செவ்வாய், 30 டிசம்பர், 2014

தமிழ்ப் பெண்களை விபச்சாரிகள் என்று எழுதிய
பெருமாள் முருகன் தமிழ் இனத் துரோகி!
-----------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
------------------------------------------------------------------------------
1) மாதொருபாகன் என்ற தமது நாவலில்,
கொங்கு நாட்டுத் தமிழ்ப் பெண்கள் அனைவரும்
கோவில் திருவிழாவின்போது விபச்சாரம்
செய்தவர்கள் என்று பெருமாள் முருகன் எழுதி உள்ளார்.

2) திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் கோவில்
திருவிழாவின்போது, சூத்திரப் பெண்கள் அனைவரும்,
திருவிழாவுக்கு வரும் வெளியூர் ஆண்களுடன்
வரைமுறையின்றி உடலுறவு கொண்டு குழந்தைகளைப்
பெற்றுக் கொள்வார்கள் என்று எழுதி உள்ளார்
பெருமாள் முருகன்.

3) யாரோ ஒருத்தி, தனி ஒரு பெண்ணாகச் சோரம்
போனது பற்றிய கதை அல்ல இது. கொங்கு நாட்டுச்
சூத்திரச் சமூகம் முழுவதுமே, இவ்வாறு சோரம் போவதை
மரபாகக் கொண்டு இருந்தது என்று எழுதி உள்ளார்
பெருமாள் முருகன்.

4) கொங்கு மண்டலத்தில் வாழும் சூத்திரச் சாதிகளான,
கவுண்டர்கள், கருணீ கர்கள் உள்ளிட்ட பல்வேறு
சூத்திரச் சாதியினருக்கு, திருச்செங்கோடு அர்த்த
நாரீஸ்வரர் கோவிலில் மண்டகப்படி உரிமை உண்டு.
இவ்வாறு மண்டகப்படி உரிமை பெற்ற அனைத்து
சூத்திரச் சாதி பெண்களுமே, திருவிழா நாட்களில்,
வேற்று ஆண்களுடன் உடலுறவு கொள்வதைக்
குல வழக்கமாகக் கொண்டு இருந்தனர் என்று
எழுதி உள்ளார் பெருமாள் முருகன்.

5) இது ஒரு கற்பனையான நாவல்தானே என்று யாரும்
புறம் தள்ளி விட முடியாது. தமது நாவல் கற்பனை அல்ல
என்றும், கள  ஆய்வுகளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு
பெறப்பட்ட உண்மை என்றும் அடித்துக் கூறுகிறார்
பெருமாள் முருகன்.

6) குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்:
     --------------------------------------------------------------
தமது ஆய்வுக்கு பன்னாட்டு நிறுவனங்களின் நிதியைப்
பெற்றதாக குற்றவாளி பெருமாள் முருகன் தமது
நாவலின் முன்னுரையில் ஒப்புதல் வாக்குமூலம்
அளித்து உள்ளார்.

7) இந்த நாவலைப் பதிப்பித்தவர் காலச்சுவடு கண்ணன்.
இவர் மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் மகன்.
காலச்சுவடு பதிப்பகம் தமிழ் பதிப்பக உலகில்
வருவாயில் லாபத்தில் முதல் இடத்தில் இருக்கும்
மாபெரும் கார்ப்பொரேட்  நிறுவனம் என்பதைத்
தமிழ் உலகம் நன்கு அறியும்.காலச்சுவடு நிறுவனம் 
தமிழ் இலக்கிய உலகை, பதிப்பக உலகை பேரளவுக்கு
ஆக்கிரமித்துக் கொண்ட கொடிய பார்ப்பன நிறுவனம்
என்பதையும் தமிழ் உலகம் நன்கு அறியும்.

8) இந்த நாவலில் நாத்திகப் பிரச்சாரம் என்று எதுவும் கிடையாது.
பெருமாள் முருகன் நாத்திகப் பிரச்சாரத்தைப் பணியாகக்
கொண்டவர் அல்லர்.

9) 2010இல் எழுதப் பட்ட இந்த நாவல், மெது மெதுவாகத்தான்
கொங்கு மண்டலச் சூத்திரர்களிடம் பரவியது. ஒரு நாவல்
வந்த உடனேயே, அதைப் படித்துப் பார்த்து, திறனாய்வு செய்கிற
அளவுக்கு, கொங்கு மண்டலச் சூத்திரச் சமூகம், கலை இலக்கிய ஜாம்பவான்களால் நிரம்பிய சமூகம் அல்ல,

10) ஆரம்பத்தில் இந்தப் போராட்டம் சூத்திரச் சமூகத்தின்
பல்வேறு சாதியினரும் ஒன்றிணைந்த போராட்டக் குழுவினரால்
மட்டுமே தொடங்கப் பட்டது. போராட்டத்தை மோப்பம்
பிடித்த இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ் கும்பல், போராட்டத்துக்குள்
நுழைந்து கொண்டனர். இந்துக் கடவுளையும் இந்து மதத்தையும்
பக்தர்களையும் இழிவு செய்யும் நாவலை எதிர்த்த போராட்டம்
என்று அறிவித்தனர்.

11) போராட்டத் தலைமையை ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஏற்கும் முன்பு,
காலச்சுவடு நிறுவனத்துக்கும் இதுபற்றி அறிவித்து, கலந்து
ஆலோசித்து, காலச்சுவடின் ஆசியுடனேயே இப்போராட்டத்தை
நடத்தினர். தனக்கு நல்ல பிரபலம் (publicity) கிடைக்கும் என்று
ஆதாயம் கருதி காலச்சுவடும் இப்போராட்டத்துக்கு ஒப்புதல்
அளித்தது.

12) திரைமறைவில் நடைபெற்ற இவற்றை எல்லாம் அறியாமலும்,
நாவலைப் படித்தே பார்க்காமலும், பல சூத்திர அன்பர்கள்
பெருமாள் முருகனை ஆதரித்து, தீராத களங்கத்தைத்
தேடிக் கொண்டனர்.

13) சூத்திரப் பெண்கள் மீதான களங்கம், அப்படியே நீடிக்கிறது.
பெருமாள் முருகனின் நாவலில் உள்ள தவறான கருத்துகள்
நீக்கப் படும் வரை, போராட்டம் தொடர வேண்டும்.

14) பெருமாள் முருகன் ஒரு குட்டி முதலாளித்துவ
அற்பவாதி. பார்ப்பன அடிவருடி.சூத்திரத் துரோகி.
கார்ப்பொரேட்  கைக்கூலி.அந்நிய நிறுவனங்களின்
எச்சில் காசைப் பெற்றுக் கொண்டு சொந்த சமூகத்தையே
காட்டிக் கொடுக்கும் ஈனப் பிழைப்புவாதி.

15) கேடுகெட்ட பார்ப்பனீயத்தை புனிதமானதாகச்
 சித்தரிக்கும் "வேள்வி(!)யை மேற்கொண்டுள்ள
மோசடி நிறுவனம் காலச்சுவடு.தமிழனை, சூத்திரனை
இழிவு செய்வதையே குலத்தொழிலாகக் கொண்டது
காலச்சுவடு. இதற்கு பெருமாள் முருகன் போன்ற
கோடரிக் காம்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறது காலச்சுவடு.

16) பெருமாள் முருகன் ஒன்றும் அப்பாவி அல்ல. காசுக்காக
ஆதாயத்துக்காக தெரிந்தே பார்ப்பனீயத்திடம் சோரம் போன
இழிவான நபர்தான் பெருமாள் முருகன்.

17) பெருமாள் முருகனுக்கு ஆதரவாகத் திரண்ட
சூத்திர மூடர்களைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கிறார்
காலச்சுவடு கண்ணன்.

18) சூத்திரன் என்றால் "தேவடியாள் மகன்" என்று
கூறுகிறது பார்ப்பனீயம். அது உண்மைதான் என்று
தமது நாவலில் வழிமொழிகிறார் துரோகி பெருமாள் முருகன்.  

 19) இந்த நாவலை அனுமதிக்கலாமா? மானமுள்ள
தமிழர்கள், மானமுள்ள சூத்திரர்கள் சிந்திக்க வேண்டும்.
இந்த ஒட்டுமொத்த விவகாரத்தில், கருத்துரிமை பறிப்பு
என்பதெல்லாம் ஒரு ரோமமும் இல்லை. பார்ப்பன
காலச்சுவடுவுக்கும், பார்ப்பன அடிவருடி பெருமாள் முருகனுக்கும்
இருக்கும் கருத்துரிமை பறிக்கப்பட வேண்டிய ஒன்றே.

               நாம் உணர்த்தும் நீதியை
               மறுப்பவர்க்கு இங்கு இடம் இல்லை.
                     ------ பாட்டாளி வர்க்க சர்வ தேசிய கீதம் ----------------

***************************************************************** ​​     
  

             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக