வியாழன், 13 ஜூலை, 2017

சிறை சொகுசுக்கு 2 கோடி
லஞ்சம் கொடுத்த சசிகலாவை
ஆதரிக்க வேண்டும் என்று
கூறியவர்கள் எங்கே? எங்கே?


1) சங்கராச்சாரி ஜெயேந்திரர் தலைமையிலான
கல்வித் தந்தைகளான பச்சமுத்து, ஜேப்பியார்,
பங்காரு அடிகள் போன்ற கொடிய கல்விக்
கொள்ளையர்களே நீட் தேர்வை எதிர்க்கிறார்கள்.
அவர்களின் சேவகர்களான போலி முற்போக்குகளின்
நீட் எதிர்ப்பு ஜெயேந்திரருக்குச் செய்யும் சேவையே
தவிர வேறொன்றும் இல்லை.
2) மோடி அரசை வரிந்து கட்டிக்க கொண்டு எதிர்க்கும்
கேரளா மார்க்சிஸ்ட் அரசு, மேற்கு வங்க மமதா அரசு
உள்ளிட்ட தீவிர மோடி எதிர்ப்பு அரசுகள் நீட் தேர்வை எதிர்க்கவில்லை. இந்தியாவின் 29 மாநிலங்களில்
28 மாநிலங்களில் நீட்டுக்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை.
3) சட்டப்படிப்பில் சேர பல பத்தாண்டுகளாக
நுழைவுத் தேர்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் சட்டப் படிப்பில்
சேர்க்கை நடைபெற வேண்டும் என்று நீட்
எதிர்ப்பாளர்கள் என்றாவது கோரி இருக்கிறார்களா?
இல்லை. ஏனெனில் சங்கராச்சாரி ஜெயேந்திரர்
சட்டக் கல்லூரி நடத்தவில்லை.
4) திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் BA படிப்பில்
சேர நுழைவுத் தேர்வு நடத்தித்தான் மாணவர்களை
சேர்க்கிறார்கள். காலங்காலமாக இது நடக்கிறது.
நீட் எதிர்ப்பாளர்கள் இந்த நுழைவுத் தேர்வை
எதிர்க்கவில்லை.
5) தமிழ்நாட்டில் எத்தனை நுழைவுத் தேர்வுகள்
நடந்தாலும் அவற்றைக் கண்டு கொள்ளாதவர்கள்,
நீட் தேர்வை மட்டும் எதிர்ப்பது ஏன்?
6) தமிழ்நாட்டில் மட்டும் எதிர்ப்பது ஏன்?
7) காரணம் இதுதான்! இங்குள்ள கல்வித் தந்தைகள்
(ஜெயேந்திரர், பச்சமுத்து, ஜேப்பியார், பங்காரு )
என்ன கட்டளை இடுகிறார்களோ, அதை
நிறைவேற்றும் வேலையை மிக்க விசுவாசத்துடன்
செய்கிறார்கள் இந்த நீட் எதிர்ப்பாளர்கள் என்னும்
ஜெயேந்திரர் கைக்கூலிகள்.
-------------------------------------------------------------------------------------
இந்த ஆண்டு 2017இல்  நீட் தேறிய ஆண்கள் = 2,66,221
பெண்கள்= 3,45,313.
ஆண்களை விட பெண்களே அதிகம் தேறியுள்ளனர்.
89,000 பேர் அதிகம்.
**
கடந்த ஆண்டு 2016இல் நீட் தேறிய ஆண்கள் =1,83,424
பெண்கள்= 2,26,049.
பெண்களே அதிகம் தேறியுள்ளனர். 42000 பேர் அதிகம்.
**
உண்மை நிலை இப்படியிருக்க பெண்களை
ஒடுக்க வந்தது நீட் என்று தாங்கள் கூறுவது
புத்தி பேதலித்த நிலையில் கூறுவதாகும்.
**
முட்டாள்தனத்தை 100 சத்தமும் மொத்தமாக
திரு பூவண்ணன் கணபதி குத்தகை எடுத்திருக்கும்போது,
வேறு யார்தான் என்ன செய்ய முடியும்?
**
சங்கராச்சாரி கைக்கூலிகள் பொய்கள் உடனடியாகவே
சாயம் வெளுத்துப் போகும்.

ஆரம்ப காலத்தில் பெண்கள் மருத்துவக் கல்வி
பெற்றது குறைவு. டாக்டர் முத்துலட்சுமி ஒரே ஒரு
மாணவியாக அவர் மட்டுமே படித்தார் என்று
கேள்விப்பட்டுஉள்ளேன். இன்று நிலைமை
படிப்படியாக மாறி வருகிறது. இந்த ஆண்டு
அட்மிஷன் முடிந்த பிறகு கிடைக்கும் புள்ளி
விவரங்கள் அடிப்படையில் பெண்கல்வியின்
முன்னேற்றத்தை அளவிடலாம்.
**
சட்டமன்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு
பங்கு மகளிருக்கான ஒதுக்கீடு இன்னும்
சட்டம் ஆகாத இந்தியாவில், அதற்காகப்
போராடுவது வேறு எதையும் விட அதிக
முக்கியத்துவம் வாய்ந்தது என்பது என்
தாழ்மையான கருத்து. சட்டம் இயற்றும் இடத்தில்
பெண்களைக் கொண்டு சேர்க்க வேண்டும்
அல்லவா? அதில் கருத்துக் செலுத்தாமல் இருப்பது
முட்டாள்தனம் அல்லவா?

90,000 இடங்கள் உள்ள அரசு மற்றும் தனியார்
கல்லூரிகளின் மருத்துவப் படிப்பு இடங்களே
மொத்த மருத்துவ இடங்களில் 95%க்கும் மேல்.
எனவே மிகக்குறைவான இடங்கள் உள்ள AIIMSஐ
அஜெண்டாவில் இப்போது சேர்ப்பது தேவையில்லை. 
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக