சனி, 27 பிப்ரவரி, 2016

புரோக்கர் தமிழ்க் கிருமி மணியனின் பொன்மொழி!
உண்மையை உரத்துச் சொன்ன உத்தம புரோக்கர்!
-------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டில் 2016 தேர்தலில் 25 தொகுதிகளில் எங்கள்
கட்சியான காந்திய மக்கள் இயக்கம் போட்டி இடுகிறது
என்ற தகவலைக் கூறினார் புரோக்கர்.

தொடர்ந்து நிருபர் கேட்கிறார்:
தேர்தலில் வெற்றி பெறும் அளவுக்கு உங்கள் கட்சி
வலிமையாக இருக்கிறதா?
புரோக்கரின் பதில்:
--------------------------
எனது இயக்கம் வெற்றி பெறுமா என்பது பற்றியெல்லாம்
கவலை இல்லை. தொகுதிக்கு 2000 வாக்குகள்கூட பெற
முடியவில்லை என்றால், அரசியலில் இருந்து விலகி விடுவது
என்று முடிவு எடுத்துள்ளேன்.

ஆக, தொகுதிக்கு 2000 வீதம் 25 தொகுதியிலும் சேர்த்து
50,000 வாக்குதான் இவரின் லட்சியம். உண்மையைச் சொல்லி
விட்டார் புரோக்கர். என்ன இருந்தாலும் காந்தியவாதி அல்லவா!

சீமானின் நிலைமையும் இதுதான். என்ன வித்தியாசம் என்றால்,
புரோக்கர் சொல்லி விட்டார்; சீமான் சொல்ல மாட்டார்.
அவ்வளவுதான்!
**********************************************************************
தகவல் ஆதாரம்: தமிழ் இந்து 27.02.2016 பக்கம்-6, சென்னை



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக