சனி, 12 டிசம்பர், 2020

முற்றிலும் புதிய தொழில்நுட்பம்!

தனியார் நிறுவனங்களிடம் இல்லை!

BSNL அறிமுகம் செய்கிறது!

தனியார் நிறுவனங்கள் மூடுவிழா!

----------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------------- 

இந்தியா 5G சேவையில் தொடர்ந்து உலக அளவில் 

பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது பின்தங்கியே உள்ளது.

அறிவிக்கப்பட்ட 5G ஏலம் கொரோனா காரணமாகத் 

தள்ளி வைக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டானது ஒன்றுமே 

செய்ய  இயலாமல் போய் வீணே கழிந்தது. 


ஒத்தி வைக்கப்பட்ட 5ஜி ஏலம்  (4ஜி மற்றும் 5ஜி)  2021ல் 

நடைபெற வேண்டும். எனினும் இதற்கான தேதி 

இன்னும் அறிவிக்கப் படவில்லை. 5ஜி ஏலத்தில் 

பிரதானமாக ஏர்டெல், வோடாபோன், ரிலையன்ஸ் 

ஜியோ ஆகிய நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.


மத்திய அரசு 5ஜி ஏலத்தை உரிய நேரத்தில் தாமதமின்றி 

நடத்தும் என்பதற்கான அறிகுறிகள் இல்லை. மேற்கு வங்கம் 

தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் 2021 ஏப்ரலில் 

சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.  இதைக் 

கணக்கில் கொண்டால், 2021ன் பின்பாதியில்தான் ஏலம் 

அறிவிக்கப் படக்கூடும். இந்தத் தாமதம் யாருக்கு லாபமாக 

அமையும்? 


ஏர்டெல்லுக்கா? அல்லது ஜியோவுக்கா?

அதாவது சுனில் மிட்டலுக்கா அல்லது அம்பானிக்கா?

இக்கேள்விக்கு இடதுசாரிகள் என்போர் பதில் கூற வேண்டும்.


ஜி ஏலம் எப்போது நடைபெற்றாலும் அதில் BSNL

பங்கேற்கப் போவதில்லை. தற்போது கையில் உள்ள 

4ஜியை வைத்துக் கொண்டு SERVICE ROLL OUT  செய்வதே 

BSNLன் வேலை.


மற்ற நிறுவனங்களிடம் 5ஜி இருந்து, BSNLஇடம் அது 

இல்லாமல் போனால் BSNLக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் 

அல்லவா? போட்டியில் பின்தங்கக் கூடும் அல்லவா?


இந்தக் கேள்விக்கு இல்லை என்று பதிலளிக்கிறார் 

பிரவீன் குமார் புர்வார். யார் இவர்? இவர்தான் BSNLன் 

CMD, இவர் என்ன சொல்கிறார்? இந்தியாவிலேயே 

முதல் முறையாக செயற்கைக்கோள் அடிப்படையிலான 

குறுகிய அலைக்கற்றையை (ஐஓடி தொழில்நுட்பத்துடன் 

கூடியது) BSNL பெற்றுள்ளது. இதை BSNL அறிமுகம் 

செய்து SERVICE ROLL OUT செய்யும்போது சந்தையில் 

முதலிடத்தை BSNL பெற்று விடும்.

(ஆங்கிலத்தில்: First Satellite based narrowband IoT; IoT = Internet of Things) 

BSNLஇடம் 5ஜி இல்லாத குறையை இது ஈடு கட்டி விடும்.


ஐஓடி என்றால் என்ன?  Satellite based narrowband என்றால் 

என்ன? இவற்றை விளக்கி தனிக்கட்டுரை எழுதப்படும்.

அறிவியல் தொழில்நுட்ப அறிவு இல்லாமல் இன்றைய 

டெலிகாம் இண்டஸ்டிரி பற்றியோ BSNL பற்றியோ 

புரிந்து கொள்ள இயலாது.


எனவே BSNL அழிந்து விட்டது, BSNLஐ அம்பானி விழுங்கி 

விட்டார் என்றெல்லாம் அவதூறு பேசும் தனியார் 

நிறுவனக் கைக்கூலிகள், அருகிலுள்ள ரயில் 

நிலையத்துக்குச் சென்று, ரயில் வரும்போது 

தண்டவாளத்தில் தலையைக் கொடுத்துச் செத்துப் 

போகும்படி கேட்டுக் கொள்கிறேன். 


BSNL எதிர்ப்பாளர்களான உங்களுக்கு உயிர் வாழும் 

உரிமை  இல்லை.

******************************************************



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக