திங்கள், 22 பிப்ரவரி, 2016

தமிழர் யார்?
-----------------------
யார் தமிழர் என்று புதிது புதிதாக இலக்கணம் கூறும் 
பல தற்குறிகள் தமிழ்நாட்டில் முளைத்துள்ளனர்.
தங்களின் அற்ப அரசியல் ஆதாயம் கருதி தான்தோன்றித் 
தனமாக வாய்க்கு வந்ததை உளறி வருகின்றனர்.
இத்தகைய கூற்றுகள் அனைத்தையும் இகழ்ச்சியுடன்
குப்பையில் தள்ளுவோம்.

தமிழன் யார் என்பதற்கு இலக்கணம் செய்யாமலா 
தமிழினம் இத்தனை காலம் இருந்து வந்தது!

தமிழனுக்கு இலக்கணம் இதுதான். யாருக்கெல்லாம் 
தமிழ் தாய்மொழியாக இருக்கிறதோ, அவர்கள் அனைவரும் 
தமிழர்களே. மொழி என்பது காலத்தால் முற்பட்டது. சாதி 
என்பது காலத்தால் மிகவும் பிற்பட்டது. சாதி தோன்றும் 
முன்பே மொழி தோன்றி விட்டது. எனவே தமிழைத் 
தாய்மொழியாகக் கொண்ட அனைவரும், எந்த சாதியினராக 
இருந்த போதிலும், அவர்கள் தமிழர்களே.   
--------------------------------------------------------------------------------------------   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக