திங்கள், 26 பிப்ரவரி, 2018

உண்மை குற்றவாளிகள் தலித்தாக இருந்தாலும் கடு மையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பது நமது நிலைபாடு.
................


விழுப்புரத்தில் ஒரு நிர்பயா! பிறப்புறுப்பில் 12 தையல்கள், சிறுமி கொடூர கற்பழிப்பு, திசை திருப்பிய தலித் சாதி வெறியர்கள்.

விழுப்புரம் மாவட்டம், வேலாம்புதூர் கிராமத்தில் தலித் குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் கொடூரமாக தாக்குதலுக்குள்ளாகியும், மகன் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அந்த குடும்பத்தைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். 8ம் வகுப்பு படிக்கும் பெண்ண் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார், அப்பெண்ணின் பிறப்புறுப்பில் 12 தையல்கள் போடப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் ஜிப்மர் மருத்துவமனையில். நிலப்பிரச்சினைக்கு 14 வயது சிறுமியை கூட்டாக கற்பழிக்கும் கொடூரத்தை நிகழ்த்தியுள்ளார்கள்.

இது டெல்லி நிர்பயாவுக்கு நடந்தது போன்ற ஒரு கொடூரம், இதை பெண்ணுக்கு எதிரான குற்றமாக தான் அணுகியிருக்க வேண்டும் (பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தானே தமிழகத்தில் புரட்சியாக கருதப்படுகிறது) இப்பெண்ணுக்கு நடந்த கோரத்தை வெளி உலகிற்கு கொண்டு வந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விவாதங்களையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் தலித் அமைப்புகள் எவிடென்ஸ் கதிர் இக்கொடூரத்தை செய்தது ஆதிக்க சாதியினர் என வன்னிய சாதியினர் மீது அவதூறு கிளப்ப இது சாதிபிரச்சினையானது.

இக்கொலை மற்றும் கற்பழிப்பு தொடர்பாக அதே காலனியை சேர்ந்த ஆலடியான்(45) மற்றும் அவனது 4 நண்பர்கள் கைது செய்யப்பட்டு காவல்துறை விசாரணையில் உள்ளனர். இச்சிறுமியை கற்பழித்த கும்பல் இவர்கள் தான். இவர்களும் தலித் சாதி தான்.

ஒரு சிறுமிக்கு எதிரான ஒரு மாபெரும் குற்றத்தை தலித் சாதி அமைப்புகள் சாதிப்பிரச்சினையாக மடை மாற்றி அந்த தலித் பெண்ணிற்கு ஏற்பட்ட அநீதியை திசை திருப்புகிறார்கள்.

குற்றத்தை குற்றமாக பார்க்கும் போக்கு முதலில் ஊடகங்கள், பொதுமக்கள், கட்சிகள், இயக்கங்கள், தலித் அமைப்புகளுக்கு ஏற்பட வேண்டும். குறிப்பாக பேஸ்புக் போராளிகள் சற்று பொறுமை காத்து பொங்கலாம்.

எல்லா குற்றங்களையும் உண்மை நிலை அறியாமல் சாதியோடு கோர்ப்பது உண்மையாக சாதிக்கொடூரம் நடைபெற்றால் அதை பிறர் நம்பாத நிலைக்கும் உண்மை குற்றத்தின் கொடூரத்தை உணர்த்தாமலும் போய்விடும். விழுப்புரம் கொலையில் உள்ளூர் சிறுத்தைகளே சைலண்ட்டாக உம்முன்னு இருக்கும் போது வெளியூர் எவிடென்ஸ் கதிரும் சென்னை சிறுத்தைகளும் இதை சாதிப்பிரச்சினையாக்க முயன்றுள்ளனர்.

இச்சிறுமிக்கு இந்நிலை ஏற்பட காரணமான கொடூர குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், டெல்லி நிர்பயா படுகொலைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்பட்டது போல இக்கொடுமை குறித்து பேசி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடைசியாக அனைத்து குற்றங்களையும் சாதியோடு இணைத்து பதட்ட அரசியல் செய்ய முனைவது நிறுத்தப்பட வேண்டும்.

........
விழுப்புரம் சம்பவம் பற்றிய Ponnusamy Purushothaman ன் பதிவு
Manage

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக