திங்கள், 4 செப்டம்பர், 2017

மதியம் 12 மணி ராகு காலத்திற்கு முன்
06.09.2017 புதன் காலை காஞ்சி சங்கர மடத்தில்
நீட் எதிர்ப்பு
போராளிகளுக்கு பணம் பட்டுவாடா!
மடத்து காரியஸ்தர் சுந்தரேச ஐயர் அறிவிப்பு!

புதன் கிழமை 12  மணிக்கு ராகு காலம் வருவதால்,
அதற்கு முன்பே பணப்பட்டுவாடாவை முடிக்க
சுந்தரேச ஐயர் உறுதி பூண்டுள்ளார்.பட்டுவாடா
நிகழ்ச்சியில் பச்சமுத்து பங்கேற்கிறார்.


இதற்கான ஆதாரம் இல்லாமல் இச்செய்தியை
வெளியிட முடியாது. பொய்யான செய்தியை வெளியிட்டால்.
சங்கராச்சாரி ஜெயேந்திரரின் ஆட்கள் என் மீது
அவதூறு வழக்கு போட்டு விடுவார்கள். உங்களின்
பாமரத்தனம் காரணமாக உங்களால் பல்வேறு
போலி அரசியல்வாதிகளின் பித்தலாட்டத்தை எல்லாம்
தியாகமாக எண்ணிக் கொண்டிருந்தால், உங்களின் நிலை
பரிதாபத்துக்கு உரியது.
**
அடுத்து, இதற்கு முன்பு ஜூன் 2017இல் ஜெயேந்திரரிடம்
பணம் வாங்கியவர்களை ஆதாரத்துடன் வெளியிட்டு
உள்ளேன். இன்று வரை பணம் வாங்கியவன் அதை
மறுக்கவில்லை. எனது பழைய பதிவுகளை பார்க்கவும்.
**
அடுத்து வார்த்தைகளை அளந்து பேசுங்கள்.
நான் 124ஏ சட்டப் பிரிவில் ஜெயிலில் இருந்தவன்.
பல்வேறு முறைகள் கைதாகி, விடுதலையாகி,
தொழிற்சங்க வாழ்க்கையில் பல்வேறு அடக்குமுறைகளை
சந்தித்தவன். கேவலம் ஒரு குட்டி முதலாளித்துவ மதவெறி
நாய் என்னிடம் வாலாட்டினால், தலை இருக்காது.  


ஜெயேந்திரர் தலைமையில் அனைத்து கல்வித்
தந்தைகளும் (JPR, பச்சமுத்து, பங்காரு அடிகள் etc etc)
ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள். நீட் தேர்வு
காரணமாக, இன்று 80 சதத்திற்கும்  மேற்பட்ட
MBBS, BDS இடங்கள் காலியாக உள்ளன. நீட் இல்லாதபோது
70 லட்சம் முதல் 1 கோடி வரை பணம் வாங்கிக்
கொண்டு, குறைந்த மதிப்பெண் எடுத்த பல பணக்காரப்
பையன்களுக்கு சீட் கொடுத்து சம்பாதித்த கூட்டம் இது.
வேந்தர் மூவிஸ் மதன் விவகாரம் நினைவுக்கு
வருகிறதா? பச்சமுத்து எதற்காக கைது செய்யப்
பட்டார்? எல்லாம் MBBS அட்மிஷன் கொள்ளைதானே!
**
நீட் காரணமாக விரும்பியவர்களுக்கு சீட் கொடுக்க
முடியாமல், சுரண்டலும் கொள்ளையும் பாதிக்கப்
பட்டு விட்டன. எனவே சுயநிதிக் கல்வித் தந்தைகள்
நிட்டை எதிர்க்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில்
நீட் வந்தபோது 115 சுயநிதிக் கல்வித் தந்தைகள்
வழக்கு  தொடுத்தார்கள்.

ஜெயலலிதா சசிகலா நடத்திய ஒரு மருத்துவக்
கல்லூரியின் கட்டணக் கொள்ளையை எதிர்த்து
உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம்
வரை சென்று கட்டணக் கொள்ளையை முறியடித்தவன்
நான். நளினி சிதம்பரம் அவர்கள்தான் எனது
வழக்கறிஞர். இதனால் பயன் பெற்றது சுமார் 80
மாணவ  மாணவிகள். இது 12 ஆண்டுகளுக்கு முன்பு
நடந்தது. அன்று ஜெயலலிதாவை எதிர்க்கும்
தைரியம் என்னைத் தவிர யாருக்கு இருந்தது?


நீட் என்பது துறை சார்ந்த அறிவு உடையவர்கள்
கருத்துக் சொல்ல வேண்டிய விஷயம். குட்டி
முதலாளித்துவ நபர்கள் தாறுமாறாக உளறினால்,
அப்புறம் தலை கழுத்தின் மீது இருக்காது.


NEET  has become a fait accompli.
Anti NEET propaganda is irrelevant now.
So don't cheat the students. Don't cause depression
among the students. Don't drive them to suicide.

aiyaa
ஐயா,
சுயநிதிக் கல்வித் தந்தைகள்  என்பவர்கள் பணம்
படைத்தவர்கள். ஒரு மருத்துவக் கல்லூரி என்பது
சுமார் ரூ 100 கோடி முதலீட்டைக் கோருவது. எனவே
பெரும் முதலாளிகளே மருத்துவக் கல்லூரிகளைத்
தொடங்க முடியும். அவர்களின் கொள்ளைக்கு நீட்
தேர்வு ஒரு முட்டுக் கட்டையாகி விட்டது. எனவேதான்
கல்வித் தந்தைகள் நீட்டை எதிர்க்கிறார்கள்.
**
பச்சமுத்து ஏன் கைது செய்யப் பட்டார்?
வேந்தர் மூவிஸ் மதன் ஏன் கைது செய்யப் பட்டார்?
எனவே எமது வாதத்தில் எந்த விசித்திரமும் இல்லை.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக