சனி, 27 டிசம்பர், 2014

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்காலம்?????
THE FUTURE OF CPI????
------------------------------------------------------------------ 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
------------------------------------------------------------------- 
               பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் 
               மெல்லப் போனதுவே 
                    -----பட்டினத்தடிகள்------

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொண்ணூறு 
வயது ஆகி விட்டது.(கட்சி தொடங்கப்பட்ட வருடம் 
1920ஆ 1925ஆ  என்ற சர்ச்சை இங்கு தேவையற்றது)
CPI  எனப்படும் இக்கட்சி நாடாளுமன்றத் தேர்தல் 
பாதையை மேற்கொண்ட கட்சி. ஆயுதப் போராட்டத்தில் 
நம்பிக்கை அற்ற கட்சி. புரட்சியைக்   கைவிட்ட கட்சி.
இக்கட்சிக்கு என்று ஆயுதப்படையோ படைக்குழுவோ 
எதுவும் கிடையாது. மாவோயிஸ்ட்டுகள் ( நக்சல்பாரிகள்) 
போல ஆயுதப் போராட்டம் நடத்தும் கட்சி அல்ல இது.
மகாத்மா காந்தியின் அஹிம்சை முறையில் நம்பிக்கை 
கொண்ட, தேர்தல் பாதையைப் பின்பற்றும் ஒரு கட்சி.
அந்த வகையில், (repeat அந்த வகையில்) காங்கிரஸ், பாஜக,
திமுக, அண்ணா  திமுக, மதிமுக  போன்ற ஒரு அப்பட்டமான 
முதலாளித்துவக் கட்சிதான் இது. (  CPM எனப்படும் மார்க்சிஸ்ட் 
கட்சியும் இக்கட்சி போன்றே தேர்தல் பாதையைப் 
பின்பற்றும் ஒரு முதலாளித்துவக் கட்சி தான் என்பது 
இங்கு   கணக்கில் கொள்ளத் தக்கது )

CPI கட்சிக்கு இன்று (AS OF NOW ) மக்கள் மத்தியில் 
என்ன செல்வாக்கு உள்ளது என்பதை ஆதாரத்துடன் 
பார்ப்போம் அதற்கு முன்னதாக, பின்வரும் விவரங்களை 
மனத்தில் பதித்துக் கொள்வது அவசியம்.

1) இந்திய மக்கள் தொகை 125 கோடி.
2) அண்மையில் ஏப்ரல்-மே 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 
   தேர்தல் ஆணையம் அறிவித்த வாக்காளர்களின் 
   எண்ணிக்கை 81.4 கோடி 
3)  பதிவான வாக்குகள்: 66.38 % . சிறப்பான வாக்குப் பதிவு.
4)  இந்திய நாடாளுமன்ற மக்களவையின் (லோக்சபா)
     மொத்த உறுப்பினர் எண்ணிக்கை: 543 
5) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி: மொத்த நாடாளுமன்றத் 
    தொகுதிகள்: 40 ( தமிழ்நாடு:39, புதுவை:1 )
6) தமிழ்நாடு மொத்த வாக்காளர் எண்ணிக்கை:
     5,50,42,876 அதாவது ஐந்தரைக்கோடி.

மேற்கண்ட விவரங்களை மனத்தில் இருத்திக் 
கொண்டீர்கள் அல்லவா! இப்போது தேர்தல் முடிவுகளின்படி,
CPI எனப்படும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கைப் பரிசீலிப்போம்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் CPI கட்சி ஒரே ஒரு இடத்தை
மட்டும் பெற்று இருக்கிறது. 543 இடங்களில் ஒரு இடம் . 
ஒரே ஒரு இடம் நூற்றுக் கணக்கான இடங்களில் போட்டி இட்டு 
ஒரே ஒரு இடத்தை மட்டும் பெற்று இருக்கிறது..   
543இல் 1 என்பது 0.0018 சதவீதம். 
ZERO POINT ZERO ZERO ONE EIGHT PERCENT!!!
எவ்வளவு கேவலம்!எவ்வளவு கேவலம்!!
அகில இந்தியக் கட்சி என்ற அந்தஸ்தை CPI கட்சி 
இழந்து விட்டது. (அகில இந்தியக் கட்சி என்ற அந்தஸ்தைப் 
பெற 11 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று 
இருக்க வேண்டும். அந்த 11 இடங்களும் குறைந்தது மூன்று 
மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட இடங்களாக
இருக்க வேண்டும்.)

அகில இந்தியக் கட்சி அந்தஸ்து பறி  போய் விட்டது 
என்பதன் பொருள் என்ன? கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் 
சின்னமான கதிர் அரிவாள் சின்னம் பறி போய் விட்டது 
என்று பொருள்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் 8 இடங்களிலும் 
புதுவையில்  ஒரு இடத்திலும் என்று மொத்தம் 9 இடங்களில் 
போட்டி இட்டது CPI  . இந்த 9 இடங்களிலும் தோற்றது; 
டெப்பாசிட் தொகையை இழந்தது.    

புதுச்சேரியில் போட்டியிட்ட CPI வெறும் 12709 (REPEAT 12709)
வாக்குகளை மட்டும் பெற்றது. நோட்டாவுக்கு இத்தொகுதியில் 
கிடைத்த வாக்குகள்: 23598 (REPEAT 23598). நோட்டாவை விடக் 
குறைவாக வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சி இத்தொகுதியில் 
CPI தான் என்பது கூடுதல் கேவலம்!

திருவள்ளூர் தனித் தொகுதியில் போட்டி இட்ட இக்கட்சி 
13794 (REPEAT 13794 ) வாக்குகளை மட்டும் பெற்றது.இங்கும் 
நோட்டாவை விடக் குறைவாகவே வாக்குகள் பெற்றது.
இங்கு நோட்டாவுக்கு 23598 ( REPEAT 23598 ) வாக்குகள் 
கிடைத்தன. மிகக் குறைவான வாக்குகளை, 11122 
(REPEAT 11122 ) கடலூர் தொகுதியில் பெற்றது இக்கட்சி.
சற்றேறக் குறைய 13 லட்சம் வாக்குகளை உடைய 
கடலூர் தொகுதியில் இக்கட்சி பெற்ற வாக்குகள் 
11122, அதாவது 11 ஆயிரம்தான். 

இக்கட்டுரையைப் படிக்கும் வாசகர்கள் CPI கட்சி 
பெற்ற வாக்குகளை வைத்து , மக்கள் கம்யூனிசத்தை 
விரும்பவில்லை என்று முடிவுக்கு வந்து விடக் கூடாது. 
மக்கள் இன்னும் கம்யூனிசத்தைத்தான் விரும்புகிறார்கள்.
வேறு தத்துவத்தை அவர்கள் நாடவில்லை. ஆனால், CPI 
கட்சி என்பது போலிக் கம்யூனிஸ்ட் கட்சி என்று அவர்கள் 
புரிந்து வைத்து இருக்கிறார்கள்.

"கம்யூனிசம் வாழ்க! ஆனால், போலிக் கம்யூனிஸ்ட்டுகள் 
ஒழிக " என்பதே மக்களின் உள்ளக் கிடக்கை!

எனவே நண்பர்களே, 
CPI எனப்படும் இந்த "இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி"
இன்னமும் இருக்கத்தான் வேண்டுமா?
கம்யூனிசத்தின் நலன் கருதி, இக்கட்சி 
கலைக்கப்பட வேண்டாமா? குறைந்தபட்சம் இன்னொரு 
போலி கம்யூனிஸ்ட் கட்சியான, ஒப்பீட்டு ரீதியாக 
(COMPARATIVELY ) அளவில் பெரிய CPM எனப்படும் 
"மார்க்சிஸ்ட்" கட்சியுடன் இணைக்கப் பட  வேண்டாமா?

போலிக் கம்யூனிஸ்ட் கட்சியான CPI கட்சியின் 
அன்பர்களே, இனிமேலும் தனியாகக் கட்சி 
நடத்தி என்ன சாதிக்கப் போகிறீர்கள்? ஒன்று, உங்கள் 
கட்சியைக் கலைத்து விடுங்கள். அல்லது CPM கட்சியுடன் 
உங்கள் கட்சியை இணைத்து விடுங்கள். அப்போதுதான் 
டெப்பாசிட்டாவது மிஞ்சும்!    

****************************************************************
  

1 கருத்து:

  1. CPM 2014 தேர்தலில் தமிழகம் முழுக்க பெற்ற வாக்குகள் 220614 (9 தொகுதிகளில்). சிபிஐ 219866 வாக்குகள் பெற்றது (8 தொகுதிகளில்) ஆகவே வாக்கு சதவீதத்தில் CPI கட்சி தான் முந்துகிறது. ஆகவே cpm கட்சியை CPI உடன் இணைத்து விடுங்கள்.

    பதிலளிநீக்கு