புதன், 21 பிப்ரவரி, 2018

பூமிக்கு வெளியே கால் வைப்பதற்கு
ஒரு சிறிய இடம் கிடைத்தால் போதும், வைக்க
நான் இந்த பூமியைப் புரட்டித் தள்ளி விடுவேன்
என்றார் ஆர்க்கிமிடிஸ்.அவர்தான் கடவுள்.

இன்று மாலை என் வீட்டின் மொட்டை மாடியில்
வந்து இறங்குமாறு வந்து இறங்குமாறு கடவுளுக்கு கட்டளை இட்டேன்.
அவரும் வருகிறார்.
பொருள்முதல்வாதிகளுக்கு மட்டும் அனுமதி.

அந்தரத்தில் இருந்து லிங்கம் எடுக்க
பயிற்சி அளிக்கிறேன். இயற்பியல் படித்த
(BSc BE DME etc) 21-35 வயதிலான இளைஞர்கள்
விண்ணப்பிக்கலாம். கட்டணம் இல்லை.

ஆர்க்கிமிடிஸ் கிமு காலத்தவர்; கிமு மூன்றாம் நூற்றாண்டு.
அவர் காலத்தில் தொலைநோக்கி கூடக் கிடையாது.
வெறுங்கண்ணால் பார்த்தே வானியல் உண்மைகளைக்
கண்டறிந்த காலம் அவரின் காலம். நிற்க.
**
அவர் நெம்புகோலைக் கண்டு பிடித்தவர். இதனால்
மனித சமூகம் பெரும் நன்மையை அடைந்தது.
நெம்புகோலால் எதையும் நெம்பித் தள்ளி விட
முடியும் என்ற கருத்தை வலியுறுத்தவே ஆர்க்கிமிடிஸ்
இந்தக் கருத்தைக் கூறினார்.
**
அன்று சாத்தியம் இல்லாமல் இருந்த ஆர்க்கிமெடிசின்
விருப்பம் இன்றைய அறிவியல் வளர்ச்சியில் சாத்தியம்
ஆகி விட்டது. இன்றைக்கு விண்வெளியில் மனிதன்
நடமாடும் விண்வெளி நிலையம் அமைத்துள்ளான்.
இந்தியப் பெண்மணி சுனிதா வில்லியம்ஸ் மேற்கூறிய
விண்வெளி நிலையத்தில் (International Space Station)
மாதக்கணக்கில் தங்கி இருந்தார் என்பதை
நினைவு கொள்க.
**
இன்று பூமிக்கே வெளியே உள்ள ISSல் கால் வைத்துக்
கொண்டு, ஒரு வலுவான நெம்புகோலால் பூமியை
புரட்டித்  தள்ளிவிட முடியும். இது சாத்தியம்.
ஆனால் யாரும் செய்யப் போவதில்லை. ஏனெனில்
அதனால் நமக்கு நஷ்டமே.     

பெண்கள் விண்ணப்பிக்க வேண்டாம். ஏனெனில்
பயிற்சியின்போது உடல்ரீதியாகத் தொட்டுத்தான்
பயிற்சி அளிக்க முடியும். இதைத் தவிர்க்கவே
பெண்களுக்கு அனுமதி இல்லை.

பூமி நிலையாக ஒரு இடத்தில் இருக்கும் பொருளல்ல.
அது சுழன்று கொண்டிருக்கும் பொருள் (An object in motion).
In order to disturb it, அதன் வேகத்தில் செல்லும் ஒரு செயற்கைக்
கோளில் நாமும் செல்ல வேண்டும். செயற்கைக் கோளில்
பறந்து கொண்டே, அதில் இருந்து ஒரு கருவியை நீட்டி
பூமியைப் புரட்ட வேண்டும். அப்போது பூமி தடுமாறும்;
நிலை குலையும். இடம் மாறும். அதாவது அது தன்
orbitஐ மாற்றிக் கொள்ளும். அவ்வளவுதான்.
**
பூமியின் மீது மோத வருகின்ற விண்பொருட்களை
விஞ்ஞானிகள் எப்படி சமாளிக்கிறார்கள்? மோத வரும்
பொருளின் பாதையை மாற்றி விடுகிறார்கள். அது
போலத்தான் இதுவும்.  


15 ஆண்டுகளில் ஆணை கட்டி முடிக்கப்பட்டது.
தங்களது கேள்வி நியாயமானதும் அறிவுபூர்வமானதுமான
கேள்வி. சிறிது நேரத்தில் பதிலளிக்கப்படும் தற்போதைய
டைப்பிங் முடிந்ததும்.

பூமி என்பது ஒரு அச்சில் சுழலும் ஒரு rigid body. இவ்வாறு
சுழலும்போது , அந்த சுழற்சியின் வேகம் mass distributionஐ
பொறுத்தது. அதாவது நிறை குறைவான பகுதியில்
வேகமாகச்   சுற்ற முடியும். நிறை அதிகமாக உள்ள
பகுதியில்  இயல்பாக வேகம் குறைந்து விடும்.
பூமியில் சீனா இருக்கும் பகுதியில், இந்த அணை
காரணமாக, அதிகமான நிறை அவ்விடத்தில் செறிந்து
விட்டது. அதாவது moment of inertia அந்த இடத்தில் அதிகம்.
எனவே வேகம்குறைகிறது. இது குறித்து தாங்கள்
கூறியது சரியே.
**
அடுத்து, சீன நெடுஞ்சுவர் கட்டியபோது, அது குறித்த
ஆய்வுகள் இன்றுள்ளது போல அன்று இல்லை.
அதே நேரத்தில் சீன நெடுஞ்சுவர் ஒரு குறிப்பிட்ட
இடத்தில் நிறையை அதிகரிக்கவில்லை. அது
21000 கி.மீ நீளம் என்பதால் நிறையானது சுவர் நெடுக
பரவி நிற்கிறது (distribution of mass is even).
**
முப்பள்ளத்தாக்கு அணை முழுக்க முழுக்க இரும்பாலும்
கான்கிரீட்டாலும் கட்டப்பட்டது. எனவே நிறை அதிகம்.
சீன நெடுஞ்சுவரில் ஒப்பீட்டளவில் இந்த அளவு நிறையும்
நிறையின் செறிவும் கிடையாது. எனவே அதிகமான
moment of inertia இல்லை. எனவே அதிகமான torque
தேவையில்லை. எனவே வேகம் குறையவில்லை.

இந்தப் பதிவைப் படிப்பவர்கள், அதை நன்கு புரிந்து
கொள்ளும் பொருட்டு, புதுமைப் பித்தன் எழுதிய
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்ற அற்புதமான
சிறுகதையை வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

விண்வெளியில் (space) இருந்து பார்த்தால், சீன நெடுஞ்சுவர்
தெரியாது. தாழ் சுற்றுப்பாதை (LEO-Low Earth Orbit)யில்
இருந்து பார்த்தாலும் பார்வைக்குப் புலப்படாது. ஆனால்
புகைப்படம் எடுக்கலாம். ஆற்றல் மிக்க லென்சுகளைக்
கொண்டு ISS விண்ணியலாளர்கள் புகைப்படம்
எடுத்துள்ளனர். புகைப்படத்தில் ஓரளவு தெரியும்.

ஆம், இது சரியே. சுழற்சியின் வேகம் ஒரு சீரானதல்ல
(not uniform) இந்த உண்மை கெப்ளர் காலத்திலேயே
கண்டறியப் பட்ட ஒன்று. perigee, apogee எனப்படும்
அண்மை, சேய்மை நிலைகளில் வேக மாறுபாடு உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக