ஞாயிறு, 6 டிசம்பர், 2020

 புயலில் இருந்து கடவுள் காப்பாற்றுவார் அல்லது காப்பாற்றினார் என்பது எவ்வளவு மோசமான இறை நிந்தனை!

அவரே எல்லாமாக எல்லையற்றவராக இருக்கும் போது எதனிடம் இருந்தாவது கடவுள் காப்பாற்றுவார் என்பது கடவுளுக்கும் அப்பால் ஒரு சக்தி இருக்கிறது என்றாகிவிடும்!
நான் நம்பும் கடவுள் எல்லாம் , முக்காலமும் அறிந்தவர் அவருக்கு நான் ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைப்பது அவரது சக்தியை சந்தேகிப்பதாக அமைந்துவிடும். எனவே நான் அவரிடம் எதுவும் சொல்வதேயில்லை...
கடவுள் ஏதாவது செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதே ஒருவகை இறை மறுப்பு! ஏனெனில் தனக்கு அப்பால் ஒரு சக்தி அல்லது பொருள் இருப்பவர்கள் மட்டுமே ஏதாவது செய்து தொலைக்க வேண்டிக் கிடக்கிறது....
"எல்லாமாகி நிற்கும் எல்லையற்ற சக்தி
அர்த்தம் இழந்து விடுகிறது" இந்த வார்த்தைகளை புரிந்து கொள்ள ஆழமான உணர்தல் தேவை! கடவுளை உணர்வதை போல்...,
4
1 Share
Like
Comment
Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக