புதன், 17 பிப்ரவரி, 2016

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு  இரண்டாக உடைந்தது!
--------------------------------------------------------------------------------------
பூவுலகின் நண்பர்கள் அமைப்பு இரண்டாக உடைந்து விட்டது.
நிதி மோசடி, ஊழல் ஆகிய குற்றங்கள் வலுவாக முன்வைக்கப்
படுகின்றன. திரு சுந்தரராஜன் தரப்பு, திரு ஜார்ஜ் தரப்பு என்று
இரு குழுக்களாகப் பிளந்து நிற்கிறது. இதில் மாற்றுத் தரப்பு
(திரு ஜார்ஜ் தரப்பு) முன்வைக்கும்  உண்மைகள்.

பிளவுக்கு முக்கியமான காரணம்:
-------------------------------------------------------
பூவுலகின் நண்பர்கள் அமைப்பை வெறும் சாய்வு நாற்காலி
விமர்சகர்கள் (arm chair critics) அமைப்பாக மட்டுமே நடத்த
வேண்டும். எந்த விதமான போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது.
..... இது பொறியாளர் சுந்தரராஜன் தரப்பு வாதம்.........

இல்லை, இல்லை. தேவையானபோது போராட்டத்திலும்
ஈடுபட வேண்டும். தோழர் முகிலன் கூடங்குளம் வழக்கில்
சிறை சென்றது போல, தேவைப்பட்டால் சிறை செல்லவும்
வேண்டும்.
.......இது தோழர் ஜார்ஜ் தரப்பு.

பல லட்சக் கணக்கான சொத்துக்களை சுந்தரராஜன் தரப்பு
கைப்பற்றி விட்டதாக கூறப் படுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம்.
------------------------------------------------------------------------------------------------   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக