வியாழன், 25 டிசம்பர், 2014

மதப் பண்டிகைகளுக்கு  
வாழ்த்துச் சொல்லுவது இல்லை!
-------------------------------------------------------
தீபாவளி முதலிய இந்துப் பண்டிகைகள்,
கிறிஸ்துமஸ் முதலிய கிறிஸ்துவப் பண்டிகைகள்,
ரம்ஜான் முதலிய இஸ்லாமியப் பண்டிகைகள் 
ஆகியவற்றுக்கு நாம் வாழ்த்துச் சொல்லுவது இல்லை.

மதங்களின் பிடியில் இருந்து மானுடம் விடுதலை 
அடைய வேண்டும் என்பதே எமது நிலை.

தைத் திங்கள் முதல் நாளில் வரும்
பொங்கல்  எனப்படும் உழவர்  திருநாள் 
(அதாவது தமிழர் திருநாள் ), மே முதல் நாளில் வரும் 
மே நாள் எனப்படும் தொழிலாளர் திருநாள் 
ஆகியவற்றை நாம் ஈடுபாட்டுடன் கொண்டாடுவோம்.
வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளுவோம்.

தேசிய அறிவியல் நாள் (பெப்ருவரி 28 ),
தேசிய கணித நாள் (டிசம்பர் 22 )
நியூட்டன், ஐன்ஸ்டீன் போன்ற அறிவியல் 
அறிஞர்களின் பிறந்த நாட்கள், 

பாரதியார், பாவேந்தர் ஆகிய பெருங் கவிஞர்களின் 
பிறந்த நாட்கள்,

இந்திய அரசு விழா நாட்களான சுதந்திர நாள்,
குடியரசு நாள், மகாத்மா காந்தி பிறந்த நாள் 
ஆகியவை,

அவ்வப்போது ஐ.நா மன்றம் அறிவிக்கும் நாட்கள்,

காரல் மார்க்ஸ், எங்கல்ஸ் பிறந்த நாட்கள்-நினைவு நாட்கள்,
பெரியார், அண்ணா பிறந்த நாட்கள்-நினைவு நாட்கள் ,
மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் ( ஜனவரி 25 )
ஆகிய நாட்களையும் (இவை போல்வன உள்ளிட்டு )
மட்டுமே நாம் அனுசரிப்போம்.

எந்த நிலையிலும் மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் 
சொல்லும் அளவுக்கு நாம் தரம் தாழ்ந்து போய் விட மாட்டோம்.
இதுவே நியூட்டன் அறிவியல் மன்றத்தின் நிலை 
தெளிவான நிலை..

பி. இளங்கோ சுப்பிரமணியன் தலைவர்,
நியூட்டன் அறிவியல் மன்றம்,
சென்னை 
*****************************************************888

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக