புதன், 17 டிசம்பர், 2014

குழந்தைகளைக் கொன்ற பயங்கரவாதிகள் 
இந்த பூமியில் வாழத் தகுதியற்றவர்கள்!
-------------------------------------------------------------------- 
பி. இளங்கோ சுப்பிரமணியன் 
------------------------------------------------------------------------------------------  

1) பாக்கிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள ஒரு 
பள்ளியில் புகுந்து 132 குழந்தைகள் உட்பட 
மொத்தம் 141 பேரைச் சுட்டுக் கொன்று இருக்கிறார்கள் 
பயங்கரவாதிகள், 16.12.2014 அன்று.

2) மனிதகுலமே வெட்கித் தலைகுனிகிற இந்த 
மாபாதகச் செயலைச் செய்தவர்கள் பாக்கிஸ்தான் 
தலிபான்கள்.தெஹ்ரீக்-இ -தலிபான் ( Tehreek-e-Taliban) 
என்கிற பாக்கிஸ்தானில் செயல்படும் பயங்கரவாதிகளே 
இப்படுகொலைகளைச் செய்தவர்கள்.இந்தப் 
படுகொலைகளுக்கு அவர்கள் பெருமையுடன் 
பொறுப்பேற்றுக் கொண்டு உள்ளார்கள். 

3) சுட்டுக் கொல்லப்பட்ட குழந்தைகள் அனைவரும் 
பதினாறு வயதுக்கு உட்பட்டவர்கள்.

4) 250 குழந்தைகள் காயம் அடைந்து உள்ளனர்.

5) பள்ளியின் பெண் ஆசிரியை ஒருவர் நாற்காலியோடு 
சேர்த்துக் கட்டப்பட்டு  உயிரோடு தீ வைத்துக் கொளுத்தப் 
பட்டுள்ளார்.

6) குழந்தைகளை இழந்த பெற்றோரின் துயரில் 
நாமும் பங்கு கொள்கிறோம்.

8 ) குரூரமும் கொடூரமும் நிறைந்த இந்த பயங்கரவாதச் 
செயலை வார்த்தைகளால் கண்டிப்பது பயன் தராது.    
உறுதி வாய்ந்த வைரம் பாய்ந்த செயல்பாடுகளால் 
பயங்கரவாத தலிபான்களை அழித்து ஒழிப்பது ஒன்றே வழி.

9) பயங்கரவாதிகளை நேரடியாக ஆதரிப்பவர்கள் 
மட்டுமின்றி மறைமுகமாகவும் பூடகமாகவும் 
ஆதரிப்பவர்களும் கூட தண்டிக்கப்பட வேண்டியவர்களே. 

10)  ஆப்கானிஸ்தானில் செயல்படும் தலிபான்களின் 
பயங்கரவாதச் செயல்களைக் கருப்பொருளாகக் கொண்டு    
விஸ்வரூபம் என்ற ஒரு படத்தை கடந்த ஆண்டு 
கமலஹாசன் எடுத்தார். அந்தப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 
கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது. அந்தப் படத்தில் 
கமலஹாசன் சித்தரித்த அனைத்தும் உண்மை என்பதை 
பெஷாவார் பயங்கரவாதிகள் நிரூபித்து உள்ளனர். 
அந்தப் படத்தை எதிர்த்தவர்கள் தலைகுனிந்து நிற்க 
வேண்டிய அவலத்தை பெஷாவர் தலிபான்கள் 
உருவாக்கி உள்ளனர். 

11) பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை. இதை   உணர 
மறுப்பது ஆபத்தாக  முடியும்.

12) பெஷாவர் பயங்கரவாதிகள் இதை 
புனிதப்போர் (ஜிஹாத்) என்கிறார்கள்.
இதன் மூலம், அவர்கள் தங்கள் பின்பற்றும் மதத்துக்குக் 
கேடு விளைவிக்கிறார்கள்; பழி  ஏற்படுத்துகிறார்கள். 

13) மதத்தின் உண்மையான விசுவாசிகளால் 
இந்த தலிபான் பயங்கரவாதிகள் கருவறுக்கப் 
படுவார்கள். மானுடம் வெல்லும் என்பதில் நம்பிக்கை 
கொள்வோம். 

*************************************************************   



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக