சனி, 20 டிசம்பர், 2014

வேதியல் நோபெல் பரிசு 2014 
பெரியார் திடலில் நடைபெற்ற 
அறிவியல் கூட்டம் 
-----------------------------------------------------------------------
 கடந்த 18.12.2014 வியாழன் அன்று, பெரியார் திடலில் உள்ள 
அன்னை மணியம்மை அரங்கில் அறிவியல் கூட்டம்
 நடைபெற்றது. 
        நியூட்டன் அறிவியல் மன்றத்தின் தலைவர்,
         தோழர் பி. இளங்கோ சுப்பிரமணியன் அவர்கள் 
"வேதியல் நோபெல் பரிசு 2014" ( CHEMISTRY NOBEL 
PRIZE 2014 ) என்ற தலைப்பில் உரையாற்றினார்.
POWER POINT PRESENTATION உடன் உரை 
அமைந்து இருந்தது. உரை கேட்டுச் சென்ற 
அனைவருக்கும் நியூட்டன் அறிவியல் மன்றம் 
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

சென்னையிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி 
அரசியல் கூட்டங்கள், ஆன்மிகக் கூட்டங்கள்,
இலக்கியக் கூட்டங்கள் ஆகியவை மட்டுமே 
நடைபெற்று வருகின்றன.அறிவியல் கூட்டம் 
போடுவதற்கு ஆள் இல்லை. பெரியார் நூலக 
வாசகர் வட்டம் மட்டுமே பொதுவெளியில் அறிவியல் 
கூட்டங்களை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.
பெரியார் நூலக வாசகர்  வட்டத்தின்   பணி 
போற்றுதலுக்கு உரியது.
............... நியூட்டன் அறிவியல் மன்றம்....................    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக