ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

மேட்டுக்குடி அஜீரணப் புரட்சி இயக்கமே மே 17!
பாம்பையும் திருமுருகனையும் கண்டால்
பாம்பை விட்டு விடு! திருமுருகனை அடி!
----------------------------------------------------------------------------------------
1) திருமுருகன் காந்தியின் மே 17 இயக்கம் படு மோசமான
ஒரு குட்டி முதலாளித்துவ இயக்கம். அகந்தை (ego)
நிறைந்த, எந்தத் தத்துவத்தையும் ஏற்றுக் கொள்ளாத
குட்டி முதலாளித்துவ புகழ் விரும்பிகள் நிறைந்த ஒரு
அற்பமான .சிறிய இயக்கம் அது.

2) இவர்கள் வேலை செய்யும் களம் முகநூல், டிவிட்டர்,
மின்னஞ்சல் ஆகியனவே. முகநூலே மே 17ன் பலம்
என்கிறார் திரு உமர். இவர் திருமுருகனின் முன்னாள்
கூட்டாளி ஆவார்.மெய்யான போராட்டக் களங்களில்
மக்களோடு மக்களாக நிற்பது என்ற சிந்தனையே
 திருமுருகனுக்கும் அவரின் இயக்கத்திற்கும் கிடையாது.

3) கூடங்குளம் உதயகுமாரை நாம் அறிவோம். அவரின்
நிலைபாடுகளுடன் நாம் முரண்பட்டாலும், ஆண்டுக்
கணக்கில் இடிந்தகரையில் மக்களோடு மக்களோடு
களத்தில் காலூன்றி நின்றவர் அவர்.
உதயகுமாரைப்போல், களத்தில் மக்களோடு
மக்களாக நிற்பவர் அல்லர் திருமுருகன்.
மாறாக மேனாமினுக்கி அரசியலில் திளைப்பவர். .

4) மே 17 இயக்கம் ஒரு குடிகார இயக்கம். அங்குள்ள
அனைவருமே (அநேகமாக ) குடிகாரர்கள்தான்.
ஆண் பெண் வேறுபாடின்றி குடிப்பது இவ்வியக்கத்தின்
பண்பாடு. இதற்கு அவ்வியக்கத்தின் முக்கியப்
பிரமுகரான திரு உமர் அளித்த ஒப்புதல் வாக்குமூலமே
சான்று.

5) திரு உமர் கூறுகிறார்:
"ஜெர்மனியில் இருந்து நாங்கள் திரும்பி வரும்போது,
வளர்மதிக்கு சாராயம் வாங்க வேண்டி, வளர்மதியை
அழைத்து, ஒவ்வொரு சாராய பாட்டிலையும் படித்துக்
காண்பித்து, எதை வாங்க வேண்டும் என்று கேட்டு,
வளர்மதி சொன்ன சாராயத்தை வாங்கி வந்தார்
திருமுருகன்.பிறகு 2013இல் நாங்கள் டெல்லியில்
தங்கி இருந்தபோது, வளர்மதியும் அறையில் தங்கி
இருந்தபோது, வளர்மதி குடித்திருந்தார்."
(ஆதாரம்: திரு உமர் எழுதிய 423 பக்க கடிதம்;
நான் ஏன் மே 17 இயக்க உறுப்பினர் இல்லை?
பக்கம்-18. பத்தி-43) (நன்கு கவனிக்கவும்: திரு உமர்
குறிப்பிடும் குடிகார வளர்மதி மே 17 )இயக்கத்தவர்)

6) ஆக மே 17 இயக்கம் ஒரு மேட்டுக்குடி இயக்கம்.
அடிக்கடி விமானத்தில் வெளிநாட்டுப் பயணம்,
வெளிநாட்டில் தங்குவது, வெளிநாட்டு மதுவகைகளை
அதிக விலை கொடுத்து வாங்கி, இந்தியாவுக்குக்
கொண்டு வந்து, புது டில்லியில் ரூம் போட்டு,
ஆணும் பெண்ணும் சேர்ந்து தண்ணி அடிப்பது
ஆகியவையே மே 17 இயக்கத்தின் புரட்சிகரச்
செயல்பாடுகள்.

7) இவ்வியக்கத்தின் முக்கியப்
பெருந்தலைகளான அ) லேனா ஆ) வளர்மதி
இ) மனோஜ் ஆகியோர் பெருங்குடிகாரர்கள்.
இங்கு கவனிக்க வேண்டியது: ஓல்ட் மான்க் அல்லது
Mc (மாக் ட்வெல்) போன்ற மட்ட ரகமான சரக்கை
வாங்கி, சைட் டிஷ் வாங்க காசு இல்லாமல்,
50 பைசா ஊறுகாயை நாக்கில் தடவிக் கொண்டு,
90ஐ அடிக்கும் (குவார்ட்டரில் பாதி 90 என்று அறிக)
ஏழை எளிய மக்கள் குடிப்பதைப் போன்றதல்ல
திருமுருகன் வகையறாக்கள் குடிப்பது.
இவர்கள்  வாங்கும் ஒரு FULL பாட்டிலின் விலை
குறைந்தது ரூ 20,000 இருக்கும். மே 17ன் புரட்சி
என்பது மேட்டுக்குடியின் அஜீரணப் புரட்சி.

8) திரு உமர் மேலும் கூறுகிறார்:
"இனி குடிப்பதைப் பற்றி, குடிக்க வேண்டியதன்
அவசியத்தைப் பற்றி, எப்படிக் குடிக்க வேண்டும்
என்பது பற்றியும் பல்வேறு கட்டுரைகள்
வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை."
(ஆதாரம்: மேற்படி ஆவணம், பத்தி-41, பக்கம்-18).

9) உண்டியல் குலுக்கி, அதில் வருகிற காசில்
1க்கு 8 பிட் நோட்டிஸ் போட்டு தெருமுனைக் கூட்டம்
போடுகிற மஜஇகவினரை நான் அறிவேன்.
(மஜஇக என்பது நக்சல்பாரிகளின் வெகுஜன அமைப்பு).
கைநிறையச் சம்பளம் வாங்கும் அரசு உத்தியோகத்தில்
இருந்தும், கட்சி வேலைக்காக, LOSS OF PAYயில் லீவு
எடுத்து, பசி வயிற்றைக் கிள்ள, உண்டியல் குலுக்கி
கிடைத்த காசில், தெருவோரக் கடையில், இட்லி
வாங்கிப் பசியாறிய பல்வேறு மார்க்சிய
லெனினிஸ்டுகளின் பெயர்களை, இக்கட்டுரையாளர்
உட்பட.என்னால் பட்டியலிட முடியும்.

10) நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் கண்ணாமணியை
மேனனின் போலீசு போலி என்கவுண்டரில் கொன்றபோது,
திருப்பரங்குன்றத்தில் வக்கீல் அய்யாத்துரையை
மேனனின் போலிசு அடித்தபோது, 1980 அல்லது 1981ல்)
"திருப்பத்தூரில் இருந்து திருப்பரங்குன்றம் வரை"
என்ற தலைப்பில், கட்சிக் ,கட்டளைப்படி, நான் ஒரு
அறிக்கை தயாரித்தேன். அதை அச்சடித்துக் கொடுக்க
எந்த அச்சகமும் முன்வராத நிலையில், தொழிற்சங்கப்
பயன்பாட்டுக்காக என்னிடம் இருந்த, கையால்
உருட்டும் சைக்ளோஸ்டைல் எந்திரத்தில் அதை
அச்சடித்தேன். அதற்கு பேப்பர் வாங்க காசில்லாமல்,
என் கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தை
மார்வாடியிடம் அடகு வைத்து ரூ 20 வாங்கி, அந்தக்
காசில் பேப்பர் வாங்க நேர்ந்தது. இதுதான் பாட்டாளி
வர்க்கச் செயல்பாடு. (அப்போது மார்வாடிகள்
கைக்கடிகாரத்தை அடகு பெற்றுக் கொள்வார்கள்) 

11)சர்ரு புர்ரென்று நினைத்த நேரத்தில் ஜெட்
விமானத்தில் பறக்க வேண்டும்; டெல்லியில்
 உயர்ந்த ரக விடுதியில் ரூம் எடுத்துத் தங்க
வேண்டும் (கரோல்பாக்கில் கூட சிங்கிள் ரூம்
ஒரு நாளைக்கு ரூ 10,000), வெளிநாட்டு மது பானம்
அருந்த வேண்டும். இவையெல்லாம் மேட்டுக்குடி
மே 17 இயக்கத்தின் செயல்பாடுகள்.

12) திருமுருகன் புரட்சியாளர் என்றால், மார்க்சிஸ்டு
லெனினிஸ்டுகள் எல்லாம் யார்? அவர்கள் என்ன
பூர்ஷ்வாக்களா?

13) 2014 நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவை எதிர்த்து
தேர்தல் பரப்புரை செய்வது என்ற முடிவை திருமுருகன்
எப்படி செயல்படுத்தினார் என்று தெரியுமா?
பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிட்ட கன்னியாகுமரி
தொகுதி பக்கமே திருமுருகனோ மே 17 ஆசாமிகளோ
தலைகாட்டவில்லை. அணுஉலை எதிர்ப்புப்
போராளியாக தன்னைச் சித்தரிக்கும் திருமுருகன்
கூடங்குளம் உதயகுமார் போட்டியிட்ட அதே கன்னியாகுமரி
தொகுதியில் உதயகுமாரை திருமுருகன் ஆதரித்தாரா?
இல்லை. திருமுருகன் பாஜக பொன்னார்ஜியின் கையாள்.
திருமுருகனுக்கு வர வேண்டிய பணத்திற்கு
ஏற்பாடு செய்து கொடுத்தவரே பொன்னார்ஜிதான்.
இதுதான் திருமுருகனின் பாஜக எதிர்ப்பின் லட்சணம்.

14) இக்கட்டுரையில் கூறப்பட்ட உண்மைகளை
 எவராலும் மறுக்க இயலுமா? ஒருபோதும் இயலாது.
(தொடரும்)
****************************************************************** 
  
            
                       

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக