வியாழன், 10 டிசம்பர், 2020

வலதுசாரியும் இடதுசாரியும்!

--------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-----------------------------------------------

முன் அறிவிப்பு:

எனது கருத்துக்களோடும் நடைமுறையோடும் உடன்படாதோர் 

எனது பதிவுகளைப் படிக்க வேண்டாம். அவர்கள் வெளியேற 

வேண்டும்.

---------------------------------------------------------------------------- 

ஒரு அறிவுஜீவி என்பவன் முழுநேர இடதுசாரி என்றார்

ழான் பால் சார்த்தர். பிரெஞ்சு அறிஞரான சார்த்தர் 

இலக்கியவாதியும் தத்துவஞானியும் ஆவார். 1964ல் 

இலக்கியத்துக்கான நோபல் பரிசு இவருக்கு 

வழங்கப்பட்டபோது அதை ஏற்க மறுத்தவர் சார்த்தர். 

அவரைப் பற்றி மேலும் அறிந்திட உரிய GK bookஐப் படிக்கவும்.


ஒரு அறிவுஜீவி என்பவன் முழுநேர இடதுசாரி என்பதில்  

ஒரு தற்குறியானவன் முழுநேர வலதுசாரி என்ற 

பொருளும் உள்ளடங்குகிறது. பிரசித்தி பெற்ற அவரின்  

வாக்கியத்தில் இருந்து இரண்டு சமன்பாடுகள் 

கிடைக்கின்றன.

1) அறிவுஜீவி = இடதுசாரி. 

2) கல்வி கற்காதவன் = வலதுசாரி. 

  

படிக்காமல் யாரும் அறிவைப் பெற முடியாது.

எந்த அளவுக்குப் படிக்கிறோமோ அந்த அளவுக்குத்தான் 

அறிவு ஏற்படும் என்கிறார் வள்ளுவர். பள்ளி கல்லூரி 

வழி முறையாகப் பயில்வதும் நூலகங்கள் வாயிலாக 

சுயமாகப் பயில்வதும் படிப்பே ஆகும்.


தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் 

கற்றனைத் தூறும் அறிவு.

(இக்குறளின் பொருள் தெரியாதவர்கள் தெரிந்து 

கொள்ளவும்).


இடதுசாரி, வலதுசாரி என்பதன் வரையறை என்ன?

இச்சொற்கள் (Left, Right) நிலவுடைமைச் சமூக 

காலத்தில் ஏற்பட்டவை. அரசை எதிர்ப்பது இடதுசாரி

என்றும், ஆதரிப்பது வலதுசாரி என்றும் ஏற்பட்டது.

அரசாங்கம், மதங்களின் தலைமைப் பீடம் உள்ளிட்ட

சகல establishmentஐயும் எதிர்ப்பது இடதுசாரி ஆகும்.


வலதுசாரி, இடதுசாரி போன்ற சொற்கள் உருவான 

காலத்தில்  இருந்த அரசுகள் கொடிய மக்கள் விரோத 

அரசுகள். இன்றைய அரசுகள் அவ்வாறில்லை.

இன்று மக்கள் நல அரசுகள் (Welfare state) செயல்பட்டு 

வருகின்றன. சத்துணவு (மேனன்), இலவச பஸ் பாஸ் 

(கருணாநிதி), இலவச லாப்டாப் (ஜெயலலிதா), 69 சத 

இட ஒதுக்கீடு என்றெல்லாம் மக்கள் நலத் திட்டங்கள் 

செயல்படுகின்றன.


ஜெர்மனியில் ஒன்றாம் வகுப்பு முதல் பிஹெச்டி (PhD)

வரையிலான கல்வி முற்றிலும் இலவசம். நிச்சயமாக 

இன்றைய நவீன அரசுகள் முந்தைய நிலவுடைமைச் சமூக 

அரசுகள் போன்று மக்கள் விரோத அரசுகள் அல்ல. 


1) பெரியம்மை, போலியோ போன்ற நோய்களை உரிய 

தடுப்பூசிகள் மூலம் ஒழித்தது இந்திய அரசே.  இன்று 

தமிழ்நாட்டில் நிலவும் அவலம் என்னவெனில், 

தடுப்பூசியை எதிர்ப்பவன் இடதுசாரி என்று அழைக்கப் 

படுகிறான்.


2) மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை அறிமுகப் 

படுத்தி தேர்தல் முறையை அறிவியல்வழியில் 

மேம்படுத்தியது இந்திய அரசு. இன்று EVMகளுக்கு 

எதிரான கடைந்தெடுத்த பிற்போக்குத்தனமான 

அவதூறுப் பிரச்சாரம் தமிழ்நாட்டில்தான் உச்சத்தில் 

இருக்கிறது. அறிவியலுக்கு எதிரான இந்தப்  பிற்போக்குப் 

பிரச்சாரம் செய்பவன் அத்தனை பேரும் தன்னை 

இடதுசாரி என்று அழைத்துக்கொண்டு சுயஇன்பம் 

அடைகிறான்.  


3) இந்தியாவிலேயே காங்கிரஸ் கட்சியில்தான் IQ  

அதிகமுள்ள தலைவர்கள் ஏராளம் இருக்கின்றனர். 

ப சிதம்பரம் (120), சசி தரூர் (119.5), கபில் சிபல் (118), 

அபிஷேக்சிங் மனுவி (118), ஜெய்ராம் ரமேஷ் (119), 

வீரப்ப மொய்லி (118) என்று பல மேதைகள் உள்ளனர். 

EVMகளைக் கொண்டு மோடி மோசடி செய்தால், அதைப் 

பார்த்துக் கொண்டிருக்க இவர்கள் என்ன முட்டாள்களா?


ப சிதம்பரத்தின் மலத்துக்குப் பெறாத பயல் நீ! EVMல் 

மோசடி செய்யலாம் என்று உன்னுடைய புழுத்த மூளைக்குத் 

தெரிந்த விஷயம் சிதம்பரத்துக்குத் தெரியாதா? 

சசி தரூருக்குத் தெரியாதா? 


"அவர்கள் எல்லாம் முட்டாள்கள், நீ அவர்களை விட 

அறிவாளியாடா?" உண்மையிலேயே EVM மோசடி 

மூலம் ஒரு தொகுதியில், ஒரே ஒரு தொகுதியில் 

பாஜக வெற்றி பெற்றிருக்கும் என்றால், ப சிதம்பரம் 

இந்தியத் தேர்தல் ஆணையத்தையே கலைத்து 

விடுவார். தலைமைத் தேர்தல் கமிஷனரை சிறைக்குள் 

தள்ளி விடுவார். ப சிதம்பரத்தின் ஆற்றல் அத்தகையது. 


ஆக, EVMகளை எதிர்க்கிற பிற்போக்குப் பிண்டம் 

எவ்வாறு இடதுசாரி ஆவான்? 


4) புயல் முன்னறிவிப்பு, வானிலை முன்னறிவிப்பு ஆகிய 

பணிகளை மத்திய மாநில அரசுகளே மேற்கொள்ளும்   

என்று இந்தியாவின் பேரிடர் மேலாண்மைச் சட்டங்கள் 

வரையறுக்கின்றன. புயல் முன்னறிவிப்புப் பணிகளில் 

தனியாரையோ NGOகளையோ இந்தியாவின் பேரிடர் 

மேலாண்மைச் சட்டங்கள் அனுமதிக்கவில்லை.

வானிலை முன்னறிவிப்பில் தனியாரையும் NGOகளையும் 

அனுமதிக்க வேண்டும் என்று சொல்பவன் ஒரு சிந்தனைக்

குள்ளனாகத்தான் இருக்க முடியுமே தவிர,  இடதுசாரியாக 

எவ்வாறு இருக்க முடியும்? தனியார் வானிலைக் 

கணிப்பாளர்கள் என்று திரியும் குட்டி முதலாளித்துவ

ஆசாமிகளை ஆதரித்துக் கொண்டு, வானிலை 

முன்னறிவிப்பில் தனியார்மயத்தை ஆதரிப்பவன் 

எப்படி இடதுசாரி ஆவான்?


5) BSNLன் சிம்மைத்தான் நீங்கள் வாங்க வேண்டும் என்று 

நாங்கள் உங்களை வற்புறுத்தவில்லை. அம்பானியின் 

தாசர்களாகிய நீங்கள் Reliance Jio வாங்குங்கள். ஆனால் 

BSNL அழிந்து விட்டது என்றோ, BSNLஐ அம்பானி வீழ்த்தி 

விட்டார் என்றோ அவதூறுப் பிரச்சாரம் செய்யாதீர்கள். 


BSNLக்கு எதிராக அவதூறுப்பிரச்சாரம் செய்பவன் 

எவ்வாறு இடதுசாரி ஆவான்? அவன் அம்பானிதாசனே!

அவன் வலதுசாரியே!


இடதுசாரி முகாமில் மாறுவேஷத்தில் ஒளிந்து 

கொண்டிருக்கும் வலதுசாரிகளை அம்பலப் 

படுத்தி உள்ளேன். தமுஎகசவின் வலதுசாரிகள்,

மாலெ குழுக்களின் வலதுசாரிகள், உதிரிகளாக 

உள்ள வலதுசாரிகள், சவுண்டிப் பார்ப்பான் 

காலச்சுவடு கண்ணனின் ஆதரவாளர்கள், உயிர்மை 

மனுஷ்ய புத்திரனின் கூட்டம், மருதையனின் கூட்டம் 

என்று பலரும் அடிவயிற்றில் குத்துப் பட்டது போல் 

ஆகியிருக்கக் கூடும். இருக்கட்டும்.

**************************************************************** 


        


      


     

 


       

  


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக