திங்கள், 18 செப்டம்பர், 2017

மயிலாடுதுறையில் புஷ்கர பூஜை செய்து
பெரியாருக்கு மரியாதை செய்த துர்கா ஸ்டாலின்!
படுதோல்வி அடைந்த இந்து முன்னணி ராமகோபாலன் 
நாணித் தலைகுனிந்தார்!
-----------------------------------------------------------------------------------------
1) தந்தை பெரியார் பிறந்த நாளான இன்று (17.09.2017)
மயிலாடுதுறையில் காவிரியாற்றில் நடைபெற்ற
புஷ்கர பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்தார்
மாண்புமிகு துர்கா ஸ்டாலின் அம்மையார் அவர்கள்.

2) தாமே முன்னின்று புஷ்கர பூஜை செய்தார் துர்கா
ஸ்டாலின் அம்மையார்.

3) குரு பகவான் ஒவ்வோராண்டும் ஒரு ராசியில்
இருந்து இன்னொரு ராசிக்கு சஞ்சாரம் செய்யும்போது
புஷ்கர பூஜை நடைபெறும். இது மிகப்பெரும் ஆன்மிகத்
திருவிழா ஆகும்.

4) இந்த புஷ்கர பூஜையில் இந்து முன்னணி ராமகோபாலன்
கலந்து கொள்ளாத நிலையில், துர்கா ஸ்டாலின்
கலந்து கொண்டது ஹெச் ராஜாவை நாணித்
தலைகுனிய வைத்துள்ளது.

5) ஒவ்வொரு ஆண்டும் திமுக வழங்கும் பெரியார்
விருது யார் யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்று
தீர்மானிக்கக்கூடிய இடத்தில் துர்கா ஸ்டாலின்
இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
************************************************************       


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக