செவ்வாய், 30 டிசம்பர், 2014

அதிமுகவின் கருங்காலிச் சங்கம் தனிமைப் படுகிறது!
போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டம் வெல்க!!
(பழைய பதிவை மீண்டும் பிரசுரிக்கிறோம்!)
------------------------------------------------------------------------------------ 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
----------------------------------------------------------------------------------------- 
28.12.2014 அன்று தொடங்கி, இன்று மூன்றாவது நாளாகத் 
தொடர்ந்து முரசு கொட்டும், தமிழக  அரசுப்  போக்குவரத்துத் 
தொழிலாளர்களின் போராட்டம் வெல்க! வெல்க!!

11 சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த வேலைநிறுத்தத்தை
நடத்துகின்றன. அதிமுக சங்கம் மட்டும் கருங்காலித்தனம் 
செய்கிறது. உலகத் தொழிற்சங்க வரலாற்றிலேயே, 
பிறந்தது முதல் கருங்காலித்தனத்தை மட்டுமே 
செய்து கொண்டு இருக்கும் அதிமுகவின் சங்கம் 
தனிமைப் பட்டு நிற்கிறது.    

தொழிலாளர்கள் மத்தியில் கருங்காலிகளை உருவாக்க வேண்டும்,
தொழிலாளர்களின் போராட்டத்தை உடைக்க வேண்டும் என்ற 
ஒரே நோக்கத்துக்காக  எம்.ஜி.ஆரால்  உருவாக்கப் பட்ட
"அண்ணா தொழிற்சங்கப் பேரவை"யை போர்க்குணம் மிக்க 
போக்குவரத்துத் தொழிலாளர்கள் முறியடிப்பார்கள் என்பது 
திண்ணம்.

********************************************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக