ஞாயிறு, 28 டிசம்பர், 2014

பெருமாள் முருகனின் நாவலுக்கு எதிர்ப்பு!
உள்மர்மம் என்ன?
-------------------------------------------------------------- 
வீரை பி இளஞ்சேட்சென்னி 
----------------------------------------------------------------
1) பெருமாள் முருகனின் "மாதொரு பாகன்" என்ற நாவலுக்கு 
எதிர்ப்பு எழுந்து உள்ளது.

2) காலச்சுவடு பதிப்பகம் இந்நூலை  நூலை வெளியிட்டு உள்ளது.

3) ஒட்டு மொத்தத்தில் இந்த நாவலுக்கான எதிர்ப்பு என்பது வெறும் 
    PUBLICITY STUNT  தவிர வேறு ஒன்றும் இல்லை.

4) எழுத்தாளர், பதிப்பாளர், RSS அபிமானிகளின் 
புனிதமான இலக்கியச்  சந்திப்புக்குப் பிந்தைய 
"தண்ணியடிப்பின்" போது இதற்கான கரு (120B ) உருவானது.

4) காலச்சுவடு மாபெரும் பதிப்பக சாம்ராஜ்யம்.
பார்ப்பன சாம்ராஜ்யம்.

5) பெருமாள்முருகன்  ஒரு குட்டிமுதலாளித்துவ 
அற்பவாதி( PETTI BOURGEOIS PHILISTINE )

6) மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு 
உயர் நடுத்தர வாழ்க்கையை நிறைவுடன் வாழ்பவர். இவர் 
உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர் அல்லர்.

7) கடும் அதிர்ச்சி மதிப்பு (SHOCK VALUE ) உள்ள ஒரு  விஷயம் 
பற்றிக் கதை அல்லது நூல் எழுதுவது , பின்னர் அந்நூலின் மீது 
ஒட்டு மொத்த சமூகத்தின் கவனத்தையும் திருப்புவது,
பின்னர் காசு பார்ப்பது ..............இதுதான் காலச் சுவடின் உத்தி.

8) இந்நூலில் கடவுளைப் பற்றி (திருச்செங்கோடு உமையொருபாகர் )
எவ்வித அவதூறும் இல்லை. 

9) பெருமாள் முருகன் நாத்திகப் பிரச்சாரகர் அல்லர் .
நாத்தழும்பேற நாத்திகம் பேசுபவர் அல்லர்.  
காலச்சுவடு கண்ணன் நாத்திகர் அல்லர்.

10) கொங்கு மண்டலப் பெண்கள் விபச்சாரம் செய்யும் 
வழக்கம் உடையவர்களாய் இருந்தார்கள் என்பதுதான் 
இந்நாவலில் முருகன் கூறி இருக்கும் செய்தி.

11) தமிழ்ப் பெண்கள் விபச்சாரிகள் என்று நிறுவுவதுதான் 
காலச் சுவடின் நோக்கம்.அதை இந்த நாவல் 
செவ்வனே செய்கிறது.

12) நாவல் என் கையில் இருக்கிறது. முதல் வாசிப்பை 
முடித்து விட்டேன். இதைத் திறனாய்வு செய்யும் 
வீண் வேலையில் நான் ஈடுபட விரும்பவில்லை.. 

13) காலச்சுவடின் நுண்ணரசியல் (MICRO POLITICS )
புரியாமல், பலரும் பெருமாள் முருகனின் "கருத்துரிமை"யை 
ஆதரித்துக் கொண்டு இருப்பது முழு மூடத்தனம்.

14) கூச்சல் எழுப்புவதில் முன்னணியில் இருப்பது 
த .மு.எ.க.ச எனப்படும் பார்ப்பன மார்க்சிஸ்ட் கட்சியின் 
எழுத்தாளர் அமைப்பு. இது நுண்ணரசியல் செய்யும் பார்ப்பன 
அமைப்பு.

15) பார்ப்பனீயத்தின் நுண்ணரசியல் புரியாமல், ஒரு நாள் 
காலை சூரியன் உதித்ததும், திடீர் என்று கிளம்பி விட்ட 
"கருத்துரிமைப் போராளி"களின்  மூடத்தனத்தை  நினைத்து
நான் வருந்துகிறேன்.

பின் குறிப்பு:    
--------------------- 
 இக்குறுங்கட்டுரை இலக்கியம், பதிப்புலகம், 
மார்க்சியம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பரிச்சயம் 
உடைய வாசகர்களை மனத்தில் கொண்டு எழுதப் பட்டது.
பரந்துபட்ட வாசகர்களுக்காக இது எழுதப் படவில்லை.
"பிறழ்புரிதல்"ஐத் தவிர்க்கவே இந்த அறிவிப்பு.

*************************************************************    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக