வியாழன், 25 பிப்ரவரி, 2016

விடுதலை ஆனதும் அரசியலில் குதிக்கிறார் நளினி!
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை எதிர்த்து நளினியை 
நிறுத்த சீமான் திட்டம்! நெடுமாறன் ஆதரவு! வைகோ அதிர்ச்சி!
--------------------------------------------------------------------------------------------------
பன்னிரண்டு மணி நேர பரோலில் வந்த நளினியை நேரில் 
சந்தித்துப் பேசிய ஒரே தலைவர் எங்கள் சீமான்தான் என்று 
மார்தட்டுகிறது நாம் தமிழர் வட்டாரம். சீமான்-நளினி 
சந்திப்பின் புகைப்படம்  உலக நாடுகள் எங்கும் புலம் 
பெயர்ந்த தமிழர்கள் வாழும் பகுதிகளில் அதிவேகமாகப் 
பரவி வருகிறது. புகைப்படம் எடுக்கப்பட்ட சில மணி 
நேரத்திலேயே மில்லியன் கணக்கில் 
இப்புகைப்படம் உலகெங்கும் பரவி விட்டதாக சீமானின் 
ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

எந்தத் தலைவரையும் சந்திக்க மறுத்த நளினி எங்கள் தலைவர் 
சீமானை மட்டும் சந்தித்ததன் சூட்சுமம் வரவிருக்கும் தேர்தலில் 
வெளிப்படும் என்றனர் நாம் தமிழர் வட்டாரத்தினர்.

திராவிடத்தை அழித்தால்தான் தமிழ் தேசியம் வாழ முடியும்.
எனவே திராவிடத்தின் தந்தையான பெரியாரின் நேரடி 
வாரிசான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை எதிர்த்து நாம் தமிழர் 
கட்சியின் வேட்பாளராக நளினி போட்டியிடுவார் என்றனர் 
சீமானுக்கு நெருக்கமானவர்கள். இது குறித்துப் பேசவே 
சீமான் நளினியைச் சந்தித்தார் என்றும் நளினியின் சம்மதத்தை
சீமான் பெற்று விட்டார் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.  

நளினி விரைவில் விடுதலையாகி விடுவார். விடுதலையானதும் 
சிறை வாசலில் வைத்து நாம் தமிழர் கட்சி மாபெரும் வரவேற்புக் 
கொடுக்கும். அந்தக் கூட்டத்திலேயே நளினியை நாம் தமிழர்
வேட்பாளராக சீமான் அறிவிப்பார் என்றனர் சீமானின் 
தோழர்கள்  மிகுந்த நம்பிக்கையுடன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக