வியாழன், 13 ஜூலை, 2017

கோபால கிருஷ்ண காந்தியும்
ராஜ்மோகன் காந்தியும்!
------------------------------------------------------
1) காந்தி-ராஜாஜியின் பேரனாக தற்போதும்
வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் இருவர்.
ஒருவர் ராஜ்மோகன் காந்தி; மற்றவர்
கோபாலகிருஷ்ண காந்தி.

2) இருவரும் அண்ணன் தம்பிகள். ராஜ்மோகன்
அண்ணன் ஆவார்.இருவரின் தந்தையும் காந்தியின்
புதல்வர் தேவதாஸ்.

3) ராஜ்மோகன் காந்தி பேராசிரியராகப் பணியாற்றியவர்.
கோபாலகிருஷ்ண காந்தி ஒய்வு பெற்ற ஐஏஎஸ்
அதிகாரி.

4) அண்ணனான ராஜ்மோகன் காந்தி பல்வேறு
கட்சிகளில் இருந்தவர். 2014இல் ஆம் ஆத்மி கட்சி
வேட்பாளராக கிழக்கு டெல்லி தொகுதியில்
போட்டியிட்டுத் தோற்றவர்.

5) தம்பியான கோபாலகிருஷ்ண காந்தி
மேற்கு வங்க ஆளுநராக இருந்தவர்.

6) கோபாலகிருஷ்ண காந்தி தற்போது காங்கிரஸ்
உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் வேட்பாளராக
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டி இடுகிறார்.

7) மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள்
மட்டுமே வாக்களித்து துணை ஜனாதிபதி
தேர்ந்து எடுக்கப் படுகிறார். அதாவது மொத்த
வாக்காளர் எண்ணிக்கையே சுமார் 800தான்.

8) ராஜ்மோகன் காந்தி, கோபாலகிருஷ்ண காந்தி
ஆகிய இருவருக்கும் இடையிலான வேறுபாட்டை
கவனம் கொள்ளாமல் எழுதப்பட்ட எமது
முந்திய பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. எனவே
வாசகர்கள் இந்தப் பதிவில் உள்ள சரிபார்க்கப் பட்ட விவரங்களையே கருத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.        

9) தவறுக்கு வருந்துகிறோம்.
*****************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக