திங்கள், 13 நவம்பர், 2017

தமிழகம் முழுவதும் 412 நீட் பயிற்சி மையங்களை
அரசு அமைக்கிறது. முதல் கட்டமாக 100 மையங்கள்
இன்று தொடங்கப் பட்டுள்ளன. சென்னையில் உள்ள
நீட் பயிற்சி மையத்தை இன்று சற்றுமுன் (13.11.2017,மதியம்
12.30 மணி) முதல்வர் எடப்பாடி தொடக்கி வைத்தார்.
தமிழ் மீடியம், ஆங்கில மீடியம் இரண்டுக்கும்
தேவையான வழிகாட்டிப் புத்தகங்கள்
(guides and study materials) மாணவர்களுக்கு  வழங்கப்படும்
என்று எடப்பாடி தெரிவித்தார்.
**
எனவே தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்களுக்கான
நீட் தேர்வு வழிகாட்டி மற்றும் முந்திய ஆண்டு  
வினா-விடை மற்றும் தேவையான  அனைத்தையும்
தயாரித்து  வழங்குவது அரசின் பொறுப்பு. அரசை
வலியுறுத்துவது நம் கடமை.
**
தனிப்பட்ட முறையில் எந்தப் பள்ளியிலும், தமிழ்
மீடியத்தில் வழிகாட்டிப் புத்தகங்கள் இல்லை.
இது நான் விசாரித்து அறிந்தது. ஆங்கிலத்தில்
உள்ள கேள்விகளை அப்படியே தமிழாக்கம் செய்து
ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்பிக்கிறார்கள்.
எல்லோரும் அரசு தயாரித்து வழங்கும் வழிகாட்டி
நூல்களுக்காகக் காத்திருக்கிறார்கள்.  
------------------------------------------------------
நலம்சார் நடவடிக்கையும் NGO செயல்பாடும்!
--------------------------------------------------------------------------------
இணையம் உள்ளிட்ட எல்லாவிதமான தகவல்
மூலங்களையும் (sources of information) ,பரிசீலித்ததில்
தமிழ் வழியில் நீட் தேர்வு எழுதுவோருக்கு உதவும்
பாடங்களோ, வினா விடைகளோ தமிழில் இல்லை.
ஆனால் ஆங்கிலத்திலும் இந்தியிலும் உள்ளன.
இணையத்துக்கு வெளியிலும் இதுதான் நிலைமை.
**
ஆக, தமிழ் வழியில் நீட் எழுதும் மாணவர்களுக்கு
பாரபட்சமான சூழல்தான் உள்ளது. தமிழக அரசு
வெளியிடும் தமிழ் வழியிலான நீட் தேர்வுக் கையேடுகள்
விரைவில் வரவுள்ளன. என்றாலும் அது மட்டும் போதாது.
ஆர்வமுள்ள மற்றவர்களும், தனியாரும் தமிழ் வழி
நீட் வழிகாட்டியை வெளியிட வேண்டும்.
**
தமிழ் வழி நீட் தேர்வாளர்களின் இத்தகைய சிரமங்களை
அம்பலப் படுத்துவதும், அவற்றுக்கு பரிகாரம் தேட
முயற்சி செய்வதும் வரவேற்கப்பட வேண்டியவையே.
இது NGO செயல்பாடு அல்ல. இது ஒரு welfare activity.
அவ்வளவே. இதனால் பயன் பெறுவது தமிழ் வழியில்
படிக்கும் ஏழை எளிய மாணவர்களே.
**
உண்மையில் நீட் எதிர்ப்பு என்பதில்தான் NGO
செயல்பாடு அதிகம் உள்ளது. தமிழகத்தில் நீட்டை
எதிர்க்கும் பிரபல "கல்வியாளர்" பிரின்ஸ் கஜேந்திர
பாபு ஒரு NGOவை நடத்தி வருபவர். நீட்டை
எதிர்த்தால்தான், இவரின் NGOவுக்கு அந்நிய நிதி
உதவி கிடைக்கும்.  எனவே அந்நிய நாட்டின் நிதியைப்
பெறுவதற்காகவே NGO நடத்தி, நீட்டை எதிர்க்கிறவர்
இவர்.
** 
பிரின்ஸ் கஜேந்திர பாபு ஒரு கல்வியாளர் அல்ல
(Not at all an academician). அவர் ஒரு தனியார் மெட்ரிக்
பள்ளியை நடத்தி வருபவர். AIFRTE என்ற
பெயரிலான NGO அமைப்பில் (All India Forum for Right to Education)
பிரின்ஸ் கஜேந்திரபாபு பொறுப்பு வகிக்கிறார்.
உலக சமூக மாமன்றம் (World Socialist Forum) என்ற
பெயரிலான மார்க்சிய எதிர்ப்பு அமைப்புடன் பிரின்ஸ்
தொடர்பு உடையவர். அவரின் நீட் எதிர்ப்பு அவரின்
சுயலாபத்தை மையமாகக் கொண்டது.
******************************************************
    
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக