வெள்ளி, 7 ஜூலை, 2017

தகவல் பிழை ஏதும் இல்லை!
---------------------------------------------------
நான் இங்கு குறிப்பிடுவது செங்கை அண்ணா
மாவட்டத்தை. செங்கை அண்ணா மாவட்டத்தில்
காஞ்சிபுரம் அடக்கம். ஜெயேந்திரர் கண்டித்தவுடன்
மேனன் திண்டுக்கல் அண்ணா மாவட்டம்
உருவாக்கினார். கலைஞர் அதை ஏற்காமல்
செங்கை அண்ணா மாவட்டம் என்றே குறிப்பிட்டு
வந்தார். திண்டுக்கல் அண்ணா மாவட்டம் என்று
மேனனின் அரசு குறிப்பிட, செங்கை அண்ணா
மாவட்டம் என்று கலைஞர் குறிப்பிட்ட, அஞ்சல்கள்
இவ்வாறே இரு பிரிவுகளாய் அமைந்து குழப்பத்தை
ஏற்படுத்தின.
**
இதனால் அஞ்சல் துறை பெரிதும் பாதிக்கப் பட்டது.
நான் அப்போது மத்திய அரசின் தொலைத்தொடர்புத்
துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
என் அலுவலகம் அருகிலேயே சென்னை GPO
இருந்தது. அஞ்சல் பிரிப்புப் பணியில் (SORTING)
இது பெரிய அளவு இடர்ப்பாட்டை ஏற்படுத்தியது.
**
இக்கட்டுரை முழுவதும் குறிப்பிடப் படுவது
செங்கை அண்ணா மாவட்டமே ஆகும்.
சென்னை காஞ்சியைச் சேர்ந்த மூத்த தோழர்களில்
யாரை வேண்டுமானாலும் கேட்டு இந்த உண்மையை
உறுதி செய்து கொள்ளலாம்.

தமிழக கியூ பிரிவோ அல்லது ஆந்திர போலீசோ
தோழர் பத்மா அவர்களைக் கைது செய்யவில்லை
என்ற செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது.
அப்படியானால் தோழர் பத்மா அவர்கள் நலமாக
இருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா?

ஆசிரியர் தகுதித் தேர்வு TET:
எழுதியவர்கள்: 7.53 லட்சம்
தேர்ச்சி: 34,979 (4.65%)
மாநிலப் பாடத்திட்டத்தில்
நடந்த தேர்வு இது!  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக