திங்கள், 29 டிசம்பர், 2014

பகுத்தறிவாளர்களே, கம்யூனிஸ்ட்களே,
ஹெச்.ராஜாவைத் தாக்குவது நியாயம் அல்ல!
--------------------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
--------------------------------------------------------------------
தமிழக பாஜகவின் தலைவர்களுள் ஒருவர் ஹெச்.ராஜா.
இவரது செல்வாக்கு எவ்வளவு இருக்கிறதோ, அதைப் 
பொறுத்துத்தான் அவர் மீதான தாக்குதலும் இருக்க வேண்டும்.
ஆனால் அப்படி இல்லை. அவரின் மக்கள் செல்வாக்கை விடப்
பல மடங்கு அதிகமாக அவர் மீது தாக்குதல் தொடுக்கப்
படுகிறது. இது நியாயம் அல்ல. ஏனெனில் இது நமக்கு 
ஆதாயம் தருவது அல்ல . எப்படி என்பதைப் பின்வரும் 
புள்ளி விவரம் சொல்லும்.

2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவு:
------------------------------------------------------
தொகுதி: சிவகங்கை 
மொத்த வாக்குகள்:    14,10,287 
பதிவான வாக்குகள்: 10,27,058

செந்தில்நாதன் (அதிமுக):     4,60,666
துரைராசு (திமுக):                     2,39,780
ஹெச் ராஜா (பாஜக):               1,30,815
கார்த்தி சிதம்பரம் (காங்):        1,01,925
கிருஷ்ணன் (கம்யூனிஸ்ட்):    19627
தமிழ் அரிமா (ஆத்மி):                   2082
நோட்டா  (NOTA ):                           7889

இத்தொகுதியில்  அதிமுக வெற்றி பெற்றது.
ஹெச் ராஜா டெப்பாசிட் இழந்தார்.
டெப்பாசிட் பெறுவதற்கு, பதிவான வாக்குகளில் 
ஆறில் ஒரு பங்கு பெற வேண்டும்.இதன்படி, 
1,71,176 வாக்குகள் பெற்றால் மட்டுமே டெப்பாசிட் 
கிடைக்கும். ஹெச்.ராஜ மேலும் 40361 வாக்குகள் 
பெற்று இருந்தால் மட்டுமே, அவர் டெப்பாசிட் 
பெற்று இருப்பார்.பாவம், இன்னும் நாற்பதாயிரம் 
வாக்குகளுக்கு அவர் எங்கே போவார்?

ஆக, இதுதான் ஹெச் ராஜாவின் ஐவேஜு.   
இவ்வளவுதான் மக்கள் மத்தியில் அவருக்கு 
இருக்கும் "செல்வாக்கு".

இப்படிப்பட்ட ஒருவரை, ஏதோ மாபெரும் மக்கள் தலைவர் 
போலக் கருதி எதிர்ப்பதால் யாருக்கு ஆதாயம்?
அவருக்குத் தான்.

ஒரு பழைய திரைப்படத்தில், வில்லன் நடிகர் பி.எஸ். 
வீரப்பா பேசும் வசனம் ஒன்று உண்டு.
"நீ திட்டத் திட்டத் தித்திக்கிறதடி  என் கண்ணே" என்று. 
அது போல, நாம் தாக்கத் தாக்க, அவருக்கு பாப்புலாரிட்டி 
அல்லவா கூடிக் கொண்டு போகும்!

"கண்டனம் அறிமுகத்தின் அடையாளம்" என்று ஓர்
பழமொழி உண்டு. அதைப் போல, அவர் மீதான 
கண்டனங்கள் அதிகரிக்க அதிகரிக்க, அவருக்குச் 
செல்வாக்கு பெருகிக் கொண்டு போக நாம் 
இடம் தருதல் கூடாது. 

ஹெச்.ராஜ ஒன்றும் பிரதான வில்லன் அல்ல. வெறும் 
இரண்டாம் நிலை வில்லன்தான் (SUPPORTING VILLIAN ACTOR ).    
அப்படியானால், ஹெச் ராஜ என்ன சொன்னாலும் 
பொறுத்துக் கொண்டுதான் போக வேண்டுமா?
அப்படி அல்ல. விரலுக்கு ஏற்ற வீக்கம் என்பது போல 
அவருக்குக் காட்டும் எதிர்ப்பு, அவருக்கு இருக்கும் 
செல்வாக்குக்கு நேர் விகிதப் பொருத்தத்தில் இருக்க 
வேண்டும். 

பகுத்தறிவாளர்களே, கம்யூனிஸ்ட்களே, திமுக அன்பர்களே, 
கி.பி. 3014இல் கூட சிவகங்கை  தொகுதியில் டெப்பாசிட் பெற 
முடியாத அவரை, டெப்பாசிட் பெற வைத்து விட வேண்டாம் என்று 
நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.  

ஹெச் ராஜ ஒரு மண்ணுளிப் பாம்பு!
மலைப்பாம்பு அல்ல!!
எனவே, IGNORE HIM. BOYCOTT HIM.
DONT ATTACK HIM DISPROPORTIONATELY!

***********************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக