வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

1. ஆதிசங்கரரின் வரலாறு மற்றும் கொள்கைகள் பற்றிய குளறுபடிகள்
2. ஸ்ரீசக்கரம் மற்றும் சக்தி பீடங்கள் – அவற்றில் உள்ள புரட்டு
3. ஆதிசங்கரன் பரப்பியது பிரசன்ன புத்தமதமே என்ற ராமானுஜரின் ஆணித்தரமான குற்றச்சாட்டு
இவர் பிறந்தது, கேரளாவில் உள்ள காலடி கிராமம் என்று பலரும், தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரம் என்று வேறு சிலரும் சொல்வார்கள். இவர் பிறந்த காலகட்டத்தைப் பற்றியும் பல குழப்பங்கள் உண்டு,
• கிமு 509–477
• கிமு 44–12 BCE
• கிபி 600
• கிபி 788–820
• கிபி 700-750
• கிபி 805–897
கிமு 500 அதாவது புத்தரின் காலத்துக்கு 100 வருடங்களுக்கு பின் தொடக்கி, ராமானுஜர் காலத்துக்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் வரை அவரின் பிறந்த வருடமாக அவரவர் வசதிக்கு ஏற்ப பல தேதிகளை சொல்லுவார்கள். ஆனால் பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்ட காலகட்டம், கிபி எட்டாம் நூற்றாண்டின் முதல் பாதி என்பதே.
வடஇந்தியாவில் குப்தர்களின் காலமான கிபி 200-களில், இந்துமதம் வலுவாக வைணவ முறையில் வேரூன்றி இருந்தாலும், விந்திய மலைக்கு தெற்கே, சமணம் பௌத்த மதங்களின் வீரியத்தை அது குறைக்கவில்லை, அதே போல பஞ்சாபுக்கு மேற்கிலும் சமணம் பௌத்த மதங்களின் தாக்கம் குறையவில்லை.
ஆதிசங்கரனை வரலாறை பற்றி சொல்லும் சுருக்கமாக சொல்வதானால், அவர் ஒரு விதவையின் மகன், ஏசு மட்டுமே, புத்தரைப் போல, தான் யூதர்களின் அரசன் என்று சொல்லிக்கொண்டார், ஆனால் ஏசுவுக்கு பிறகு, எல்லா மத தலைவர்களும், விதவையின் மகன் அதாவது, மிக சிறிய வயதிலேயே தந்தை இறந்து விட்டார், தேவ அம்சம் பொருந்திய குழந்தை என்றே எல்லோரும் சொல்லிக்கொள்ள தொடங்கினர்.
உதாரணம், முகமது நபி, ஆதிசங்கரன், ராமானுஜர் மாத்வாச்சாரியார் போன்றோரை சொல்லலாம். எல்லா சாமியார்களின், வாழ்கை வரலாறு போல தான் இவரது வாழ்கை வரலாறும், சிறு வயதிலேயே சன்யாசம் வாங்கினார், பல ஊர்களில் சுற்றி திரிந்தார், பல மத தலைவர்கள் உடன் வாதம் புரிந்தார். பிறகு தனக்கான மதத்தை மடத்தை தோற்றுவித்தார்.
பிறகு இவரின் சிறப்பு என்ன என்றால், தென் இந்தியாவின் முதல் சாமியார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
ஆதிசங்கரன், கௌடபாதர், கோவிந்தர் போன்ற ஆசிரியர்களின் வழியில் தத்துவ பயிற்சி பெற்றவர், பின்னர் மாயாவாதம் என்ற தத்துவத்தை மக்களுக்கு முன் வைக்கிறார்.
அதன் பொருளானது, ஜீவாத்தாமா என்று தனியாக ஏதும் இல்லை, அது பரமாத்தாவின் ஒரு பகுதியே, அது பூமியில் பிறப்பெடுத்தபின், மாயையின் காரணமாக தான் ஒரு தனி உயிர் என்று நினைத்துகொள்கிறது, அதனால் பல இன்னல்கள் தனக்கு வருவதாக நினைத்துகொள்கிறது, அதனால் செய்யும் பாவங்களுக்கு ஏற்றார் போல பல பிறவிகள் எடுத்து இறுதியில் அது பரமாத்மாவில் ஒன்றாக கலந்துவிடுகிறது. என்று ஆதிசங்கரர் தனது அத்வைத கோட்பாடாக சொல்கிறார்.
படிக்கும் போது ஆகா நாமே இறைவனின் ஒரு சிறு பகுதிதானா மிக அருமை என்று கைதட்ட தோன்றும்.
இந்த கருத்து உண்மையில் நாகர்ஜுனர் என்ற புத்த துறவியின் புத்தமத கொள்கையான, சூன்யவாத சித்தாந்தந்தமே. புரியும்படி சொல்லவேண்டும் என்றால்.
சூன்யவாத சித்தாந்தந்தம் என்னவென்றால், உலகில் பிறந்த மனிதர்கள் இறுதியில் அடையவேண்டியது புத்தர் கூறிய நிர்வானநிலை, அந்த நிலையில், உயிர்களுக்கு உருவம் கிடையாது, திசைகள் கிடையாது, வடிவம் கிடையாது, இப்படி இல்லை இல்லை என்று எதுவுமே இல்லாத ஒரு சூன்ய நிலையை மனம் அடையமுடியும், அதுவே நிர்வானநிலை என்று சொன்னார்கள்.
இவர் அதை அப்படியே சற்று மாற்றி அந்த நிர்வானநிலை தான் பரமாத்மாவின் நிலை, பலபிறவிகளுக்கு பின் உயிர்கள் அந்த நிலைக்கு மறுபடியும் சென்று அடையும் என்று ஒரு வகையான தலைகீழ் பொறியியல் வேலை செய்து அதன் பெயர் மாயாவாதம் என்று சொல்லி அதையே அத்வைத கொள்கை என்று சொல்லிவிட்டார்.
இதை எப்படி ஏற்றுகொள்வது என்று நீங்கள் கேட்கலாம், இதற்கு பதில் மண்டூக உபநிஷதம் என்ற நூலை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். இந்த நூலை எழுதியவர் கௌடபாதர், என்பவர், கோவிந்தர் என்பவரின் குரு, இந்த கோவிந்தர் தான் ஆதிசங்கரனின் குரு. ஆதிசங்கரரின் அதைவைத்த தத்துவத்தின் அடிப்படையே இந்த மண்டூக உபநிஷதம் நூல் தான். சரி அதற்கு என்ன என்றால்,
மண்டூக உபநிஷதம் எழுதிய கௌடபாதர், முதலில் ஒரு புத்ததுறவி, அவர் மகாயான புத்தமதத்தில் இருந்து வெளியேறியவர் அல்லது வெளியேற்றப்பட்டவர். இவரது மண்டூக உபநிஷதம் நூல் முழுக்க முழக்க மத்தியமிக்கா என்ற நூலை தழுவி எழுதப்பட்டது தான். இந்த மத்தியமிக்கா நூலை எழுதியவர், மகாயான புத்தமதம் தோற்றுவித்த நாகர்ஜுனர்.
புத்தமதத்தில் சூன்யம் என்றதை கௌடபாதர் மாயை என்று மாற்றி கொள்ள அதை வைத்து புது திரைக்கதை எழுதியதாக சொன்ன ஆதிசங்கரனின் திரைப்படம் தான் அத்வைதம். சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் பார்த்த ஒரு வசனம் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. அதில் ஒரு கதாபாத்திரம் சொல்லும் , “10 இங்கிலீஷ் பட சிடி வங்கி அதிலிருந்து ஒரு கதைய ரெடி பண்றோம் அதை அவுங்க ஊர் திரைபடவிழாவுக்கே அனுப்புறோம்”
ஆதிசங்கரன், அத்வைதம் என்று தத்துவம் சொன்னாலும், மக்கள் வழிபட அவர்காட்டிய முக்கிய தெய்வங்கள் எல்லாம் பெண் தெய்வங்கள், அதாவது சக்தி வழிபாடு.
இன்று இந்து மதத்தில் பல ஆண் தெய்வங்கள் இருந்தாலும், ஆதிசங்கரன் பெண் தெய்வங்களை தேர்ந்தெடுக்க காரணம் என்ன,
சித்தாந்தம், தத்துவம் எல்லாவற்றையும் புத்த மதத்தில் இருந்து ஆதிசங்கரன் திருடிக்கொண்டாலும், அவர் மிகச்சிறப்பானது என்று சொன்ன வேதங்களில் இந்திரன், வாயு அக்கினி வருணன் தவிர பெரிய அளவில் கடவுள் கதைகள் எதுவும் இல்லை.
மாஹயான புத்தமத ஆண் கடவுள்கள் என்று பார்த்தால்
1. அவலோகிதீஸ்வரா (பத்மபாணி – தாமரை அணிந்தவன்)(இவரே ராமானுஜர் காலத்தில் மகாவிஷ்ணுவாக மாற்றப்பட்டவர்)
2. மஞ்சுஸ்ரீ (குமாரபுத்தா – சிறுவன் வடிவில் புத்தர்)(இவரது கோயில்களே பிற்காலத்தில் முருகன் கோயிலாக மாற்றப்பட்டன)
3. வஜ்ரபாணி (வஜ்ராயுதம் தாங்கியவன்) (இவரது கோயில்களே பிற்காலத்தில் சிவன் கோயிலாக மாற்றப்பட்டன)
4. சமந்தபத்ரா
5. ஆகாஷ்கர்பா
6. மகாஸ்தானப்ராப்தா
7. பைஷ்ஜியராஜா
8. மைத்ரேயா (இவரே உலகம் அழியும் போது வரக்கூடிய புத்தரின் கடைசி அவதாரம்)
இந்த கடவுள்களை நேரடியாக, ஆதிசங்கரனால் உள்வாங்க முடியவில்லை, ஏனெனில், புத்தமதத்தில் இந்த கடவுள்கள் மக்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்றவை. அதனால் ஆதிசங்கரன் தேர்ந்தெடுத்தது, புத்தமத சிறுதெய்வங்கள், வஜ்ராயன புத்தமத பிரிவில் இந்த சிறுதெய்வங்களான தாரா தேவியர் என்பது சிறப்பானது.
இந்த வஜ்ராயன புத்தமதம், மகாயானத்தில் இருந்து சற்று வேறுபட்டது, மாந்திரீகம் மற்றும் தாந்திரீகம் போன்றவற்றில் ஈடுபடுவது இவர்களது வழக்கம். பெண் தெய்வங்களை பெரியஅளவில் வணங்குவார்கள்.
வெறும் வாழ்கை தத்துவமாக புத்தர் போதித்ததை, பௌத்தர்களில் பார்பனர் ஊடுருவிய பின் மகாயானாம், வஜ்ரயானம் மாந்திரீகம் மற்றும் தாந்திரீகம் என்று பலவாறு திசை திரும்பியதும் கூட இந்தியாவில் புத்தமதம் அழிய ஒருகாரணம்.
சூர்ய குப்தர் என்ற வஜ்ராயன புத்த துறவி குறிப்பிடும் 21 தாரா தேவியர் விபரம் பின்வருமாறு:
1. ப்ரவிதாரா
மிகவேகமாக காக்க வருபவள், எட்டு கைகளுடன், வஜ்ராயுதம், மணி, வில் அம்பு, சங்கு சக்கரம், கத்தி மற்றும் பாசக்கயிறு வைத்திருப்பாள்
2. சந்திரகாந்தி தாரா
பின்னால் நிலவு இருக்க தாமரை மேல் அமர்ந்து, வெள்ளை, நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் மூன்று முகமும் 12 கைகளும் அவற்றில் பல்வேறு ஆயுதங்களும் கொண்டு இருப்பாள்
3. கனகவர்ண தாரா
தங்க நிறத்தில் இருப்பாள், பின்னால் நிலவு இருக்க தாமரை மேல் அமர்ந்து, ஒரே ஒரு முகமும் 10 கைகளும் அவற்றில் பல்வேறு ஆயுதங்களும் கொண்டு இருப்பாள்
4. உஸ்நிச விஜயதாரா
மஞ்சள் நிறத்தில் இருப்பாள், பின்னால் நிலவு இருக்க தாமரை மேல் அமர்ந்து, ஒரே ஒரு முகமும் 4 கைகளும் அவற்றில் பல்வேறு ஆயுதங்களும் கொண்டு இருப்பாள்
5. ஹம் ஸ்வர நதினி தாரா
ஹம்(ஓம்) என்ற ஓசைக்கு தலைவி, மஞ்சள் நிறத்தில் இருப்பாள், பின்னால் நிலவு இருக்க தாமரை மேல் அமர்ந்து, ஒரே ஒரு முகமும் 2 கைகளும் கொண்டு இருப்பாள்
6. திரி லோக்ய விஜயதாரா
மூவுலத்தை வென்றவள், சூரியன் மற்றும் தாமரையில் அமர்ந்திருப்பாள், ஒரே ஒரு முகமும், 4 கைகளும் வஜ்ராயுதம், கத்தி, மட்டும் பாசக்கயிற்றுடன், மஞ்சள் உடை அணித்திருப்பாள்
7. வாதி ப்ரமர்தினி தாரா
எதிர் வாதம் புரிவோரை அழிப்பவள், சூரியன் மற்றும் தாமரையில் அமர்ந்திருப்பாள், கருப்பு நிறத்தில் இருப்பாள், ஒரு முகம் 4 கைகள், வாள், சக்கரம் தாமரை மற்றும் வஜ்ராயுதம் வைத்திருப்பாள்
8. வைஷ்டோ தம்மதி தாரா
சிவப்பு தாமரையில் நிலவு மற்றும் யாளி போன்ற ஒரு மிருகத்துடன் மஞ்சள் நிறத்தில் இருப்பாள், ஒரு முகம் 4 கைகள், மற்றும் அந்த கைகளில், அசோகமரம், தாமரை, நீர் வடியும் ஒரு பானை வைத்திருப்பாள்
9. வரதா தாரா
வரங்களை தருபவள், சிவப்பு தாமரையில் நிலவுடன், சிவப்பு நிறத்தில் இருப்பாள், ஒரு முகம் 4 கைகள், மற்றும் அந்த கைகளில், அந்த கைகளில், அசோகமரம், தாமரை, தங்க காசுகள் கொட்டுவது போல, மற்றும்மொரு கை நடனம் ஆடுவது போல வைத்திருப்பாள்
10. சோக விநோதன தாரா
சோகங்களை அழிப்பவள், சிவப்பு தாமரையில் நிலவுடன், சிவப்பு நிறத்தில் இருப்பாள், ஒரு முகம் 4 கைகள், மற்றும் அந்த கைகளில், அந்த கைகளில், கத்தி மற்றும் சிவப்பு பூக்கள் இருக்கும் ஒரு அசோகமரம், ஆகியவற்றை வைத்திருப்பாள்
11. ஜகத் ஆகர்ஷன தாரா
துரதிர்ஷடத்தை அழிப்பவள், தாமரையில் சூரியனுடன், கரிய நிறத்தில் ஆக்கிரோஷமாக இருப்பாள், ஒரு முகம் 2 கைகள், ஒரு கையில், 8 கிரகங்களை கட்டி இழுக்கும் ஒரு கொக்கியும், மற்றொரு கையில் துரதிர்ஷடத்தை கட்டி இழுக்கும் ஒரு கொக்கியும் வைத்திருப்பாள்
12. மங்கள வபாஷா தாரா
அதிர்ஷ்டத்தை வழங்குபவள், இரட்டை தாமரையில் நிலவுடன், மஞ்சள் நிறத்தில் அமர்ந்திருப்பாள், ஒரு முகம் 8 கைகள்,அந்த கைகளில் திரிசூலம் முதற்கொண்டு பல்வேறு ஆயுதங்கள் வைத்திருப்பாள்
13. பரிபாசன தாரா
வளங்களை வழங்குபவள், இரட்டை தாமரையில் சூரியனுடன் சிவப்பு நிறத்தில் ஆக்கிரோஷமாக அமர்ந்திருப்பாள், ஒரு முகம் 4 கைகள்,அந்த கைகளில் பல்வேறு ஆயுதங்கள் வைத்திருப்பாள்
14. காலபிக்ருதி தாரா
அகந்தையை அழிப்பவள், வெளிர் சிவப்பு தாமரையில் சூரியனுடன் ஒரு இறந்த மனித உடலின் மேல், நீல நிறத்தில் ஆக்கிரோஷமாக இருப்பாள், மூன்று முகங்கள் உண்டு அவை, கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும், வாயில் குடல்களை கவ்வி கொண்டு இருப்பாள், 6 கைகள், அந்த கைகளில் பல்வேறு ஆயுதங்கள் வைத்திருப்பாள். புலித்தோல் மற்றும் பாம்பை அணிந்திருப்பாள்,
15. மகாசாந்தி தாரா
அமைதியை கொடுப்பவள், வெள்ளை நிறத்தில் வெள்ளை தாமரையில் அமைந்திருப்பாள், ஒரு முகம் 6 கைகள், அந்த கைகளில், நீர் சொரியும் பானை, ருத்திராட்ச மாலை, படிக்கும் ஓலைச்சுவடி போன்றவை இருக்கும்
16. சங்க நாசினி தாரா
பந்தபாசங்களை அழிப்பவள். வெளிர்சிவப்பு தாமரையில் சூரியனுடன், சிவப்பு நிறத்தில் இருப்பாள், மூன்று கண்களுடன் இருப்பாள் கைகளில், திரிசூலம், மற்றும் பூக்கள் பழங்கள் நிறைந்த மரம் ஒருனும் இருக்கும்
17. சுக சித்தி தாரா
சுகத்தை வழங்குபவள், வெள்ளை தாமரையில் சூரியனுடன், வெளிர்சிவப்பு நிறத்தில் இருப்பாள், இரண்டு கைகளால் முழு நிலவை பிடித்துகொண்டு இருப்பாள்
18. ப்ரபுஸ்தி தாரா
வளங்களை வழங்குபவள், வெள்ளை நிறத்தில் வெள்ளை தாமரையில் அமைந்திருப்பாள், நிலவும் அன்னப்பறவையும் உடன் இருக்கும் கைகளில், தாமரை படிக்கும் ஓலைச்சுவடி போன்றவை இருக்கும்
19. துக்க தகன தாரா
துக்கங்களை அழிப்பவள். வெள்ளை தாமரையில் நிலவுடன், வெள்ளை நிறத்தில் இருப்பாள், இரண்டு கைகளால் நெருப்பை பிடித்துகொண்டு இருப்பாள்
20. சித்தி சம்பவ தாரா
சித்திகளை வழங்குபவள், வெளிர் சிவப்பு நிறத்தில் சிவப்பு தாமரையில் அமைந்திருப்பாள், நிலவும் உடன் இருக்கும் இரண்டு கைகளால் தங்கத்தில் ஒரு பாத்திரம் வைத்திருப்பாள்
21. பரிபூரண தாரா
எல்லாவற்றிலும் ஒரு முழுமையை வழங்குபவள், எல்லாவற்றிலும் சிறப்பாக இருக்கும் ஒரு வெள்ளை காளையின் மீது அமர்ந்திருப்பாள் மூன்று கண்கக்ளுடன் வெள்ளை நிறத்தில் இருப்பாள், புலித்தோல் அணித்து கைகளில் திரிசூலம் மற்றும் பவழமாலை வைத்திருப்பாள்.
வஜ்ராயன புத்தமதத்தில் மொத்தம் 108 தார தேவியர் உண்டு, அதில் 21 தார தேவியர் சிறப்பானவர்கள். எனவே ஆதிசங்கரன் விழுங்க முடிவு செய்தது இந்த தார தேவியரை தான்.
அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு,
அவலோகிதீஸ்வரா போன்ற பெரிய தெய்வங்கள் மற்றும் அந்த கோயில்கள் அப்போது ஏற்கனவே புகழ் வாய்ந்தவை, மற்றும் பெரிய கற்றறிந்த புத்த துறவிகளால் நிர்வாகம் செய்யப்பட்டது. இந்த தாரா தேவிகளை வழிபடுவோர், அதிகம் படிப்பறிவில்லாத பாமர மக்கள், மேலும் அந்த கோயில்களை நிர்வாகம் செய்து வந்த பூசாரிகளும் பெரும் அளவில் படித்தவர்கள் அல்ல, இந்த வஜ்ராயனம் என்பது பாமர மக்களுக்கு புரியும் அளவில் எளிமையாக்கப்பட்ட புத்த மத வடிவம்.
இவர்களிடம் போய் மாயாவாதம் என்று பூடகமாக பேசி குழப்ப ஆதிசங்கரனுக்கு எளிதாக இருந்தது, ஆதிசங்கரன் வாதத்தில் வென்றார் என்று சொல்வதெல்லாம் இந்த பாமர மக்களை தான்,
கற்றறிந்த பெரும் அறிஞர்களை அல்ல.
இவர்கள் வணங்கிவந்த இந்த தாரா தேவிகள் பெரும்பாலும் ஆயுதம் ஏந்தி ஆக்கிரோஷமான உருவத்துடன் இருந்ததால். அந்த பாமர மக்களை ஏமாற்றி உங்கள் தேவி கடும் கோபத்தில் இருக்கிறாள், அவளை நான் மந்திரத்தால் அமைதி படுத்துகிறேன் என்று சொல்லி அந்த தேவிகளின் சிலையை அங்கிருந்து நீக்கிவிட்டு, வேறு சிறிய அளவு சிலையை நிர்மாணித்து, இன்று முதல் இந்த இடம் சக்தி பீடம் ஆகிவிட்டது என்று தன் வயப்படுத்துக் கொண்டான்.
இந்த வேலையை செய்யும் போது ஆதிசங்கரனால் உருவாக்கப்பட்ட கதை தான், தட்சனின் யாகம். தட்சனின் யாகத்தில் தனக்கு உரிய மரியாதை கிடைக்காத காரணத்தால், பார்வதி தன்னையே அழித்துகொண்டாள், கோபம் அடைந்த சிவன் தன அம்சமான பைரவனை அனுப்பி தட்சனின் யாகத்தை அழித்தான். . அப்போது அவளது உடல் பல துண்டுகளாக சிதறி பூமியில் 51 இடங்களில் விழுந்தன, அவள் உடலின் பகுதிகள் விழுந்த இடங்கள் தான் சக்திபீடங்கள் என்று அழைக்கபடுகிறது
அதனால் தான் எல்லா சக்தி பீடங்களிலும் ஒரு பைரவர் சந்நிதியும் உண்டு. .
உண்மையில் ஆதிசங்கரனால் தாரா தேவிகளின் சிலைகள் அழிக்கப்பட்டாலும், இந்த தட்சனின் யாகம் கதையை சொல்லி அதனால் தான் சக்தி பீடங்களில் கருவறையில் சி்லை இல்லை என்று கதையை கட்டினார்கள்.
இந்த சக்தி பீடங்கள் என்று சொல்லப்பட்டும் 51 கோயில்களிலும் கருவறையில், நீங்கள் ஒரு பெரிய சிலை வைக்கும் அளவுக்கு ஒரு பீடத்தை பார்க்கலாம். அதன் மீது ஒரு புடவை அல்லது ஒரு பட்டு துணி கொண்டு மூடப்பட்டிருக்கும். அம்மனின் சிலை சிறிய அளவில் சுவற்றில் பதிக்கப்பட்டு இருக்கும். மற்ற எல்லா கோயில்களிலும் கருவறையில் கடவுள் சிலை நடுவில் இருக்கும்
தமிழ் நாட்டில் உள்ள காஞ்சி காமாட்சி கோயிலும் இப்படி மாற்றப்பட்ட ஒரு புத்த தாரா தேவி கோயிலே, இந்த கோயில் சிலப்பதிகார காலத்துக்கு பின் வந்த கோயிலாக இருக்கலாம். மணிமேகலை கதை படி கோவலன் இறந்தபிறகு மாதவி ஒரு புத்த சந்நியாசி ஆகிவிடுகிறாள், இந்த கோயில் அவள் நினைவாக கட்டப்பட்ட கோயிலாக இருக்கலாம்.
காமாட்சி என்றால் ஆசைகளை கட்டுபடுத்துபவள் என்று பொருள். மாதவி முதலில் இச்சையை தூண்டும் தாசியாக இருந்து பின்னர் இச்சைகளை ஆசைகளை கட்டுப்படுத்தும் துறவியானாள் என்பதால் இந்த பெயர் வந்திருக்கலாம்.
அதே கோயிலில் இருக்கும் அன்னபூரணி உண்மையில் மாதவியின் மகள் மணிமேகலையாக இருக்கலாம், அந்த அன்னபூரணியின் கையில் இருக்கும் உணவு பாத்திரமே அட்சய பாத்திரத்தின் குறியீடாக இருக்கலாம்.
சக்தி பீடம் உருவாக்க ஏற்கனவே இருந்த சிலையை உடைத்தாகி விட்டது, பின் மக்களை எதை வணங்க வைப்பது, அதற்கு ஆதிசங்கரன் கண்டுபிடித்த அடுத்த வழி தான் ஸ்ரீசக்கரம்.
ஒரு தாமிரதகட்டில் சில கட்டங்களை வரைந்து இது தான் ஸ்ரீசக்கரம், இதை இந்த சிலை இருந்த பீடத்தில் பதித்து இந்த பேதத்தை சக்தி வாய்ந்த பீடமாக மாற்றுகிறேன், என்றது தான் அந்த அடுத்த புரட்டுவேலை.
இந்த ஸ்ரீசக்கரம் எப்படி ஆதிசங்கரனால் உருவாக்கப்பட்டது தெரியுமா.
தாமரை என்பது மேலே சொன்ன அத்தனை தாரா தேவியுடனும் தொடர்பு கொண்டது, அந்த தாமரைக்கு நடுவே உள்ள நட்சத்திரங்கள், யூதர்களின் டேவிட் நட்சத்திரம் எனப்படும், இரு முக்கோணங்களை ஒன்றன் மீது மற்றொன்றை தலைகீழாக வைக்கும் முறையில் இருந்து நகல் எடுக்கப்பட்டது,
டேவிட் நட்சத்திரம் இரு முக்கோணங்கள் கொண்டது ஆதிசங்கரனின் நட்சத்திரம் 18 முக்கோணங்களை கொண்டு அடுக்கப்பட்டிருக்கும்.
ஆதிசங்கரனுக்கு யூதர்களின் தொடர்பு எப்படி,
அது ஒன்றும் மிக வியப்புக்குரிய விஷயம் அல்ல, கிபி இரண்டாம் நூற்றாண்டிலேயே, சிரியாவில் இருந்து வந்த மர்தொமா (இவர் ஏசுவின் சீடர் தோமா, என்று அழைக்கப்படும் புனித தாமஸ் அல்ல) கிருத்துவமதத்தை கேரளாவில் ஏற்கனவே பரப்பியிருந்தார். அதே கேரளாவில் இருந்து வந்த ஆதிசங்கரனுக்கு, டேவிட் நட்சத்திரம் பற்றி தெரிந்திருப்பது இயற்கையே.
இப்படியாக ஒரு தாமிர தகடு ஸ்ரீசக்கரம் என்ற பெயரில் சிலைகளுக்கு சக்தியை கொடுக்கும் என்றது அடுத்த புரட்டு.
புத்த மதம் சொன்னது சித்தாந்தம் – சித்தத்தினால் செய்யப்படும் முடிவு. ஒருவகையில் பகுத்தறிவு, இவர் சொன்னது வேதாந்தம் - வேதத்தினால் செய்யப்படும் முடிவு சிந்திக்க தேவையே இல்லாத வழி.
மனுஸ்மிருதியை மீண்டும் நிலை நாட்டியதும் இவர்தான், எப்படி என்றால் பகவத் கீதையின் மூலமாக, மனுஸ்மிருதி சொன்னதையெல்லாம் கீதையில் கிருஷ்ணன் சொன்னதாக இவர்தான் மாற்றி எழுதினர்.
என்ன இது போகிற போக்கில் பகவத் கீதையை ஆதிசங்கரன் தான் எழுதினர் என்று சொல்கிறாயே என்று நீங்கள் கேட்கலாம், கைதவறி எழுதவில்லை அப்படி, அது என்ன வரலாறு என்று பார்ப்போம். இது என்னுடைய கட்டுகதை அல்ல, வரலாற்று ஆசிரியர், பேராசிரியர் கௌசாம்பி-யின் கூற்று.
பகவத் கீதை உண்மையில் இரண்டு, ஆதிசங்கரருக்கு முந்தையது, அடுத்தது அவருடையது. முதல் பகவத்கீதை எழுதப்பட்டது கிபி 467-ல் ஆந்திர பகுதிகளை ஆண்ட பாலாதித்ய என்ற குப்த மன்னனின் காலத்தில் எழுதப்பட்டது. அப்போது அந்த நூல் பிரபலம் அடையவில்லை
பிற்காலத்தில் ஆதிசங்கரர் பகவத்கீதைக்கு விளக்கம் எழுதிய பின் தான் அது பிரபலம் அடைகிறது. ஆதிசங்கரருக்கு 50 ஆண்டுகள் முன் வாழ்ந்த ஷந்தாரகசித்தர் தான் எழுதிய தத்வசங்கிரகம் நூலில் பகவத்கீதை பற்றி ஒருவார்த்தை கூட சொல்லவில்லை, சரி அவருக்கு முந்தைய நூல் ஆசிரியருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லாமல் கூட இருக்கலாமே என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆதிசங்கரர், அவ்வளவு கவனமாக பகவத்கீதைக்கு விளக்கம் எழுதினாலும் . கோட்டை விட்ட இடம் இங்குதான்,
பகவத்கீதையில் மூல நூலில் ஒருஇடத்தில், வேதாந்தசூத்திரம் நூல் பற்றிய குறிப்பையும் சேர்த்து எழுதிவிட்டார்.
அதாவது கிருஷ்ணன் சொல்கிறான், ஒரு காரியத்தின் ஞானம், மற்றும் அந்த காரியத்தை செய்பரின் ஞானம் எப்படி இருக்கவேண்டும் என்று பல ரிஷிகளும் ஞானிகளும் ஏற்கனவே சொல்லி இருக்கிறார்கள், அதிலும் குறிப்பாக வேதாந்தசூத்திரம் நூலில் விளக்கமாக சொல்லியிருகிறார்கள்.
கிபி700-களில் வேதாந்தசூத்திரம் ஆகிய பிரம்மசூத்திர பாஷ்யம் நூல் எழுதியவர் ஆதிசங்கரன், அந்த நூலை பற்றிய குறிப்பு அதற்கு முன்பு எழுப்பட்ட அந்தகாலத்தில் அதிகம் யாருக்கும் தெரியாத பகவத்கீதையில் எப்படி குறிப்பு வந்தது,
ஒருவேளை அதைப் பற்றி வியாச முனிவருக்கு ஞானபார்வையில் அன்றே தெரிந்திருக்க கூடும் என்று பக்தர்கள் இப்போது வந்து கதறுவார்கள்.
பக்தர்களிடம், ஏதாவது வாதம் செய்யும் போது, அவர்களிடம் சான்று கேட்டு பாருங்கள்,
பெரும்பாலும் அதற்கு மேல் அவர்கள் உங்களிடம் பேசமாட்டார்கள், ஆனால் ஒருசில புத்திசாலிகள் முதலில் போய் Wiki-யில் திருத்தம் செய்துவிட்டு பிறகு வந்து லிங்க் தருவார்கள், நம்மால் Wiki-யில் edit histroy பார்க்க முடியாது என்று அவர்கள் நினைத்துகொள்வார்கள்.
இவர்களின் முன்னோடியே ஆதிசங்கரன் தான், தனக்கு தேவையான மனுஸ்ம்ருதி கருத்துகளை முதலில் பகவத்கீதையில் எழுதிவிட்டு பின்னர் அதற்கு அவரே விளக்கமும் எழுதியவர்,
இதற்க்கு அடுத்த இரண்டு புரட்டு வேலைகள் ஒன்று விஷ்ணு சகஸ்ரநாமம், மற்றொன்று லலிதா சகஸ்ரநாமம்.
இதில் ஆச்சர்யமான ஒரு விஷயம் என்னவென்றால், இவருடைய குருவான கொவிந்தபாதருக்கும் சரி, அவருடைய குருவான கௌடபாதருக்கும் சரி, ஆதிசங்கரனுக்கு கிடைத்த பகவத்கீதை, விஷ்ணு சகஸ்ரநாமம், மற்றும் லலிதா சகஸ்ரநாமம் நூல்கள் கிடைக்கவேயில்லை.
விஷ்ணு சகஸ்ரநாமம், மற்றும் லலிதா சகஸ்ரநாமம் இரண்டுமே, தந்திரசாஸ்தரா என்ற மகாயான புத்தநூலில் இருந்து எடுக்கப்பட்ட புத்த அஷ்டோத்திர சஹாத்தனாமாவளி, மற்றும் தேவி அஷ்டோத்திர சஹாத்தனாமாவளி, என்ற இரண்டு தோத்திர நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட அப்பட்டமான நகல்,
இந்த அஷ்டோத்திர சஹாத்தனாமாவளி என சொல்லப்படுகிற தோத்திரங்கள் புத்த கடவுள்களை அந்த மடத்தில் வழிபடும் போது புத்த துறவிகள் உரக்கசொல்லி வழிபடுவார்கள், புத்த அஷ்டோத்திர சஹாத்தனாமாவளி என்றால் புத்தரின் 108 நாமங்கள் என்று பொருள்,
இதை நகல் எடுத்தே, இன்றும் எல்லா இந்து கோயில்களும், அர்ச்சனை என்ற பெயரில் அஷ்டோத்திர மந்திரம் என்று மந்திரம் என்று சொல்கிறார்கள்.
தாரா தேவி அஷ்டோத்திர சஹாத்தனாமாவளியில் இருந்து எடுக்கப்பட்ட மற்றொரு நகலே கனக தாரா ஸ்தோத்திரம், மக்களின் பேராசையை தூண்டவே, இந்த மந்திரத்தை ஆதிசங்கரன் பாடிய பொது தங்கமழை பொழிந்ததது என்ற புனைவு.
சமணமும், பௌத்தமும் இருந்த இடத்தை வைணைவமும், சைவமும் நிரப்ப வேண்டுமெனில் அதனையும் விஞ்சிய தத்துவங்களை மக்களுக்குக் காட்ட வேண்டும். அப்போதுதானே அவை ஏற்றுக் கொள்ளப்படும்? இதைத்தான் செய்தார் ஆதி சங்கரர்.
இவரை 'பிரசன்ன புத்தர்' (போலி புத்தர்) என்று கேலி செய்கிறார் ஸ்ரீராமானுஜர் ஆதீசங்கரரின் ஆதி குருவே ஒரு பௌத்தர். எனவே பௌத்தம் கற்று அதில் இருந்தே தர்க்கத்தை ஆதிசங்கரன் வைக்கிறார். பின்னால் அதிலுள்ள குறைபாடுகளை தனது 'விசேஷ அத்வைதம்' எனும் பெயரில் விஷிஷ்டாத்தவைதம் கோட்பாட்டால் ஸ்ரீராமானுஜர் களைகிறார்.
ராமானுஜருக்கு முந்தியவரான நம்மாழ்வார், தன் திருவாய்மொழி நூலில் மாயாவாதத்தை எதிர்த்து பல பாடல்கள் எழுதியுள்ளார். இதன் மூலம் நாம் அறிவது, பலர் அந்தகாலத்திலேயே ஆதிசங்கரனை புத்தமதம் பரப்பும் ஒரு நபராகவே பார்த்திருக்கின்றனர்.
பிற்காலத்தில் வைணவமா சைவமா என்ற கேள்வி வந்த போது, வைணவர்கள் ராமானுஜரை தூக்கி பிடிக்க, சைவர்கள் வேறு வழியின்றி ஆதிசங்கரனை கொண்டாடத் தொடங்கினர் என்றே நாம் வைத்துகொள்ள வேண்டும்.
ஆதிசங்கரனை பற்றி நாம் படிக்கும்போது பலஇடங்களில் அவர் வாதம் செய்தார், அங்கே தோற்றவர்களை தன் அதைவைத்த மதத்துக்கு மாற்றினார் என்று சொல்வார்கள்.
அப்படி அவர் எல்லோரையும் வாதம் செய்து வென்றார் என்றால் அந்த வாதங்களை எல்லாம் ஏன் அவரோ அல்லது அவரது சீடர்களோ எழுதிவைக்கவில்லை. எல்லாமே புரட்டு கதைகள், அவர் செய்த வாதங்கள் குறித்து எந்த புத்தகமும் கிடையாது.
ஆயிரக்கணக்கான வரிகளில் பிரம்மசூத்திர பாஷ்யம் எழுதியவரின் சீடர்களில் ஒருவருக்கு கூட இந்த வாதங்களை குறிப்பெடுக்க தோன்றவில்லையா. வாதம் செய்து வென்றார் என்பது எல்லாமே புரட்டு அரசர்களை தன கைக்குள் போட்டுக் கொண்டு அடாவடியாக புத்த மடாலயங்களை அடித்து பிடுங்கிகொண்டனர் என்பதே உண்மை.
தோற்றவர்களை இந்த புதிய கோயில்களில் கடைநிலை வேலைகளுக்கு பயன்படுத்தினர், பெண்துறவிகளை கற்பழித்து பின் கோயில் தாசிகளாக மாற்றிவிட்டனர். இந்த புது மததை ஏற்காதவர்கள் ஊரைவிட்டு தள்ளிவைக்கப்பட்டனர்,
அப்படி தள்ளிவைக்கப்பட்ட பௌத்த மதம் சார்ந்த மக்களுக்கு முதலில் ஏற்பட பிரச்சனை பொருளாதார தனிமை படுத்துதல், இதுவே பின்னர் தீண்டாமை கொடுமையாக மாறியது

இப்படி தான் ஆதிசங்கரன் புத்தமதத்தை உள்வாங்கி செரித்து அதை இந்துமதமாக மாற்றியது. இது அந்தகால கட்ட அரசர்களின் ஆதரவோடு நடந்தவை
----------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக