செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

கூடங்குளம் உதயகுமாரின் பித்தலாட்டம் அம்பலம்!
சிறையில் இருந்த முகிலன் உதயகுமாரைச் சந்திக்க மறுப்பு!
----------------------------------------------------------------------------------------------
அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தியதற்காக,
தன மீது போடப்பட்ட வழக்குகளை எதிர்கொள்ளும் பொருட்டு 
அணுஉலை எதிர்ப்புப் போராளிகளில் ஒருவரான தோழர் 
முகிலன் தாமே முன்வந்து சிறை சென்றார். பாளையங்கோட்டைச் 
சிறையில் அவர் இருந்தபோது, அவரைச் சந்திக்க உதயகுமார் 
சென்றார். ஆனால் மோசடிப் பேர்வழியான உதயகுமாரைச்
சந்திக்க முடியாது என்று முகிலன் மறுத்து விட்டார்.

இந்த உண்மையை உதயகுமாரே  ஒப்புக் கொண்டு ஒப்புதல் 
வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்தச் செய்தி இந்தியன் 
எக்ஸ்பிரஸ் ஏட்டில் வெளிவந்துள்ளது. 
(பார்க்க: The New Indian Express, Chennai page, page number-4 dtd 09 Feb 2016).

அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு உதயகுமார் துரோகம் 
இழைத்து விட்டதாகவும், பல்வேறு பித்தலாட்டங்களைச் செய்து 
மக்களை ஏமாற்றி வருவதாகவும், இவ்வளவு மோசமான 
ஏமாற்றுப் பேர்வழியைத் தான் சந்திக்க விரும்பவில்லை என்றும் 
முகிலன் தரப்பு கூறுகிறது.

ஆக, போலியான  அணு உலை எதிர்ப்பு மூலம் பித்தலாட்டமும் 
மோசடியும் செய்துவரும் உதயகுமாரின் முகத்திரை 
கிழிந்து தொங்குகிறது.
*********************************************************************     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக