் டாக்டர் சுவாமி! Yes, yes, he is
என்றனர் கேடி பிரதர்ஸ். 

லட்டு, ஜிலேபி, மைசூர்ப்பா, பாதாம் அல்வா ஆகிய 
எல்லா இனிப்புகளையும் ஒருசேர உண்ட திருப்தியை 
அடைந்தார் டாக்டர் சுவாமி. அவரிடம் ஒரு விஷயம் 
கிடைத்தால், அதை என்ன செய்ய வேண்டுமோ 
அதையெல்லாம் செய்பவர் டாக்டர் சுவாமி. ஆ ராசா, 
கனிமொழி, கருணாநிதி ஆகியோர் தங்களின் 
வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாத பாடத்தைக் 
கற்றுக் கொடுத்தார் டாக்டர் சுவாமி.

  
எதிரிகளெல்லாம் சும்மா இருக்க, நமது கட்சியைச் 
சேர்ந்த  கேடி பிரதர்ஸ் இவ்வளவு இடையூறு 
செய்கின்றனரே என்று வருந்திய ஆ ராசா, 
கருணாநிதியிடம் புகார் செய்தார். கருணாநிதியும் 
கேடி பிரதர்ஸைக் கண்டித்தார். ஆனால் 
கருணாநிதிக்கெல்லாம் கட்டுப்படக் கூடியவர்களா 
கேடி பிரதர்ஸ்?

IQ குன்றியவரும், after all, ஒரு FEUDAL LEADERம் ஆன 
கருணாநிதியால் கேடி பிரதர்ஸைக் கட்டுப் படுத்த 
இயலவில்லை. அதற்கான ஆளுமை கொண்டவர் 
அல்லர் அவர். பார்த்தார் ஆ ராசா. கேடி பிரதர்சுக்குப் 
புரிகிற மொழியில் பேசினார். இப்படித்தான் 
கள்ளத்தனமாக தொலைபேசி எக்சேஞ்சு நடத்திய 
ஊழல் வெளியானது. ஆடிட்டர் குருமூர்த்தியைச் 
சென்று பார்த்து கேடி பிரதர்ஸின் கள்ள எக்சேஞ்சு 
ஊழல் விவகாரங்களை ஆதாரத்துடன் விளக்கினார்.

இதன் விளைவு! சன் டிவி அடிவயிற்றில் கத்திக்குத்து 
விழுந்ததை போன்று அலறியது. 2G  ஊழல் பற்றிப் 
பேசுவதை நிறுத்தியது. இன்றும் வழக்கு நடந்து 
கொண்டிருக்கிறது. இதில் கேடி பிரதர்ஸ் தண்டிக்கப் 
படவும் வாய்ப்பு உள்ளது.
  
ஆக அவன் இவன் கவிழ்க்கப் பார்த்தான். இவன் 
அவனைக் கவிழ்க்கப் பார்த்தான். இரண்டு 
பேருமே திருடர்கள். கடைசியில் இரண்டு பேருமே 
ஒருவருக்கு மற்றவர் பாய்ச்சிய குழியில் 
விழுந்தனர். இதுதான் உண்மை!

தயாநிதி மாறன் காட்டிக் கொடுக்காமல் இருந்திருந்தால் 
2G ஊழல் என்ற ஒன்றே பிறந்திருக்காது!
***********************************************

        
   

     
           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக