ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

1) புறாவுக்காக தன் தொடைச் சதையை அறுத்துக்
கொடுத்த சித்தார்த்தனை விடவும், வாடிய பயிரைக்
கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரை விடவும்
வேறு எவரும் கருணை மிக்கவர்களாக இருந்து விட
முடியாது.

2) இங்கு விவாதப் பொருள் தாமஸ் பாதிரியார் புரிந்த
ஆதரவற்ற முதியோர்  1590பேரின் கொலைகள் (as alleged).
கருணை இல்லம் நடத்துவது கருணை காட்டுவதற்கு
மட்டுமே. கொலைகளைப் புரிய ஒரு லைசன்சாக
கருணை இல்லத்தைக் கருதுவது தவறு.

3) தொழு நோயாளிகளைச் சுத்தப்படுத்தித் தொண்டு
செய்த தாமின் அடிகள் (Father Damian) போன்ற கருணையின்
வடிவம் அல்ல தாமஸ் பாதிரியார். அவர் நடத்துவது
கார்ப்பொரேட் கருணை இல்லம். அவரை தாமின்
அடிகளாகக் கருதுவது தவறு.

4) ஒவ்வொரு குற்றம் நடக்கும்போதும், குற்றவாளி
பிடிபடும்போதும், குற்றவாளியின் மதத்தை அல்லது
சாதியைச் சேர்ந்தவர்கள் அவனுக்கு வக்காலத்து
வாங்குவது என்ன நியாயம்? மனித மதிப்பீடுகள்
வீழ்ச்சி அடைந்து விட்ட ஒரு காலக்கட்டத்தில்
நாம் வாழ்கிறோம் என்பது வேதனையானது.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக