புதன், 17 பிப்ரவரி, 2016

நான் ஏன் சீமானை ஆதரிக்கிறேன்?
காரணங்களின் அணிவகுப்பு!!
-------------------------------------------------------------
1) மதிப்புக்குரிய சீமான் அவர்கள் (செபாஸ்டியன் சைமன்)
ஒரு மலையாளியாக இருந்த போதும், அவர் தமிழ்நாட்டின் மீது
அக்கறை செலுத்துகிறார். இது எனக்குப் பிடித்திருக்கிறது.

2) ஒரு கிறித்துவக் குடும்பத்தில் பிறந்த சீமான், இந்துக்
கடவுளான முருகன் மீது பக்தி செலுத்துகிறார். இது
மத நல்லிணக்கத்துக்கு ஒரு முன்மாதிரியாக அமைகிறது.

3) தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் அதே சமயத்தில்தான்
கேரளத்திலும் தேர்தல் நடைபெற உள்ளது. இருப்பினும்
தமது சொந்த மாநிலமான கேரளத்தில் தேர்தலில்
போட்டியிடாமல் தமிழ்நாட்டில் மட்டுமே போட்டி இடுகிறார்.
காரணம் அவருடைய தமிழ்ப்பற்று!

4) கடலூரில் அவர் போட்டியிடுவதாகச் செய்தி வந்துள்ளது.
இது எனக்கு வருத்தம் தருகிறது. CSI பின்னணி உள்ள
கன்னியாகுமரி மாவட்டத்தில் அவர் போட்டியிட்டால் மேலும்
சிறிது வாக்குகள் கிடைக்கும்.

5) சீமானின் துணிச்சல் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.
234 தொகுதியிலும் டெப்பாசிட் இழப்பது உறுதி என்றபோதிலும்
அதைப்பற்றிக் கவலைப் படாமல் தேர்தலில் குதித்துள்ளார்.
இது வரவேற்கக் கூடியதே.

6) மேற்கூறிய காரணங்களால் நான் சீமானை ஆதரிக்கிறேன்.
---------------------------------------------------------------------------------------------------------
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக