வியாழன், 6 ஜூலை, 2017

திராவிட இந்துத்துவம்!
--------------------------------------------
இறைவன் சந்நிதியில் பிரிந்தவர் கூடினர்!
தம்பிதுரையும் மாஃபா பாண்டியராஜனும்
ஆவடி செல்லாத்தம்மன் கோவில் திருவிழாவில்
அருகருகே நின்று தேர் இழுக்கும் முனைப்பில்!
இதுதான் திராவிட இந்துத்துவம்!

திராவிட இந்துத்துவம் பற்றி இதுவரை யாம்
தெரிவித்த  கருத்துக்களுக்கு எவராலும்
மறுப்பு கூற இயலவில்லை!

(நன்றி: படம்: T P Jeyaraman  
----------------------------------------------------------------
தமிழகத்தில் இரண்டு வகையான
இந்துத்துவம் செயல்படுகிறது.
(1) ஆரிய இந்துத்துவம்
(2) திராவிட இந்துத்துவம்.

அதிமுக முழுமையான
திராவிட இந்துத்துவக் கட்சி!
இதை ஆயிரம் முறை கூறினேன்..
மறுக்க நாதியில்லை.
மறுத்துப்பார்,சவால்!

ஆரிய இந்துத்துவம் யக்ஞம் செய்யும்.
திராவிட இந்துத்துவம்
ஜெயா குணமடைய வேண்டி
மண்சோறு தின்னும்!
வளர்மதி சரஸ்வதி மண்சோறு தின்றனரே

ஆரிய இந்துத்துவம்
மாட்டை (பசுவை) வணங்கும்!
திராவிட இந்துத்துவம்
கார் டயரை வணங்கும்!

"திராவிட இந்துத்துவம்" (Dravidian Hindutva) என்பது
நான் முன்மொழியும் ஒரு கோட்பாடு. இதன்
சரித்தன்மை நடைமுறையில் நிரூபிக்கப் பட்ட
ஒன்று. திராவிட இந்துத்துவத்தை கொள்கையாகக்
கொண்டு ஒழுகும் பல்வேறு திராவிடக் கட்சிகள்
உள்ளன. என்றாலும் அவற்றுள் திராவிட இந்துத்துவக்
கோட்பாட்டுக்கு மிகவும் நெருக்கமான கட்சி
அதிமுக.
  

இல்லை.

திரு ஆனந்த கணேஷ் அவர்களே,
எமது பதிவுகள் வெறும் கருத்துகள் அல்ல.
அவை நிரூபிக்கப்பட்ட தேற்றங்கள்!
இவை பொழுதுபோக்கிற்காக எழுதப்
படுவதில்லை. எமது எழுத்தில் உள்ள
ஒரு கமாவுக்கு கூட திட்டவட்ட நோக்கம் உண்டு.
சமூகம் இப்படித்தான் சிந்திக்க வேண்டும் என்ற
நோக்கில், சமூகத்தின் சிந்தனையின் திசைவழியைத்
தீர்மானிப்பவை எமது எழுத்துக்கள். இவை
ஏனோதானோ என்றோ, வாய் புளித்ததோ
மாங்காய் புளித்ததோ என்றோ எழுதப் படுவதில்லை.
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை!
  
BA BL படித்த வழக்கறிஞர்
கோகுல இந்திரா
ஜெயா நலம் பெற
மண்சோறு தின்கிறார்!
இது வெறும் பிரார்த்தனையா
திராவிட இந்துத்துவமா?

சீமான் ஸ்திரத்தன்மை அற்றவர்.
ஈழ விஷயத்தில் ஜெயாவை ஆதரித்தவர்.
புலம் பெயர்ந்த தமிழர்களின் பணத்தில்
அரசியல் செய்ப்பவர். அவரின் அரசியல்
கருநிலை வடிவிலேயே உள்ளது. இன்னும்
முதிரவில்லை. எப்படி வேண்டுமானாலும்
கொள்கையை மாற்றிக் கொள்ளத் தயாராக
இருப்பவர். தேர்தல் அரசியலில்  சற்று முன்புதான்
(2016 சட்டமன்றத் தேர்தல்) குதித்துள்ளார்.
எனவே  பொறுத்திருந்து பார்த்து, அவர் ஒரு
 வடிவத்திற்கு வந்த பிறகுதான் அவரைப்
பற்றிக் கணிக்க முடியும். மதில்மேல் பூனையை
எப்படி கணிக்க முடியும்?  அவருக்குப் பணம்
தருவோர்தான் அவரின் கொள்கையை முடிவு
செய்வார்கள். 


சமூகத்தில் பெரும்பான்மையினரின் நாவில்
புழங்குகிற இந்துத்துவத்தை.... மக்கள் இந்துத்துவம்
என்றால் என்ன அர்த்தம்  கொள்கின்றனரோ
அந்த  அர்த்தத்தில் இங்கு பயன்படுத்தி உள்ளேன்.
எமது  கோட்பாட்டு ஆவணம் (திராவிட இந்துத்துவம்
என்றால் என்ன?) விரைவில் வெளியாகும்.
இது காலரிக்கு வாசிக்கிற இடம் என்பதை அறிக.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக