செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

கூத்தாடி அமீரின் தற்குறித்தனம் அம்பலம்!
கூத்தாடி அமீர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை
எதிர்ப்பதன் லட்சணம்! நெடுவாசலில் கூத்தாடி!
குஜராத்தில் வைக்காமல் ஏன் தமிழ்நாட்டில்
மட்டும் இத்திட்டம்?
--------------------------------------------------------------------------------------
இந்திய புரட்சிப் போராளி கூத்தாடி அமீர் (திரைப்பட
இயக்குனர்) நெடுவாசலில் நடைபெறும் போராட்டத்திற்கு
ஆதரவு தெரிவிக்க இன்று (27.02.2017) சென்றார்.
செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரின் நேர்காணலை
புதியதலைமுறை டி.வி வெளியிட்டுள்ளது.

செய்தியாளர்: நெடுவாசல் திட்டம் குறித்துக் கூறுங்கள்.

கூத்தாடி அமீர்: இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை
ஏன் தமிழ்நாட்டில் கொண்டு வருகிறீர்கள்?
 குஜராத்தில் கொண்டு போய் வையுங்கள்.

செய்தியாளர்: இத்திட்டம் குஜராத்திலும் கொண்டு வரப்
பட்டுள்ளது; இந்தியா முழுவதும் குஜராத் உட்பட
31 இடங்களில் கொண்டு வரப்பட்டு விட்டது.

கூத்தாடி அமீர்( எவ்வித நாணமும் குற்ற உணர்வும்
இன்றி) உளறத் தொடங்குகிறார்.

அன்றாடம் செய்தித்தாள் கூடப் படிக்காதவன் இந்தக்
கூத்தாடி அமீர்! இவனெல்லாம் போராளி!! சதா சர்வ
காலமும் குடி, குட்டி, கும்மாளம், கூத்து என்று இருக்கும்
இந்த ஈனக் கூத்தாடி அமீரை பேட்டி கண்டு
யூடியூபில் பதிவேற்றம் செய்யும் இந்த வேசி ஊடகம்
ஐஐடிக்கோ அண்ணா பல்கலைக்கோ சென்று,
எவரேனும் அறிவியலாளரை பேட்டி கண்டு
செய்தி வெளியிடுமா?

பின்குறிப்பு: இந்த யூடியூப் வீடியோ மொத்தம்
2.24 நிமிடம் மட்டுமே உள்ளது. இதில் 1.30 நிமிடம் முதல்
1.50 நிமிடம் வரை காணவும்.
******************************************************************
            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக