புதன், 8 நவம்பர், 2017

அறிவியலுக்கு எதிராக சாதியியலை வைப்பதா?
சாதிக் காழ்ப்புச் சீழை இங்கு வடிக்க வேண்டாம்!
-----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல்  மன்றம்
-------------------------------------------------------------------------------------------
1) மானுடப்  பிறவியில் தனியொரு மனிதன் அறிவுத் திறனில்
 எவ்வளவு உச்சம் தொட முடியும் என்று அளந்து அறிவதே
IQ ஆகும். காலந்தோறும் இது அளவிடப் படுகிறது.
உதாரணமாக, சக்கரத்தைக் கண்டறிந்தவனும்
பூஜ்யத்தைக் கண்டறிந்தவனும் அக்கால மாந்தரில்
IQ அதிகம் பெற்றுத்  திகழ்ந்தனர் என்பது வரலாறு.

2) IQ என்பது தனிநபர் சார்ந்து அளவிடப் படுவது.
 IQ  is person oriented. It is an assessment of an individual person.
It is not measured collectively.

3) உதாரணமாக, சென்னை நகரின் மொத்த IQ என்றோ,
சூத்திரர்களின் மொத்த IQ என்றோ,  நாடார்களின் மொத்த
IQ என்றோ அளவிட முடியாது; அளவிடப் படுவதில்லை.
ஏனெனில், துல்லியமாக அளவிடுவது என்பது தனி ஒரு
மனிதனைப் பொறுத்துதான் சாத்தியமே தவிர
ஒரு கூட்டத்தாரைப் பொறுத்து சாத்தியமல்ல.

3) ராமானுஜன், சி.வி.ராமன், விஸ்வநாதன் ஆனந்த் என்ற
மூன்று பேர் IQ தரத்தில் முதல் மூவராக உள்ளனர்
என்பது இந்தியாவைப் பொறுத்து. ஓர் அறிவியல்
உண்மை ஆகும். இதை முதலில் சொன்னவன் நான்.
எனினும்  இது இன்று சொன்னதல்ல. பல
ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது. இதை அறிவியல்
உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

4) இது தவறு என்று சொல்பவர்கள், வேறு எந்த
மூன்று பேர் அந்த இடத்தில் இடம் பெற வேண்டும்
என்று சொல்ல வேண்டும். சொன்னால் மட்டும் போதாது.
அவர்கள் நான் கூறிய மூவரை விட, எவ்வாறு
அறிவுத் திறனில்  மேலோங்கியவர்கள் என்று
நிரூபிக்க வேண்டும்.

5) அதை விட்டு, சூத்திரக் கூட்டம்தான் அறிவில்
உயர்ந்தது என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி
விட்டுப் போவது பேதமையுள் எல்லாம் பேதைமை.
ஒரு கூட்டத்தாரின் IQ என்று துல்லியமாக அளக்க
இயலாது.

6) Y2K பிரச்சினைக்கு நிரல் எழுதியதை மகத்தான
அறிவுத்திறனின் வெளிப்பாடாகக் கூறுவது
நகைப்புக்கு உரியது. Y2K தீர்வு என்பது LKG
விவகாரம். அன்று நான் இரவுப்பணியில் இருந்தேன்.
(0000 hoursல்தான் அது effectக்கு வரும்). அந்த  ஞாபகம்
இன்றும் பசுமையாக உள்ளது.

7) சதுரங்கம் பற்றி ஆனா ஆவன்னா தெரியாமல்
பேசுவதை ஏற்க இயலாது.  ஆனந்துக்கு முன்
இந்தியாவில் ஒரு GM (Grand Master) கூடக் கிடையாது.
இந்தியாவின் முதல் GM அவர்தான். இன்று வரை
இந்தியாவில் அவரை மிஞ்சிய ஒரு சதுரங்க வீரரை
காட்ட இயலுமா?

8) கலைஞர் ஒருமுறை கூறினார்: என்னிடமே இலக்கிய
சர்ச்சையா என்று. கலைஞர் கூறியதில் உள்ள ஏகாரம்
என்ன பொருளில் வந்தது என்று யாரேனும் தமிழ்ப்
புலவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.
அது போல, சூத்திர மேன்மையைப் பற்றி என்னிடமே பேசுவதா? இதில் உள்ள ஏகாரம் உயர்வு சிறப்பு
என்று உணர்க.
           
9) இமாலயத் தவறு என்றெல்லாம் வார்த்தையைக்
கொட்டுவது அறியாமையின் வெளிப்பாடு. இங்கு
ZERO TOLERANCE towrds ignorance கடைப்பிடிக்கப் படுகிறது.

10) எமது இந்தப் பதிவு வெறும் கருத்து அல்ல. இது
நிரூபிக்கப்பட்ட தேற்றம் ஆகும். இதை அறிஞர்கள்
கூடிய அவையில் நிரூபித்து இருக்கிறேன்.

11) நான் பேசுவது அறிவியல். அதற்கு மாற்றாக
சாதியியலை முன்வைக்கக் கூடாது. மூளை
முழுவதும் சாதியச் சீழ் பிடித்துப் போய், அறிவியலுக்கு
எதிராக சாதியத்தை வைக்கும்  அசிங்கத்தைக்
கண்டு அருவருக்கிறேன்.

12) அறிவின் மேன்மையை மதிக்கத் தெரியாத
அற்பத் தனத்தை இங்கு அனுமதிப்பதில்லை.
அறிவியல் வெல்லும்! சாதியம் தோற்கும்!
------------------------------------------------------------------------------------
நான் மதம் மாறவில்லை! வைகோ மறுப்பு!
------------------------------------------------------------------------------
எதிர்பார்த்தது போலவே வைகோ அவர்கள் தாம்
கிறிஸ்துவர் ஆனதாக வந்த செய்தியை மறுத்து
இருக்கிறார். (இன்றைய 08.11.2017 ஆங்கில இந்து ஏடு).
இருப்பினும், இது சம்பிரதாயமான மெலிந்த
மறுப்பாக இருக்கிறது. It is a trivial and simple denial.
He should have denied it in no uncertain terms. He has trivialised the issue.

எனினும் தம் வீட்டில் தம் மருமகன் கிறிஸ்துவர்
என்ற உண்மையை ஏற்றுக் .கொண்டு இருக்கிறார். 

வைகோவின் பாணியிலானஆவேசமான மறுப்பு
என்பதை எதிர்பார்த்த நமக்கு சற்று ஏமாற்றம்தான்.
இன்னும் காலம் கனியவில்லை போலும்!

தற்போது வைகோவின் மறுப்பை ஏற்கவே மனம்
விரும்புகிறது. இந்துவாக இருந்து கிறிஸ்துவர்
ஆவதையோ அல்லது இந்துவில் இருந்து இஸ்லாமுக்குச்
செல்வதிலோ நமக்கு அக்கறை இல்லை.

ஆனால் நாத்திகத்தில் இருந்து கிறிஸ்துவத்திற்குச்
செல்வது மனவேதனை தரும் ஒரு விஷயம்.

இன்னுமொரு  பெரியார்தாசன்  ஆகாமல்
இருந்தால் சரி.
******************************************************
வைகோவின் துணைவியார் ரேணுகா அம்மையார்
கிறிஸ்துவராக மதம் மாறியதில் இருந்து, இந்துமத
வழக்கமான நெற்றியில் திலகம் இடுவதில்லை.
இந்தப் படம் ஒரு முக்கியமான விசேஷத்தின் போது
எடுத்த படம். விசேஷ நிகழ்வின்போதே அவர்
பொட்டு வைக்கவில்லை என்பதைச் சுட்டிக்
காட்டுகின்றனர் கிறிஸ்துவ அன்பர்கள்.   

அமெரிக்காவில் நிறைய சொத்து சார்ந்த நலன்கள்
வைகோ குடும்பத்துக்கு இருக்கின்றன. வைகோவின்
பிள்ளைகள் அமெரிக்காவில் இருக்கின்றனர். அமெரிக்கா
கிறிஸ்துவ மதத்திற்கு முதன்மையும் முக்கியத்துவமும்
தரும் நாடு.  எதிர்காலம் கருதியும், பிள்ளைகளின்
சொத்துகள், அவற்றின் பாதுகாப்பு ஆகியவற்றைக்
கருதியும் வைகோ ஒரு முடிவை எடுத்துள்ளார்.
இன்னும் காலம் கனியவில்லை. காலம் கனிந்ததும்
உண்மையை ஒப்புக் கொள்வார்.
**
பாவ சங்கீர்த்தனமும் நாம சங்கீர்த்தனமும் செய்வார்.
ஆமென்.  

  



  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக