சனி, 15 ஜூலை, 2017

தோல்விக்குக் காரணம் வாஸ்து சரியில்லாததே!
ம.பி, காங்கிரஸ் தலைவர் மிஸ்ரா கருத்து!
-------------------------------------------------------------------------------------
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தொடர்ந்து
மூன்று முறை தோற்று விட்டது. நான்காவது
முறையும் தோற்கும் என்று அஞ்சப்  படுகிறது.

இதற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்த காங்கிரஸ்
தற்போது காரணத்தைக் கண்டு பிடித்து விட்டது.

ம.பி. போப்பாலில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத்
தலைமைச் செயலகம் உள்ளது. இதன் பெயர்
இந்திரா பவன் ஆகும். நம்மூர் சத்தியமூர்த்தி பவன்
போல. இதன் மூன்றாவது மாடியில் ஒரு கழிப்பறை
உள்ளது. அது கிழக்கு நோக்கி உள்ளது.
வாஸ்து சாஸ்திரப்படி இது தவறானதாம். இதனால்தான்
காங்கிரஸ் தொடர்ந்து தோற்று வருகிறதாம்.

இப்படிக் கூறி இருப்பவர் மானமிகு மிஸ்ரா அவர்கள்.
காங்கிரசின் செய்தித் தொடர்பாளர்.

இச்செய்தி கேட்டதும் அமித்ஷாஜி அதிர்ச்சி
அடைந்துள்ளார். வருங்காலத்தில் காங்கிரஸானது
இந்துத்துவத்தை தங்கள் கொள்கையாக
அறிவித்து விடுமோ என்று அமித்ஷாஜி
அஞ்சுகிறாராம்.

வாழ்க வாஸ்து சாஸ்திரம்!
வாழ்க காங்கிரசின் இந்துத்துவம்!
********************************************************    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக